எண்ணங்கள் பலவிதம்

என் எண்ணங்களின் நீருற்று


பின்னூட்டமொன்றை இடுக

அதிகரிக்கும் வளிமண்டல காபனின் அளவு

வளிமண்டலத்தில் காபனின் அளவு மிகவேகமாக அதிகரித்துவருவதை ஆய்வாளர்கள் வருத்தத்துடன் கண்காணித்துக்கொண்டு வருகின்றனர். அண்ணளவாக 66 மில்லியன் வருடங்களுக்கு முன்னர், அதாவது டைனோசர்கள் அழிவடைந்த காலப்பகுதி…

மூலம்: அதிகரிக்கும் வளிமண்டல காபனின் அளவு


21 பின்னூட்டங்கள்

பிரேமம் விமல் சார்

images

பிரேமம் மலையாளம் திரைப்படம் பற்றி தெரியாதவர்கள் கண்டிப்பாக இருக்க மாட்டார்கள்! ஏனெனில்  அது அவ்வளவு சூப்பர் டூப்பர் ஹிட்  திரைப்படம்! ரொம்ப நாள் கழித்து ஒவ்வொரு சீனும் ரசித்து நோக்கிய ஒரு திரைப்படம். கதை என்ன என்று கேட்டால் ஒரே வரியில் சொல்லி விடலாம்.. Usual Love story தான்.நம்ம ஊரு ஆட்டோகிராப் படம் மாதிரி! ஆனா அதைவிட நூறு மடங்கு நயமான திரைப்படம்!  அவர்கள் கதை சொல்லிய விதம் ரொம்பவே அருமையாக இருந்தது. அதுல வந்த ஒவ்வொரு கதாபாத்திரமும் அருமை! என்னை ரொம்பவே ஈர்த்தது என்னவோ விமல் சார் தான்! இவரு இப்படத்தின் ஹீரோவும்  கிடையாது வில்லனும் கிடையாது! அப்போ யாரா இருக்கும்?? நீங்க நினைத்தது சரி தான்..  காமடியன் தான் அவரு! படத்தில் சிறிது நேரமே வந்தாலும் மனுஷன் பட்டைய கிளப்பிடுறார்!

vimal1

இந்த விமல் சார் யாருன்னா , படத்தோட ஹீரோ படிக்கும் கல்லூரியில் பணிபுரியும் விரிவுரையாளர். இவரு ஒரு மலையாளி  நல்ல வழுக்கை மண்டையோடு பார்க்க ஒரு 35 வயது தாராளமா சொல்லலாம். கல்யாணம் ஆகாத கட்டை பிரம்மச்சாரி! தன் கனவு தேவதைக்காக வருட வருடமாக காத்து கொண்டிருப்பவர்! இவருக்கு கல்லூரியில் ஒரே துணை P.T சார் மட்டுமே!  இனி இவரு காதலில் எப்படி விழுந்தார் என்று  பார்க்கலாம்!

