எண்ணங்கள் பலவிதம்

என் எண்ணங்களின் நீருற்று


10 பின்னூட்டங்கள்

சில எண்ணங்கள் -45

அப்பா : என்னடா.. பக்கத்து வீட்டில ஒரே ஆட்டம்,பாட்டம் ,

கொண்டாட்டம்னு ஒரே குதுகூலமா இருக்கு.. எதுவும் விசேஷமா??

பசங்க : ஆமா விஷேசம் தான்ப்பா… அவுங்க அப்பா ஊருக்கு போயிருக்காங்களாம்…

அப்பா : !!!!!

download

 

 

தெளிந்த பின்னே
மட்டுமே தெரியும்
இது நாள் வரை அடி
மனதில் எத்தனை
கசடுகள் என்று!!

matter-sedimentation

 

ஒரு திசை காட்டும் கருவி
ஒரு பூத கண்ணாடி
ஒரு கையடக்கமான
தீவட்டி வெளிச்சம்
மகனே…. நீ பள்ளிக்கு வரலாறு
படிக்க செல்கிறாயா இல்லை
வரலாறு படைக்கவா??
MagneticPencilbox

 

images

 

நிலை தட்டுமேயானால் தலை
குனிந்து செல்வது உத்தமம்….
நிலை தட்டு தடுமாறினால்
தலை குனிவு நிச்சயம்..

download (1)

 

இன்றாவது தன் மனதில்
உள்ளதை வாடிக் கிடக்கும்
பூமியிடம் கொட்டி விட
தீர்மானித்து மோடம் போட்டு
காத்து கிடக்குது வானம்!!

images (1)

 

 

பயிரிட்ட பின்னே
விதை விதையாக
முழித்து கொண்டு
நில்லாமல் விளைந்து
நிற்பதே தானியத்தின் சிறப்பு….
அஃதே வயிறிடுவதற்கு முன்பும்!

 

images (2)

நம்ம கிட்ட இருக்கிற
சிம்கார்ட கொண்டு போய்
ஏர்டெல்காரன் கிட்ட குடுத்தா
அதை வெட்டி மைக்ரோ சிம்கார்டா
ஆக்கி தருவானா அம்மா??
ஏலேய்.. அது என்ன ஆடா!
இல்லை.. சிம்கார்டா!!

airtel sim

 

இன்று அதிகாலை
நீ இருண்டு இறுக்கம்
கொண்டு என் மனதை
வானில் பறக்க விட்டு கண்கள்
பணிக்க செய்தது அத்தனையும்
நடிப்பா??????????
வருவது போல் வந்து பின்
வராது சென்ற மழை

images (3)

 

வீர தீரமாய் சுழன்றடிக்கும் சார காற்றே
உன்னுள் ஈரம் இல்லாதவரை உள்ளம் மயங்காது
உடல் சோர்ந்த மயக்கம் மட்டுமே சாத்தியம்!

1317239764_374060252671_35721797671_3848601_1699688_n

 

வெடிச் சிரிப்புடன் கைகளை
டாட்டா காட்டியவாரே வெளியே
ஓடும் குட்டி பையனை பிடிக்க பின்னங்கால்
பிடறியில் அவன் பின்னே ஓடுவாள்..
சற்று முன்னே அவன் சேட்டை
தாங்காமல் தர தரவென இழுத்து
வீட்டின் வெளியே விரட்டிய தாய்..

can-stock-photo_csp9703834

 

ஒருவரை நம்பி கை கொடுப்பதை விட
நம்பிக்கை அளிப்பது சாலச் சிறந்தது!!

charitable-giving

 

கவனிக்க மறந்து விடும் நேரங்களில் தனக்கு
தானே தூசியால் அரிதாரம் பூசி நம் கவனத்தை
கவர்ந்து விடுகிறது நம் வீட்டு சாமான்கள்!!

images (4)

 

அடுத்தவர் பொருளை
ரசித்து நோக்குவது சலனம்
உரிமம் கொள்ள நினைப்பது சபலம்..

images (5)

 

 


20 பின்னூட்டங்கள்

சில எண்ணங்கள் -44

யாதொரு இழப்பின் கொடுமையையும்
தாங்கி கொள்ள சிறு வயதிலிருந்தே
மனம் பழகி கொள்ளுகிறது நாம் ஊதிய
ஒவ்வொரு பலூன் உடையும் போதும்!!

படம்

உன்னால்
தலை முதல் கால் வரை
உருகுகிறேன்..
உன் தலை மறைந்த பின்பும்
மருகுகிறேன்..
இது எது வரையில் என்று
மருளுகிறேன்..
உன் குளிர் முக நினைவில்
வருந்துகிறேன்..
கோடை வெயில்!

படம்

எந்த ஒரு மருத்துவரை 
பார்க்க கூட்டம் கொள்ளே
கொள்ளே என்று நிற்கிறதோ
அங்கே யாரும் சொல்லாமலே
நாம் அறிந்து கொள்ளும் ரகசியம்
அங்கே கொள்ளையடிக்கப்படுவதில்லை!!

படம்

 

பெயர் என்னது??
ப்ளேசரா இல்லை..
பைஜாமாவா இல்லை..
குர்தாவா இல்லை..
ஐய்யோ என்ன பெயர்..
என்ன பெயர்..
ஆங்.. நியாபகம் வந்தது
ஷெர்வானி
ஒவ்வொரு தடவை கூப்பிட
நினைக்கும் போதும் மறந்து
தொலைக்கும் பக்கத்து வீட்டு
பெண்ணின் பெயர்!!

