வாழ்க்கையில் சூடு பட்ட நெஞ்சமும்
டீயால் சூடு பட்ட நாக்கும்
சுவைகளை அறிய முற்படுவதில்லை!!
ஆவின் கண்கள் இவ்வளவு அழகா என்று
ஆவென்று வாயை பிளந்து வியந்தால்
அது Bulls Eye!!
பருப்பு வெந்து முடிந்த கையோடு
சூட்டோடு சூடாக மசித்து விட்டு
விடுதல் நலம் இல்லையேல்
எவ்வளவு திறமையாக சாம்பார்
வைத்தாலும் பருப்பு தனித்தனியாக
முழித்து கொண்டு தான் நிற்கும்…
படம் எடுத்து முடிந்த கையோடு
சூட்டோடு சூடாய் ரீலீஸ் ஆக
முடியாமல் தடை செய்யபட்டு பின்பு
வெளி வருகின்ற திரைபடங்கள் போல!!
இளமை கொப்பளிக்கும்
முகப்பருக்களுக்கு
பாதுகாவலாய்
கருப்பு பூனை படைகள்
.
.
.
.
.
.
Black Heads!!
நம்ம ஆசை ஆசையா
திருப்பி திருப்பி
எத்தனவாட்டி
கால் செய்தாலும்
ஃபோனை கையில
எடுப்பேனா என்று
அடம் பிடிப்பவர்
.
.
.
.
.
கேஸ் புக் செய்பவர்!!
எல்லாவற்றுக்கும் ஒரு நேரம்
ஒரு காலம் இருக்குது என்று
சொன்னால் புரியவா போகுது
.
.
.
.
.
பகலிலும் என்னை சுற்றி சுற்றி
கடிக்கும் மரமண்டை கொசுக்கள்!!