vlcsnap-2016-01-04-16h10m35s969

படத்துல மொத்தம் மூணு ஹீரோயின்கள்! அதிலே நாம இப்போ பார்க்கப்போவது மலர் என்ற பெயரையுடைய கதாபாத்திரத்தை மட்டுமே! இந்த மலர் தமிழ்நாட்டின் கொடைக்கானலில்  இருந்து கேரளம் வந்து , இப்படத்தின் ஹீரோ படிக்கும் கல்லூரியில் சிறப்பு விரிவுரையாளராக பணியில் சேர்கிறார்!  இவர் அக்கல்லூரியில் வேலைக்கு சேர்ந்த முதல் தினமே ,இப்படத்தின் ஹீரோ கண்டதும் காதலில் விழுகிறார்! ஹீரோ மட்டுமா காதலில் விழுகிறார், நம்ம விமல் சாரும் தான்! மலர் மிஸ் இப்படித்தான் விமல் சார் அவளை குறிப்பிடுவார்! மலர் மிஸ்ஸை  கண்ட அடுத்த நொடி ஒரு தலை காதலில் டமால் என்று விழுந்து விடுகிறார் விமல் சார்!  இன்னும் மிஸ்ஸை கரெக்ட் பண்ண கூட ஆரம்பிக்க வில்லை, அதுக்குள்ள ,நான் எங்க அம்மாவ எப்படித்தான் convince பண்ண போறேன்னு தெரியல,தான் காதலிப்பது ஒரு தமிழ் பெண் என்று தெரிந்தால் அம்மா என்ன சொல்வாளோ அவள முதலில் கரெக்ட் பண்ணனும் என்று P.T சாரிடம்  புலம்புவார்! பார்த்த பத்தாவது நிமிடத்தில் தன் லவ்வை Propose பண்ண கூட ரெடியாயிடுவாருணா பார்த்துகோங்களேன்! மலர் மிஸ் தமிழ் பெண் என்பதால் , தமிழிலேயே தன் காதலை வெளிப்படுத்த எண்ணி ‘நான் உன்னை காதலிக்கிறேன்’ என்று P.T சாரிடம் திரும்ப திரும்ப சொல்லி  ஒத்திகை பார்த்து கொள்வார்!

vlcsnap-2016-01-04-16h10m14s323     vlcsnap-2016-01-04-16h10m32s198

தன் கனவில் கண்ட தேவதையை நேரில் பார்த்து , கண்டதும் ஒரு தலைக்காதலில் விழுந்த விமல் சார் , அதே வேகத்தோடு மலர் மிஸ்ஸை நேரில் பார்த்து , தன் காதலை சொல்ல கிளம்புகிறார்! P.T சார் முன்னே பேசும் போது தந்தி அடித்த வார்த்தைகள் , மலர் மிஸ்ஸின் முன்னே நொண்டி அடித்து விட , கடைசியில் எப்படியோ பாடுபட்டு , மிஸ்ஸின் செல் நம்பரை மட்டும் கேட்டு பெற்று கொள்கிறார்!

vlcsnap-2016-01-04-16h13m58s339     vlcsnap-2016-01-04-16h14m15s245

 

விமல் சார் ஒரு நாள் கல்லூரியில் JAVA  பாடம் நடத்தி கொண்டிருக்க , ஏதேச்சையாய் , மலர் மிஸ் , பால்கனியில் கடந்து செல்ல , விமல் சாரின் கவனம் நொடியில் சிதறி போய் , அந்தோ பரிதாபம் , JAVA அவர் வாயில்   MAVA ஆகி விடுகிறது!! விமல் சார்  MAVA சார் ஆன கதை அந்த தருணத்தில் இருந்து தான்!!