படம்

பார்த்த பின்னே ஏற்படும் 
பரவசத்தை விட பார்ப்பதற்கு 
முன்னே ஏற்படும் எதிர்பார்ப்புடன்
கூடிய பரவசமே கூடுதல் மகிழ்ச்சியை தருவது..

படம்

 

கொட்டுகிற அருவியில்
காட்டாற்று வெள்ளத்தை
கோர்த்து விட்டாற் போல்
கோடை காலத்து கடும்
வெயிலில் மின் தடையும்
கை கோர்த்து கொள்ள
ஊத்தி தள்ளுகிறது வியர்வை!!

படம்

 


6 பின்னூட்டங்கள்

சில எண்ணங்கள் -43

அதை பார்த்த முதல் நொடி
கண்களுக்கு நம்ப முடியாத
ஆச்சரியம் கலந்த இன்பம்..
ஒரு ஐந்து நிமிடம் கழிந்த
பின்னே அதை பார்க்கும் பொழுது
பேரதிர்ச்சி கலந்த துன்பம்..
சொல்லாமல் நின்று போய்
விட்ட சுவர் கடிகாரம்!!

படம்

எங்கள் பக்கத்து தெருவில்
நடந்த சண்டையை எட்டி
நின்று வேடிக்கை பார்க்கவோ
அவர்கள் எதற்காக சண்டை
இடுகிறார்கள் என்பதை அறியவோ
என்ன பேசி கொள்கிறார்கள் என்பதை
காதை தீட்டி கவனிக்கவோ எனக்கு
துளியும் விருப்பம் இல்லை..
அவ்வளவு நல்லவளா நீ… என்றால்
கண்டிப்பாக இல்லை தான் பின்னே
அவர்கள் தெலுங்கிலே அல்லவா
சண்டை இட்டு கொள்கிறார்கள்!!

படம்

ஒரு பெண் தன்னை தயார்
செய்து வெளியே கிளம்ப
எடுத்து கொள்ளும் நேரம்
அவள் வீட்டில் எத்தனை
முகம் பார்க்கும் கண்ணாடிகள்
இருக்கிறது என்பதை பொறுத்தது!!

படம்

நடுநிசியில் திடுக்கிட்டு விழித்தேன்
பசியில் வீறிட்ட பக்கத்து வீட்டு
குழந்தையின் அழுகுரல் கேட்டு…..
தாய்மை!!

படம்

கண்ட கனவு நிஜமாகும் போது
நான் காண்பது என்ன கனவா.. என்று
வியப்படைந்து சொல்லுவர் சிலர்..
நிஜமாகவே நடந்தாற் போல்
இருந்தது என்று வந்த கனவை
ஆச்சரியமுடன் விவரிப்பர் சிலர்..
இவ்விருவருக்கும் இடையே தோன்றும்
ஒரே ஒரு ஒற்றுமை இருவருமே
நிஜமாகவே கனவு கண்டிருக்கிறார்கள்!!

படம்


14 பின்னூட்டங்கள்

சில எண்ணங்கள் -42

இரண்டுக்கும் இடையே 
ஒரு ஒற்றுமை உண்டு..
இரண்டுமே குளிரை விரட்டி
சூட்டை வரவேற்பவை..
ஹோலி Vs கோழி!!

படம்

கிண்டிய அல்வா வாயில்
கோந்து ஆன கதைகள்
நிறைய கேட்டதுண்டு
வாய் விட்டு சிரித்ததுண்டு
ஆனால் நானே என் கையால்
முதன் முறையாய் சிரமப்பட்டு 
செய்த பீட் ரூட் அல்வாவை
வாயில் வைத்த போது என்னால் 
சிரிக்க முடியவில்லை ஏனெனில்
வாயை திறக்க முடிந்தால் தானே
வாய் விட்டு சிரிப்பதற்கு!!

படம்

டீவீ விளம்பரத்தில் ஒரு
பெண் கையில் வயர் மெஷ்ஷை
பிடித்தபடி சப்பாத்தியை
துளி கூட எண்ணெய் இல்லாமல் 
கும்முனு பூரி போல் எழும்ப செய்து
தட்டில் இடுவதை மிகுந்த
ஏக்கத்துடன் பார்த்த என் கணவர்
சந்தடி சாக்கில் என்னையும்
ஸ்க்ரீனையும் மாறி மாறி நோக்க
அவரை முழுதும் புரிந்தவளாய்
பதில் அளித்தேன்…
கவலைபடாதீர்கள்..
சீக்கிரமே பெண்ணை பேசி 
முடித்து விடலாம்!!

படம்

காத்திருக்கும் அறைகளில்
போடப்படும் ஒன்றோடு ஒன்று
இணைந்த இருக்கைகளில்
ஓரமான இருக்கையில் 
அமர்வதும் இலவசமாக
மானத்தை தண்டோரா 
போட்டு கப்பலில் ஏற்றுவதும்
ஏறக்குறைய ஒன்று தான்!!

படம்

நடு இரவு 2:30 மணிக்கு
விழிப்பு தட்டும் போது
முழுதாய் உறங்காமல்
பாதியில் எழுந்து விட்டோமே
என்ற மனக்குறையை விட
ஆஹா.. இன்னும் ரொம்ப 
நேரம் இருக்கிறது விடிய
என்ற சந்தோஷ எண்ணமே
மேலோங்குகிறது!!