vlcsnap-2016-01-04-16h15m14s294     vlcsnap-2016-01-04-16h16m43s352

படத்தின் ஹீரோவும்,அவனுடைய நண்பர்களும் , மலர் மிஸ்ஸிடம் , நன்றாக பேசுவதை கண்ட விமல் சார் , மலர் மிஸ்ஸுக்கு அவர் மேல் காதல் உண்டாக , ஹீரோ மற்றும்  அவனுடைய நண்பர்களின் உதவியை நாடுகிறார்! அவர்களிடம் , விமல் சார் , வல்லவர் , நல்லவர் , பணக்காரர் , நல்லா பாடுவார் , ஆடுவார் என்று மலர் மிஸ்ஸிடம் எடுத்துரைக்க சொல்லி சொல்லுவார்!அவர்களும் தங்கள் பங்குக்கு சும்மா இல்லாம , ஊட்டியில் , விமல் சாருக்கு 900 ஏக்கர் தோட்டம் இருப்பதாய் சொல்லுகிறோம் என்று அவரை உசுப்பேத்திவிட்டு வேடிக்கை பார்க்கின்றனர்! என்ன தோட்டம் இருப்பதாய் மலர் மிஸ்ஸிடம் சொல்ல என்று அவர்கள் விமல் சாரிடம் வினவ , அவரும் கொஞ்சம் கூட யோசிக்காம ரப்பர் தோட்டம் என்று சொல்லுவது செம தமாஷ்! ஊட்டியில் ரப்பர் தோட்டத்துக்கு எங்கு போக.. இறுதியாய் 900 ஏக்கர் பேரிக்காய் தோட்டம் இருப்பதாய் சொல்வதாய் பேசி வைத்து கொள்கின்றனர்! இவ்வுதவிக்கு கூலியாய் , விமல் சாரின் பாக்கெட்டை , கேண்டீனில் தின்றே காலி செய்கின்றனர்! அவர்களோடு சேர்ந்து P.T சாரும் நேரம் கிடைக்கும் போதெல்லாம் , விமல்சாருக்கு காதல்  ஐடியாக்கள் வீசி , அதற்கு விலையாய் ,கேண்டீனில் விமல் சார் செலவில் நெய் மீனாக தின்று தீர்க்கிறார்!!

vlcsnap-2016-01-04-16h27m08s444  vlcsnap-2016-01-04-16h27m56s594

vlcsnap-2016-01-04-16h27m24s607  vlcsnap-2016-01-04-16h26m43s819

இப்படி பலவாறு தன் காதலை மலர் மிஸ்ஸிடம் , விமல் சார் சொல்ல முயற்சி செய்து கொண்டிருக்க , திடீரென்று ஒரு நாள் , மலர் மிஸ்ஸை தேடி , ஊட்டியில் இருந்து ,அறிவழகன் என்ற பெயரில் , ஒரு இளைஞன் வருகிறான்! அவன் பார்க்க , நல்ல உயரமாய் , கம்பீரமாய்  மொத்தத்தில் அழகனாய் இருப்பது கண்டு மனதொடிந்து போகிறார்! அவன் யார் என்று துருவி துருவி விசாரித்ததில் , மலர் மிஸ்ஸுக்கு ஏதோ ஒரு வகையில் சொந்தம் என்று மட்டும் தெரிந்தது! அவன் ஒரு வேளை , மலர் மிஸ்ஸின் , அத்தை மகனாக இருக்குமோ என்ற சந்தேகம் , விமல் சார் மனதை ஆட்டி படைக்க , இருக்க முடியாமல் , அவன் உண்மையில் யார் என்று அறிந்து கொள்வதற்காக , P.T சாருடன் கை கோர்த்து கொண்டு , அவன் கேண்டீன் செல்லும் போது பின் தொடர்ந்து , பக்கத்து டேபிளில் அமர்ந்து அவனை நோட்டமிடுகின்றனர்!

vlcsnap-2016-01-04-16h34m08s429  vlcsnap-2016-01-04-16h34m01s066

vlcsnap-2016-01-04-16h32m17s588  vlcsnap-2016-01-04-16h32m32s265

தன்னையும் , அந்த அறிவழகனையும் , மாறி , மாறி ஒப்பிட்டு பார்த்து கொள்கிறார்! இத்தனை நாள் இல்லாமல் , அன்று விமல் சாருக்கு , தன்  தலையில் முடி இல்லாமல் , வழுக்கையாய் இருப்பது  , பெருங்குறையாய் தெரிகிறது! சினிமாவில் , ஹீரோக்கள் , தங்கள் தலையில் , விக் வைத்து , தங்களை அழகா காட்டி கொள்வார்களே , அது போல் தானும் , விக் உபயோகித்தால் , எப்படி இருக்கும் என்று P.T சாரிடம் வழக்கம் போல் வினவுகிறார்!!