படம்

யாரேனும் ஒருவர்
ஆரஞ்சு பந்து வாங்கி
வருகிறேன் என்று
ஆரஞ்சு பழம் வாங்கி
வந்தால் அவங்கதான்
ஆந்திராகாரர் தெரிஞ்சிகோ!!

படம்

 

நாங்க குடி இருக்கிற
வீட்டுக்கும் ராம்லீலா படத்தில்
வரும் தீபிகா படுகோனுக்கும்
நேற்று மதியத்தில் இருந்து
சரியாக இன்னும் இரண்டரை
மாதம் வரை ஒரு தவிர்க்க
முடியாத ஒற்றுமை உண்டு..

உஸ்………. அப்பா………
இரண்டுமே ரொம்ப ஹாட்!!

 படம்


13 பின்னூட்டங்கள்

சில எண்ணங்கள் -41

ஈயம் பித்தளைக்கு பேரீச்சம் பழம்
பீஎம் பதவிக்கு பேர் இச்சை பலம்!

படம்

எனக்கு பிடிக்காதவற்றை யாரேனும்
என்னை வாங்க வற்புறுத்தும் போது
அவர்கள் மனது நோகாமல் நானும்
சாமர்த்தியமாக அந்த இக்கட்டில்
இருந்து தப்பித்து கொள்ள சொல்லும்
பொறுத்தமான பொய்களில் ஒன்று..
‘என் கணவரிடம் கேட்காமல் நான்
எந்த ஒரு முடிவும் எடுப்பதே இல்லை..’

படம்

இப்பவே மனதில் உள்ளதை
சொல்ல நினைத்து முதலில்
ஒரு ஆச்சரிய குறியோடு
ஆரம்பித்து பின் இமைகள்
படபடக்க மூச்சுவிட கூட
மறந்து அருவியாய் வார்த்தைகளை
கொட்டி இடை இடையே காற்புள்ளி
அரைபுள்ளி சேர்த்து ஆங்காங்கே
பொறுத்தமான முகபாவங்கள்
காட்டி கடைசியில் ஒரு கேள்வி
குறியோடு   முடித்து விட்டு
ஆர்வத்தோடு எதிரில் இருப்பவர்
சொல்ல போகும் பதிலுக்காக
அவர் முகத்தை ஏறிட்டு பார்க்க
அவரோ.. என்னது திருப்பி சொல்லு..
என்று சொல்லுவார் பாருங்க அது
தாங்க தாங்கவே முடியாத லொள்ளு!!

படம்

எதிரே இருந்த வீட்டுக்கு
புதிதாய் குடி வந்த பெண்
தன்னை சுய அறிமுகம்
செய்து கொள்ள வந்தார்..
அவருக்கு 5 குழந்தைகள்
என்று சொல்லி கொண்டு
இருக்கும் போதே மம்மி
என்று அவரது 2 வயது
குழந்தை துள்ளி குதித்து
ஓடி வந்தது..
மம்மியா… நான் டீவீயில் Santoor
சோப் Ad பார்த்த பொழுது
கூட இவ்வளவு அதிர்ச்சி
அடைந்ததில்லை ஏனெனில் என்
எதிரே நின்று பேசியது மம்மி
அல்லவே 55 வயது மாமி!!

படம்

பழைய பேப்பரை அடுக்கி
கட்டி வெளியேற்ற எத்தனிக்கும்
நேரம் தான் அதில் வந்த
பல சுவாரசியமான விஷயங்கள்
கண்ணுக்கு புலப்படும்!!

படம்

ஏதேனும் விபரீதம் நம்
வாழ்வில் நடைபெறும் வரை
அவை உலகத்தில் உள்ள யாருக்கோ
எவருக்கோ மூன்றாமவருக்கே
நடைபெறுபவை என்று நம்
மனது முழுமையாய் நம்புகிறது!!

படம்

அதிர்ச்சியான விஷயங்களை
யாருக்கேனும் சொல்ல முற்படும்
போதும் யாரேனும் நம்மிடம் சொல்லி
விட்ட போதும் ஏதோ உயரமான
மலை உச்சியில் பிராணவாயு
குறைவால் மூச்சடைத்து நிற்பது
போன்றதொரு பிரம்மையை
தவிர்க்க இயலாது!!

படம்

என்னதான் நமதே நமதாக
இருந்தும் உள்ளிருக்கும்
சந்து பொந்து மேடு பள்ளம்
லொட்டு லொசுக்கு என்று
அத்தனை அந்தரங்களை
அறிந்திருந்தும் வெளியில்
சென்று விட்டு வீட்டு வாசலை
அடைந்தவுடன் பொறுமையாக
சிறிது நேரம் மீன் பிடித்த
பிறகே அகப்படுகிறது
சாவி என் கைபையினுள்ளே!!

படம்

‘ஆ….’ எவ்வளவு பெரிய மாத்திரை
என்று வாயை பிளக்காதீர்கள்
ஜஸ்ட் இரண்டு மாத்திரைகள் தான்..
தமிழ் இலக்கணம் அறிந்தவர்களுக்கு
மட்டும்!!

படம்


17 பின்னூட்டங்கள்

உஷ்!! இது கிஸ் அல்ல ஹிஸ்ஸ்ஸ்..

படம்

கண்டிப்பா இது ரகசியம் இல்லை.. யாரை பற்றிய கிசுகிசுவும் இல்லை.. எப்படி முதல் காதல், முதல் முத்தம், முதல் ஸ்பரிசம் இதெல்லாம் எப்படி நீங்காமல் மனதில் இருக்குமோ அப்படி தான் இந்த முதல் ஹிஸ்ஸும்.