P.T சாரும் சந்தடி சாக்கில் , விமல் சார் அக்கவுன்ட்டில் ஒரு நெய் மீன் ப்ரை வாங்கி அதை ருசித்தவாறே சொல்கிறார்… சார் உங்களுக்கு தலையில முடி இல்லாம இருக்கிறது தான் அழகே! ஒரு வேளை முடி இருந்திருந்தா நீங்க நல்லாவே இருந்திருக்க மாட்டீங்க! விக் வாங்கி உங்க தலையில மாட்டுனா, ஷாக் அடிச்சு விழுந்த காக்கா மேல , லாரி ஏறி இறங்குனா எப்படி இருக்குமோ அப்படி தான் இருக்கும் என்று சொல்ல , அந்த எண்ணத்தை விட்டொழிக்கிறார் விமல் சார்!!

இந்த அறிவழகன் ஒரு வேளை மலர் மிஸ்ஸோட அண்ணன் இல்ல தம்பியா இருக்குமோ என்று விமல் சார் சந்தேகத்தை கிளப்ப அதற்கும் ஆமாம் சாமி போடுகிறார் நம்ம P .T சார்! மேலும் , மலர் மிஸ் மற்றும் அறிவழகனின் காது பார்க்க ஒரே மாதிரி இருக்கு கண்டிப்பாக அண்ணன் இல்ல தம்பியா தான் இருக்கும் என்று துவண்டு போன விமல் சாரின் நெஞ்சை தூக்கி நிறுத்துகிறார் நம்ம P.T சார்! இவ்வாறு அவர்கள் மாறி மாறி பேசி கொண்டிருக்க , கேண்டீனில் ஏதோ ஒரு குறும்பு மாணவன் , மாவா மாவா என்று விமல் சாரை கூவி அழைக்க , இதுக்கு மேல இங்க இருந்தா நமக்கு மரியாதை இல்ல என்று இருவரும் கிளம்புகின்றனர்!

அடுத்ததாக கல்லூரியில் ஏதோ கலைநிகழ்ச்சி நடைபெற ஆயுத்தமாக ஹீரோவும் அவனது நண்பர்களும் நடனம் ஆட முடிவெடுக்கின்றார்கள். மேலும் அதற்கு நடனம் வடிவமைத்து தர தானே முன் வருகிறார் மலர் மிஸ்!ஒரு பக்கம் மலர் மிஸ் , ஹீரோவுக்கும் அவனது நண்பர்களுக்கும் நடனம் சொல்லி குடுக்கும் பயிற்சியில் ஈடுபட்டிருக்க , விமல் சார் P.T சாரிடம் , அவசரக்கதியில் நடனம் பயிலுகிறார்! எப்படியாவது சில மணி நேரங்களில் நடனம் பயின்று , மலர் மிஸ்ஸை impress செய்ய நினைக்கிறார்! P.T சாரும் தனக்கு தெரிந்த நடன வித்தையை எல்லாம் களத்தில் இறக்க , விமல் சார் முட்டி புடித்து கொள்ளாத குறையாய் சற்றே திணறி தான் போகிறார்! சிம்பிள் ஸ்டெப்ஸ் கூட தனக்கு சுட்டு போட்டாலும் வராது என்று சற்று லேட்டாக புரிந்து கொள்ளும் P .T பின்னர் தன் முடிவை மாற்றி கொள்கிறார்! ஆட வேண்டாம் , பாட்டு பாடி மிஸ்ஸை கவுத்தி விடலாம் என்று தன் அடுத்த கட்ட பிளானுக்கு தாவுகிறார்!