அப்போ எனக்கு ஒரு ஆறு வயது இருக்கும் என்று நினைக்கிறேன்! எப்பவும் போல் ஸ்கூல் விட்டு வந்து முகம் கழுவி விட்டு, உடை மாற்றி விட்டு வழக்கம் போல் விளையாட கிளம்பினேன். வாசலை விட்டு இறங்கி ஒரு 10 அடி எடுத்து வைப்பதற்குள் ஏதோ ஒரு மெல்லிய கயிறு கண்ணில் தென் பட்டது. அதை தாண்டி செல்ல முற்பட்ட போது தான் முதன் முதலில் அந்த ஹிஸ் சத்தம் காதில் விழுந்தது. விருட்டென்று கயிறு தன் தலையை தூக்கிற்று! எனக்கோ தூக்கி வாரி போட்டது பின்னே கயிறு எங்கேயாவது தலையை தூக்குமா?? ஆமாம் அது பாம்பு தான்.. இப்போ நினைத்தாலும் அடி வயிறு கலங்கும் எனக்கு. நான் வீல் என்று அலறிய அலறலில் ஒரு நான்கைந்து பேர் ஓடி வந்து அந்த பாம்பை அடித்து கொன்று போட்டனர். நான் வெகு நேரம் வரை அழுது கொண்டே இருந்தேன். சரியாக சொல்ல வேண்டும் என்றால் என்னை கண்டதற்கு அந்த பாம்பு தான் அழுதிருக்கனும் தேவை இல்லாமல் நான் அழுது கொண்டிருந்தேன். பாவம் என்னால் அது தன் உயிரை விட்டது!

அதன் பிறகு நெடுநாள் எந்த ஒரு பாம்பும் என் கண்ணில் சிக்க வில்லை! பிறகு புது வீடு கட்டி குடி ஏறினோம். வீடு இருந்த இடம் ஒரு குளத்தாங்கரை. நின்னா பாம்பு, நடந்த பாம்பு.. ஒரே பாம்போ பாம்பு!! அடிக்கடி பாம்பு என் கண்ணில் தட்டு பட்டு அடி வாங்கும். நேரில் பார்த்தது பத்தாதென்று கனவிலும் கூட.. ஒரு முறை தோழிகளுடன் தோட்டத்தில் விளையாடி கொண்டு இருந்த போது யாரோ ஒருவர் கண்ணில் பாம்பு தட்டு பட அவள் பாம்பு.. பாம்பு.. என்று கத்த ஆரம்பித்து விட்டாள். எல்லோரும் திசைக்கு ஒன்றாக ஓடினோம்.. என் நேரம் நான் பாம்பு வந்த திசையிலேயே ஓடி அதை லாங்க் ஜம்ப் செய்து தாண்டினேன். நல்ல கறுத்த பாம்பு.. இதை தான் ஓடுற பாம்பை தாண்டுற வயது என்று சொல்வாங்களோ??

இப்படி ஓயாமல் பாம்பு கண்ணில் படுதே என்று என்னை சங்கரங்கோவில் கூட்டி சென்று அங்கே கோவிலில் இருந்த புற்றுக்கு பரிகாரமாய் என் கையால் பால் ஊற்ற செய்தார்கள். அதன் பின் வீட்டு முற்றத்தில் ஏதோ ஒரு செடியையும் நட்டு வைத்தார்கள். அந்த செடியின் வாசனைக்கு பாம்பு உள்ளே நுழையாதாம்! அருகில் உள்ள வீட்டில் கோமதி அம்பாள் படத்தை வீட்டின் முன்னே மாட்டி வைத்திருந்தனர் இதே காரணத்துக்காக. இருந்தாலும் அது வந்த வண்ணம் போன வண்ணம் தான் இருந்தது. அதற்காக எங்கள் வீட்டு தோட்டத்து பின் சுவற்றில் ஒரு ஓட்டை செய்து வைத்தோம்.. தெரியாமல் ஏதேனும் உள்ளே வந்து விட்டாலும் அதுவே வெளியே போய் விடட்டும் என்பதற்காக!

ஒரு முறை ஸ்கூலில் இருந்து நான் வீட்டுக்கு வரும் அதே நேரம் ஒரு பாம்பும் எங்கள் வீட்டு வாசல் அருகில் வந்து கொண்டிருந்தது. அது என்னை பார்த்து பயந்து வீட்டு தோட்டத்தினுள் நுழைந்து விட்டது. சும்மா சொல்ல கூடாதுங்க அது அழகோ அழகு. நல்ல மஞ்சள் நிறத்து பாம்பு, உடம்பெங்கும் அழகாய் தீட்டியது போல் கறிய நிறத்தில் வரிகள். அப்பப்பா.. என்ன வேகம் அழகாய் கொய்யா மரத்தில் ஏறி பின் வீட்டு வெளி சுவற்றில் ஏறி போயே போய் விட்டது. முதன் முறையாய் பாம்பை கண் கொட்டாமல் ரசித்தது அதுவே முதல் முறை.