 

vlcsnap-2016-01-04-16h45m01s740     vlcsnap-2016-01-04-16h44m56s695

vlcsnap-2016-01-04-16h45m18s274    vlcsnap-2016-01-04-16h45m46s182

கலை நிகழ்ச்சி நடை பெறும் நாளும் வந்து சேர்கிறது! ரொம்பவே கஷ்டப்பட்டு ‘என்னவளே ‘ காதலன் பட பாடலை பாட முயற்சி செய்கிறார் விமல் சார்! மலர் மிஸ்ஸை தன் பாடலால் கவுக்க நினைத்தவர் தானே கவுந்து கிடக்கிறார்! பின்னே ,காதல் கசிந்து உருகி இருக்க வேண்டிய வேளையில் அந்தோ பரிதாபம் கரெண்ட் அவர் கை பிடித்த மைக்கில் கசிந்துருக தூக்கி எறியப்படுகிறார்! இந்த ஷாக் கூட அவருக்கு ஒன்னும் பெரிசில்ல , மலர் மிஸ் அவர ஒரு தடவை கூட  ஏறெடுத்து  பார்க்க விரும்பியதில்லை என்பதை மட்டும் அவர் அறிந்தால் எவ்வளவு ஷாக் ஆகி இருப்பார்!!!

vlcsnap-2016-01-13-10h26m31s541   vlcsnap-2016-01-13-10h26m46s004

vlcsnap-2016-01-13-10h27m39s832  vlcsnap-2016-01-13-10h27m44s567

படத்தின் கதையோடு ஒன்றிய நல்ல காமெடி! என்னை விமல் சார் fan ஆக்கிடுச்சுனா பார்த்துகோங்களேன் 😉


1 பின்னூட்டம்

டெங்கு காய்ச்சல் வந்தால் சமாளிப்பது எப்படி

டெங்குவோடு என் சொந்த அனுபவங்கள்…

இல்லத்தரசியின் பார்வையில் அறிவியல்

dengue

டெங்கு காய்ச்சல் என்பது மிக மோசமான டெங்கு வைரசால் , கொசுவின் மூலமாக பரவக் கூடியது!இந்த காய்ச்சல் வந்தால் தோன்றும் முதல் அறிகுறிகள் , தலைவலி , கை , கால் மற்றும் உடம்பு வலி ,மற்றும் மிக கடுமையான காய்ச்சல்! இக் காய்ச்சல் வந்த சிலருக்கு , தோலில் ஆங்காங்கே, தட்டம்மை போது வரும் தடிப்புகள் போல தடிப்புகள் உண்டாகும். ஆரம்பத்திலேயே கவனிக்காமல் விட்டு விட்டால் , மிக கொடூரமான , இரத்தபெருக்குடன் கூடிய டெங்கு காய்ச்சலாக மாறி ,உயிருக்கே ஆபத்தை விளைவித்துவிடும்! முறையாக நோயாளிகளை , கவனிக்காத பட்சத்தில், இரத்தபெருக்கு உண்டாகும்! இரத்தத்தில் தட்டணுக்களின் எண்ணிக்கை , மிக குறைந்து போகும்!

dengue2

டெங்கு காய்ச்சலுக்கு இன்று வரை தடுப்பு மருந்து எதுவும் கண்டுபிடிக்கவில்லை! அதனால் , இக்காய்ச்சல் வந்தால் , மிக எச்சரிக்கையுடன் இருப்பது அவசியம்! இது ஏடிஸ் என்ற பெயரால் அழைக்கப்படும் ஒரு வகை கொசுவால் பரவக்கூடியது! டெங்கு வராமல் தங்களை காத்து கொள்ள நினைப்பவர்கள் , கொசு தன்னை கடிக்காமல் பார்த்து கொள்ள வேண்டியது ரொம்பவே அவசியம்!

dengue8

பொதுவாக , டெங்கு காய்ச்சலால் அவதி படுபவருக்கு , மருந்து என்று எதுவும் கிடையாது! மிதமான டெங்கு காய்ச்சலால் அவதிபடுபவருக்கு , வாய் வழியாக அல்லது நரம்பு வழியாக நீர்சத்து உடம்பின் உள்ளே ஏற்றப்படும்! அவ்வாறு நீர்ச்சத்து ஏற்றப்படுவதனால்  , உடம்பில் நீர்ச்சத்து குறையாமல் இருக்கும்! மிக கடுமையான டெங்குவால்…

View original post 1,204 more words


9 பின்னூட்டங்கள்

எதிர்காலத்தில் மீண்டும்-1

back1

கால இயந்திரம் என்ற ஒன்று நிஜமாகவே இல்லை என்றாலும், அப்படி ஒரு இயந்திரத்தை யாரேனும் கண்டு பிடித்து விட மாட்டார்களா என்ற அவா எல்லோருக்குமே உண்டு! கால இயந்திரத்தை அடிப்படையாக கொண்டு நிறைய  அறிவியல் புனை கதைகள் எழுதப்பட்டுள்ளன.. இதுவும் அவற்றில் ஒன்று தான்! 1985 ஆவது வருடம் வெளி வந்து சக்கை போடு போட்ட Back To The Future படத்தின் கதை பற்றி தான் இந்த பதிவு! யாம் பெற்ற இன்பம் பெருக இவ்வையகம் என்ற ஒரு நோக்கம் தான் வேறொன்றுமில்லை! விருப்பம் உள்ளவர்கள் தொடர்ந்து படிக்கலாம்!

இது 1985 ஆம் வருடம் நடக்கும் ஒரு கதை !மார்டீ என்ற ஒரு இளைஞன் தான் கதையின் ஹீரோ. அவன், தான் ஒரு சிறந்த இசைக்  கலைஞனாக ஆக வேண்டும் என ஆசைப் படுபவன்!

back8

அவனுக்கு ஜெனிபெர் என்று ஒரு காதலி !

back13

அவனுடைய அப்பாவின் பெயர் ஜார்ஜ். அவர் பிப் என்ற பெயரையுடைய அவரது  மேற்பார்வையாளரால் சதா கொடுமைப்படுத்த படுபவர்!

back9

அவனுடைய அம்மாவின் பெயர் லோர்ரைனே. அவர் ஒரு மனசோர்வுக்கு ஆட்பட்ட , அதிக எடையுடைய குடிகார பெண்மணி!

back15

அவள் தன்  மகன் மார்டீக்கு , ஜெனிபருடன்   உண்டான காதலை எப்போதும் அங்கீகரித்ததில்லை  என்றாலும் , அவள், தன் இளவயதில்,  தன் கணவன் ஜார்ஜை , எந்த ஒரு சூழ்நிலையில் சந்தித்து , தன்  மனம் பறி கொடுத்தாள் என்பதை ஒரு நாளும் சொல்லாமல் இருந்ததே இல்லை! அப்படி  எந்த மாதிரி சூழ்நிலையில் , லோர்ரைனே தன் கணவன் ஜார்ஜை சந்தித்தாள் என்பதை இக்கதையை படிப்பவர் கண்டிப்பாக அறிந்து கொள்ளுதல் வேண்டும்! லோர்ரைனே யுடைய தந்தையார் ஒரு நாள் தெரியாமல் தன் காரை கொண்டு ஜார்ஜை இடித்து விட அவர் மயக்கமடைகிறார்! பதறி போன  , அவளுடைய தந்தை , ஜார்ஜை அவருடைய வீட்டுக்கு , அழைத்து சென்று ,அவர் உடல் நலமாகும் வரை கவனித்து கொள்கிறார்! இந்த சைக்கிள் கேப்பில் தான் நம் கதாநாயகன் மார்ட்டியின் அம்மாவான லோர்ரைனும் அப்பாவான ஜார்ஜும் காதல் வசப்படுகிறார்கள்! இனி நம் கதாநாயகன் மார்ட்டியின் கதைக்கு வருவோம்!

ஓர் இரவு , மார்டீ , தன்னை கேமராவும் கையுமாய் , அவசரமாக அழைத்திருந்த ,தன் விஞ்ஞானி நண்பன் , டாக்டர் .பிரவுனை ஒரு ஷாப்பிங் மாலின் , வாகன நிறுத்துமிடத்தில் சந்திக்கிறான்! அந்த தருணத்தில் , டாக்டர்.பிரவுன் தான் கண்டு பிடித்திருக்கும் கால இயந்திரத்தை , அவனுக்கு காட்டுகிறார்!