நெல்லிக்காய் மரத்தின் இலைகள் அனைவரும் அறிவர். என்ன ஒரு அழகு பச்சை. அதே பச்சை நிறத்தில் தான் பச்சை பாம்பும் இருக்கும். நிறைய தடவை அதை நான் நேரில் பார்த்திருக்கிறேன். கண்ணை மூடி கொண்டு ஓடி வந்து விடுவேன். சீ.. சீ.. வெட்கம் எல்லாம் இல்லை..அது நம் கண்ணை பார்த்தால் பாய்ந்து வந்து புடுங்கிடுமாமே.. யார் கண்டார்கள் அது நிஜமோ பொய்யோ?? ரொம்பவே பயந்து போனதொரு தருணம் சேரன்மஹாதேவி ஊரில் தாமிரபரணி ஆற்றில் குளித்த போது தான். நட்ட நடு ஆற்றில் நின்று கொண்டிருக்கும் போது எவரோ ஒருவர் பாம்பை பார்த்து கத்தி விட்டு ஓடி விட்டர். என்ன செய்வது, எங்கே ஓடுவது? திரும்பிய திசை எல்லாம் தண்ணீர் அலைகளோடு! அது எங்க வருது என்று யாருக்கு தெரியும். கண்கள் இருட்டி கொண்டு வந்தது, பின்னே பயத்தில் சிக் என்று கண்களை மூடி கொண்டு ஆடாமல் அசையாமல் நின்று கொண்டிருந்தேன். எவ்வளவு நேரம் நின்றேன் என்று எனக்கே தெரியாது. நல்ல வேளை அன்று மீன்கள் எதுவும் வந்து காலை கடிக்க வில்லை.. இல்லை அன்று என்ன நடந்திருக்கும் என்று எனக்கே தெரியாது!

இந்த பாம்பு பயத்தை மேலும் அதிகமாக்கியது நீயா படமும் நானே வருவேன் படமும்! இந்த நல்ல பாம்பு கண்ணில் பட்டு அடி பட்ட நேரமெல்லாம் பயந்து போய் விசாரிப்பதுண்டு.. அதை நல்லா குழி தோண்டி புதைச்சாச்சு இல்ல?? இல்லாட்டி அதோட ஜோடி இச்சாதாரி பாம்பு வந்து பழி வாங்கி விடும் என்பது ஐதீகம்!! கடைசியாக பாம்பை நான் பார்த்தது நான் படித்த கல்லூரிக்கு செல்லும் வழியில். அதன் பெயர் தெரியவிலை. நல்ல சரட் சரட் என்று சுத்து சுத்தென்று சுத்தி வந்தது தன்னை தானே. அதன் வாலடியில் ஒரு மணி வேறு. அதை அடித்து சத்தம் வர வைத்து அருகில் வந்த என்னை எச்சரிக்கை செய்தது. எவ்வளவு நல்ல குணம் இல்ல இந்த பாம்புகளுக்கு! நாம் துன்புறுத்தினால் அன்றி நம்மை அது எதுவும் செய்யாது!!

 


21 பின்னூட்டங்கள்

கட்டிய சீலை போதும் போகலாம் வா..

கட்டிய சீலை போதும் போகலாம் வா

இப்படியெல்லாம் யாராவது கூப்பிட்டால் நான் கண்டிப்பா கிளம்புற ஆள் இல்ல.. கொஞ்சமாவது யோசிப்பேன். ஆனால் என்ன செய்வது அழைத்தவர் என் மரியாதைக்கு உரியவர், மனதிற்கு இனியவர், ஆம் என் கணவர் தான் இப்படி அழைத்தார். அது ஒரு சனிக்கிழமை மாலை நேரம். தப்பு தப்பு இரவு நேரம். எப்பவும் சனிக்கிழமை சொல்லுவார் நான் சீக்கிரம் மாலை வந்து விடுகிறேன் தயாராக இருங்கள் என்று.. ஆனால் ஒரு நாளும் வர மாட்டார்! நாங்களும் காத்து காத்து கண்கள் பூத்து போவது தான் மிச்சம். இப்பொழுது எல்லாம் சரியாக சொன்னால் கிளம்புவதே இல்லை. விஜய் டீவியில் அது இது எது முடிந்த மறு நிமிடம் தரிசனம் குடுத்தார் என் கணவர்.

வந்ததும் வராததுமாய் கிளம்பு கிளம்பு வாஷிங் மிஷின் பார்த்து விட்டு வந்து விடுவோம் என்றார். சிறிது டச் அப் செய்ய கூட விட வில்லை.. அப்படியே கட்டிய சீலையோடு அழைத்து சென்றார். கிளம்புவதற்கு முன் சிறிது தயக்கம் எனக்கு, இன்று நாள், நியூமராலஜி படி தேதியின் நம்பரும் சரி இல்லை, போய் தான் ஆகனுமா?? அப்படியே ஆனது ஆகட்டும் என்று கிளம்பினால் வீண் விவாதம் மட்டுமே வந்து தீரும். இப்படி யோசித்து கொண்டே அவர் பின்னே சென்று விட்டேன் கடை வரை..

அங்கே போனதும் எதை தேர்ந்தெடுக்க என்பதில் ஆரம்பித்தது குழப்பம். ஏற்கனவே எங்கள் நண்பர் ஒருவர் பத்து நாள் முன்பு தான் எல்ஜீ வாஷிங்மிஷின் வாங்கி இருந்தார். அவர் டாப் லோடிங் வாங்குங்கள், சிரமம் இருக்காது என்று சொல்லி இருந்தார். நானும் நேரே போய் எல்ஜீ முன்பு சென்று நின்றேன். என் கணவர் ஆரம்பித்தார், ஹ்ம்ம் சொல்லு என்ன மாடல் நம்பர்.. இது என்ன, அது என்ன என்று கேள்வி கணைகள் தொடுக்க ஆரம்பித்தார்.. அவர் ஏற்கனவே என்னை கூகிளில் மாடல்கள் பார்த்து வைக்க சொன்னது நியாபகம் வந்தது. நானும் தேடி பார்த்தேன், ஒன்னு ரெண்டு மாடல் காட்டி இருந்தால் நானும் பொறுமையா எல்லா விவரத்தையும் சேகரித்து இருப்பேன்.. அது 100 200 மாடல் இல்ல காண்பித்தது. மாயி படத்துல பொண்ணு பார்க்க வந்த இடத்தில் அந்த மின்னல் பொண்ணு மாப்பிள்ளை வடிவேலுவை விட்டு விட்டு கூட வந்த சரத்குமாரை பார்த்து ‘இம்புட்டு நேரம் நான் மச்சானை தான பார்த்தேன்’ என்று சொன்ன மாதிரி நானும் தேடி தேடி வெறும் வாஷிங்க் மிஷின் படத்தை தானே பார்த்தேன்னு சொல்ல வந்து நாவை அடக்கி கொண்டேன்!!

கணவருக்கு கோபம் பொத்து கொண்டு வந்தது. போன் போடு நம் நண்பர் என்ன மாடல் வாங்கி இருக்கார் என்று கேட்போம் என்று கூறினார். நானும் எங்கள் சென்னை நண்பரின் மனைவியின் நம்பருக்கு கால் செய்தேன். அநியாயத்துக்கு பேலன்ஸ் மிக குறைவாக இருந்தது.. ரெண்டு ரூபாய்க்கு பரவாயில்லை ரெகார்டட் வாய்ஸ் திட்டி கொண்டே கால் கனெக்ட் செய்தது. அவர் எடுத்தவுடன் அவசர அவசரமாய் மாடல் நம்பர், விலை விவரம் எல்லாம் கேட்டு முடித்தேன் பேலன்ஸ் தீர்ந்து விட்டிருந்தது. நல்ல வேளை தப்பிச்சேன்! பிறகு என் கணவரை அழைத்து விட்டு அதே மாடலை காட்டி இதன் விலை 15000 என்று சொன்னார்கள் என்று சொன்னது தான் தாமதம்.. கணவர் கத்தினார் ஹ்ம்ம் இன்னும் நல்லா கத்தி சொல்லு கடைகாரன் காதில் விழுற மாதிரி! தமிழில் விலை சொல்ல வேண்டிய தான.. நல்ல மாட்டிண்டோம் இன்னிக்கு வந்திருக்கவே கூடாது மனம் உள்ளுக்குள் அழுதது. நண்பரின் மனைவி போன் கால் கட் ஆவதற்கு முன்னால் வேறு கம்பெனி மிஷினுக்கு எல்லாம் 10 வருட மோட்டார் வாரண்டி இருக்கிறது அதையும் விசாரித்து கொள்ளுங்கள் என்று சொன்னது நியாபகத்துக்கு வந்தது. அதை கணவரிடம் சொன்னவுடன் அவர் படாரென்று எல்ஜீயிலிருந்து சாம்சங்குக்கு தாவி விட்டார்!

சாம்சங்கில் ஏதோ வாபில் டெக்னாலஜி என்று போட்டிருந்தது.. அதை என்ன என்று விசாரித்து வை என்று கடை பையனை விவரம் சொல்ல அழைத்து விட்டு கணவர் அவருக்கு வந்த போனை எடுத்து பேச சென்று விட்டார். வந்த கடை பையன் என்னமோ கடகடவென்று தெலுங்கிலே கேட்டு தொலைத்தான். நான் இருந்த எரிச்சலில் What come again? என்று அலறி விட்டேன்! இந்த ரோஜா படத்தில் அரவிந்தசாமி வைஷ்ணவியை பொண்ணு பாக்க வந்த இடத்தில் அவரிடம் தனியே பேசும் போது வைஷ்ணவி என்னை பிடிக்கவில்லை என்று சொல்லி விடுங்கள் என்று சொன்னவுடன் அரவிந்தசாமி அலறுவாரே அது மாதிரி! பிறகு அந்த கடை பையன் சுதாரித்து விட்டு ஹிந்தி தெரியுமா என்று கேட்டான். தெரியும் என்றேன்.. ஆங்கிலம் தெரியுமா என்று கேட்டான்.. தெரியும் என்றேன்.. உடனே அவன் சொன்னான் ஹே ஹே.. எனக்கு ரெண்டுமே தெரியாது என்றான் அந்த பையன். நான் உடனே ஜெயம் படத்தின் கதாநாயகி சதா போல் கையை என் கணவர் இருந்த திசை நோக்கி நீட்டி அவரிடமே பேசிக்கோ என்று சொல்லி விட்டு வேறு பக்கம் திரும்பி கொண்டேன். எரிச்சல் மண்டி கொண்டு வந்தது.

அந்த கடை பையனும் வாபில் டெக்னாலஜி பத்தி வாய் வோயாமல் எதேதோ கதறி கொண்டிருந்தான் தெலுங்கில். எனக்கு மண்டையே சுற்றி கொண்டு வந்தது போல் இருந்தது.. அதற்குள் ஏதோ ஐ சென்சார் என்று ஏதோ ஒரு மிஷினில் எழுதி இருக்க அதற்கு தாவலாமா என்று கணவர் யோசித்து கொண்டிருப்பதற்குள் நல்ல வேளை நேரமாயிற்று. எங்களை வெளியே தள்ளி கடையை மூடுவதற்குள் நாங்களே வெளியில் வந்து விட்டோம். வெளியில் வந்தவுடன் என் கணவர் யாருக்கோ போன் செய்தார். செய்து சாம்சங் வாஷிங்மிஷின் மாடல் நம்பரை கொடுத்து விலை விசாரித்தார். அவர் சொன்ன விலை கடையில் சொன்ன விலையை விட 1500 ரூபாய் கம்மியாக இருந்தது. பார்த்தியா என் சாமர்த்தியத்தை என்று சுய தம்பட்டம் அடித்து கொண்டார். இப்போ எனக்கு கோபம் பற்றி கொண்டு வந்தது. ஏற்கனவே ஒரு ஹோல் சேல் டீலரிடம் பேசி விட்டு இங்கு வந்து விட்டு என்னை வேறு போட்டு பார்த்திருக்கிரார்.. இருக்கட்டும் இருக்கட்டும் வீட்டுக்கு தான வருவாரு வெச்சுக்கிறேன் என்று மனதில் கறுவி கொண்டேன்.

வீட்டுக்கு கிளம்புவதற்கு முன் மனது பொறுமுவது தாங்க முடியாமல் கேட்டேன் என்னை எதற்காக இங்கே அழைத்து வந்தீர்கள் என்று.. அவர் சொன்னார் நீ எல்ஜீ எல்ஜீ என்று அதை பிடித்து தொங்கி கொண்டிருந்தாய் அல்லவா அதை விட சாம்சங்க் தான் பெஸ்ட் என்று உனக்கு புரிய வைக்க தான் என்று கடுப்படித்தார்.. அந்த ஹோல் சேல் டீலரை கூப்பிட்டு அவர் ஏற்கனவே ப்ளான் செய்தது போல் அவருக்கு பிடித்த மாடலுக்கு ஆர்டர் குடுத்து விட்டு என்னை ஏதோ சாதித்து விட்டது போல் பெருமையாக பார்த்தார்.. நான் முகத்தை கோபமாக வைத்து கொண்டு சொன்னேன் என்னை வீட்டுல கொண்டு போய் விடுங்கோ எனக்கு பசிக்குது என்று!!

 


12 பின்னூட்டங்கள்

சில எண்ணங்கள் -40

என் ஒருத்திக்கு மட்டும்
தனியே தேனிர் தயாரித்து
அருந்த நான் விருப்பம்
கொள்ளுவதே இல்லை
ஏனெனில் எனக்கு
கறுத்து அடி பிடித்த
பாத்திரங்களை காணவோ
அதனை தேய்த்து தேய்த்து
கைகளை புண்ணாக்கவோ
நெடி தாங்க முடியாமல்
மயங்கி விழவோ
அட கடவுளே.. என்று
மனது தாங்காமல்
அலறவோ நான் ஒரு
போதும் விரும்பியதே இல்லை..
நியாபகமறதி!!

படம்

சிங்கம் போல் கர்ஜிக்கும்
எங்க ப்ரெஸ்டீஜ் குக்கர்
நேற்று பூனை போல்
கொஞ்சியது சகிக்காமல்
என்ன ஏது என்று பதறி
அருகில் சென்று கவனித்த
போது உண்மை விளங்கிற்று..p
பின்னே ப்ரீமியர் வெயிட் இல்ல
தவறுதலாய் போட பட்டிருந்தது!

images (6)

பரத் என்று நான்
என் குட்டி பையனை
விளிக்க அவன் எனக்கு
பதில் அளித்த விதம்
அவன் என்னை முதன்
முதல் அம்மா என்று
அழைத்த தருணத்தை
விட ரொம்பவே இனித்தது..
அவன் சொன்னான்..
‘என்ன செல்லம்..’

mother-kissing-son-clipart

பொய் என்று இருவருக்குமே தெரிந்தும்
மெய்யாய் ஒருவருக்கொருவர் கொஞ்சி
உருகி கொள்ளும் தருணம்..
எப்போதோ அடி பட்டு காயமடைந்து
பின்னர் நன்கு ஆறி தழும்பு கூட
ஏதும் இன்றி இருந்த சுண்டு விரலை
என் முன்னே நீட்டி அம்மா.. வலிக்குது..
என்று ஒவ்வொரு தடவையும்
சிணுங்கி கொஞ்சும் என் குட்டி பையன்!!

mom

ரொம்பவே திரில்லான திகில் படம்
தனியே அமர்ந்து பார்ப்பதும்
பாழுங்கல்லை தனியே நின்று
அகற்றி அதன் அடியில் நோட்டமிடுவது
எல்லாம் ஒன்று தான்..
துணிந்து செயலை ஆரம்பித்து விட்ட
பின்னர் அய்யயோ… இங்கே நெளியுது

அங்கே வளையுது என்று அலறுவது

சுத்த அபத்தம்!

stock-vector-cartoon-animal-eyes-under-big-stone-illustration-of-funny-cartoon-creature-or-animal-character-s-131268710


7 பின்னூட்டங்கள்

சில எண்ணங்கள் -39

காத்திருப்பதும் சுகம் தான்
காதலில் மட்டும் அல்ல 
கதை படிக்கும் போதும் தான்..
ஆர்வக்கோளாறில் பாதி படிக்கும்
போதே அவசரப்பட்டு 
கடைசி அத்தியாயத்தை படித்து
விடும் போது என்னதான் நீங்கள் 
ஆர்வமுடன் எதிர்பார்த்த முடிவு
தெரிந்து போனாலும் அதன் பின்னே
த்ரில் இல்லாமல் போய் விடும்!!

படம்

அம்மா மதியம் சாதத்தோடு
தொட்டு சாப்பிட ஒரு நாள்
காளிப்ளவர் ப்ரை ஒரு நாள்
உருளை ஒரு நாள் வெண்டக்காய்
செய்து குடுக்கரீங்களா..
என்ன ஆச்சு என் பையனுக்கு
திடீர் ஞானோதயம்…
கந்தா கடம்பா கதிர்வேல் முருகா
கார்த்திகை மைந்தா இப்படி பல
பெயர் சொல்லி ஒரே கடவுளை
அழைத்து நன்றி சொல்லுவதற்கு
முன் தோண்டி துறுவி விசாரித்ததில்
உண்மை வெளியே வந்தது…
அவன் மிஸ்ஸு வெறும் தயிர் சாதம்
மட்டும் எப்பவும் கொண்டு வராங்களாம்!!

படம்

 

வீட்டுக்குள் ஒன்றை அனுமதித்ததே பெரிய
விஷயம் இதிலே இப்போ ஜோடி வேறு..
ஒரு இங்கிதம் வேண்டாம்
பட்ட பகல் என்றும் பாராமல்
இவுக ஓடறதும் அவுக துரத்துறதும்
இவுக குதிக்கறதும் என் குட்டி பையன்
பாடம் படிக்காம அவுகளையே எட்டி எட்டி
பாக்குறதும் சீ சீ.. இதென்ன வீடா 
அமியூஸ்மன்ட் பார்க்கா..
டியூப்லைட் பின்னே குடித்தனம் செய்யும்
ஒரு ஜோடி புதுமண மரபல்லிகள்!!

படம்

 

இதற்கு சிரிக்கவா அழுது விடவா தருணம்..
ஆர்தோ டாக்டரிடம் கையில் அடிபட்ட என் முதல்
பையனை காண்பித்து வர எண்ணி அவர் முன்
உட்கார்ந்திருந்த பொழுது அவர் என் முதல் 
பையனையும் இரண்டாவது துறு துறு பையனையும்
மாறி மாறி பார்த்து விட்டு… ‘நியாயமா பார்த்தா 
இந்த பையனுக்கு தான் கையில் அடி பட்டிருக்க
வேண்டும்..’ என்று இங்கேயும் அங்கேயும் குதித்து
கொண்டிருந்த எங்கள் குட்டி பையனை பார்த்து
கையை நீட்டி சுட்டி காட்டிய போது!!

படம்

 

சொன்னா புரியாது
சொல்லாவிட்டால் தெரியாது
கன்னா பின்னாவென வளர்ந்தும்
ஒரு போதும் மரியாது ஏனெனில்
இது ஒரு தலை காதல்!!

படம்


10 பின்னூட்டங்கள்

சில எண்ணங்கள் -38

எப்படி பேக்கில் குறிப்பிடப்பட்ட
தேதி முடிந்தவுடன் அதனுள்
இருக்கும் பொருட்கள் காலாவதி
ஆகி விடுகின்றதோ அது போல்
2005 வருடத்துக்கு முன்னே
அச்சடிக்கப்பட்ட ரூபாய் நோட்டுக்கள்
மார்ச் 31 தேதிக்கு பிறகு செல்லாது
மேலும் வருடமே அச்சடிக்கப்படாத
ரூபாய் நோட்டுக்களும் சேர்ந்தே
காலாவதியாகின்றன….
விரைந்து காலி செய்து விடுவது நலம்!

படம்

http://www.dnaindia.com/money/report-reserve-bank-of-india-puts-2005-as-expiry-date-on-currency-notes-to-curb-fake-money-1955434

அணிலின் முதுகில் 
இராமர் இட்ட மூன்று
கோடுகள் போல
இந்த பூச்சியின் முதுகில்
ராணி காமிக்ஸ் மாயாவி
முத்திரை பதித்திருப்பாரோ
டவுட்…

  

படம்

கணவனை கண் கண்ட தெய்வமாய் 
மதிக்கும் எந்த ஒரு மனைவியின் கணவரே..
நீங்கள் உங்களை அலாதீனாக நினைத்து
கொண்டாலும் தவறில்லை..
உங்கள் மனைவியை ஜாஸ்மின் ஆக
கூட நினைக்க வேண்டும் என்ற
அவசியம் எதுவும் இல்லை…
ஆனால் விளக்கில் அடைபட்டு கூப்பிட்ட
குரலுக்கு ஓடி வரும் பூதமாய்
உங்கள் மனைவியை நடத்தாமல் இருக்கலாமே!!

படம்

 

இருட்டில் நம் கண்ணுக்கு புலப்படும்
பொருட்கள் நம் அப்போதைய
மனநிலையையும் நம் கற்பனை
திறனையும் பிரதிபலிப்பவை!

படம்

 

இதுக்கு ஒரு சாக்கு பை
வாங்குவது எவ்வளவோ தேவலை..
Lotte Choco Pie! 

படம்

 

எவரையும் வசீகரிக்க
உரக்க பேசுவதோ
உறக்கம் பிடித்தாற் போல்
பேசுவதோ தவறு
உருக பேசுவதே
என்றென்றும் நிறைவு!

படம்