Back to the Future (1985) Directed by Robert Zemeckis Shown from left: Christopher Lloyd (as Dr. Emmett Brown), Michael J. Fox (as Marty McFly)

அந்த கால இயந்திரம் , காலத்தை கடந்து பயணிக்கும் , ஒரு  மாற்றம் செய்யப்பட்ட ஒரு கார்! அவ்வாறு அந்த கார் , காலத்தை கடந்து பயணிக்க , அதற்கு தேவையான சக்தியை தருவது ப்ளுடோனியம் !

back3

இந்த ப்ளுடோனியம் டாக்டர்.பிரவுனுக்கு எப்படி கிடைத்தது என்பது ஒரு தனி கதை! லிபியா நாட்டு கலகக்காரர்கள் , ப்ளுடோனியத்தை , எங்கிருந்தோ திருடி கொண்டு வந்து,பாம் செய்ய  , நம்ம டாக்டர்.பிரவுனிடம் கொடுக்க , அவர் , கால இயந்திர ஆராய்ச்சி மோகத்தில் , அவர்களுக்கு டம்மி பாம் செய்து கொடுத்து ஏமாற்றி விடுகிறார்! ஆக , இருக்கும் ப்ளுடோனியம் அனைத்தையும் , காலத்தை கடந்து செல்வதற்கு உபயோகப்படும் என்று ஒரு பெட்டியில் பாதுகாப்பாக வைத்து கொள்கிறார்! இனி திரும்ப , மெயின் கதைக்கு வருவோம்!

பத்திரப்படுத்தி வைத்த பெட்டியில் இருந்து ஒரு  ப்ளுடோனியத்தை எடுத்து,உபயோகித்து  , தன் கால இயந்திரத்தில்  ,தன் வளர்ப்பு நாயை , அனுப்பி , காலம் கடந்து பயணம் செய்வதை , நிரூபணம் செய்து  காட்டுகிறார்! பின் , தானே , அவ்வியந்திரத்தில் , காலம் கடந்து பயணிக்க , நவம்பர் 1, 1955 என்ற தியதிக்கு கிளம்ப ஆயுத்தமாகிறார் டாக்டர் .பிரவுன் ! இவை எல்லாவற்றையும் , மிகுந்த ஆச்சரியத்துடன் , தன கேமிராவில் பதிந்து கொண்டே இருக்கிறான் மார்டீ! அவ்வாறு , அவர் கிளம்ப , ஆயுத்தமாகும் சமயம் , எதிர்பாராமல் , லிபியா நாட்டு கலகக்காரர்கள் , டாக்டர் பிரவுனை , டம்மி பாம் கொடுத்து ஏமாற்றியதற்காக , மிகுந்த கோபத்தோடு கொல்ல வருகிறார்கள்! அவர்கள் , டாக்டர்.பிரவுனை சராமாரியாக சுட்டு கொன்று விடுகிறார்கள்! செய்வதறியாது தவித்த நம் கதாநாயகன் மார்டீ , தன் உயிரை காப்பாற்றி கொள்ள , அந்த கால இயந்திர காரில் ஏறி தப்பி செல்கிறான்! அவ்வாறு தப்பி செல்லும் அவன் , எதிர்பாராது , நவம்பர் 1, 1955 தியதிக்கு,அதாவது கடந்த காலத்துக்கு , தெளிவாக சொல்ல வேண்டுமெனில் 30 வருஷம் பின்னே பயணப்படுகிறான்!

அங்கே , கடந்த காலத்தில் , மார்டீ தன் இளவயது அப்பா அதாவது இளைஞன் ஜார்ஜை சந்திக்கிறான்!

back10

கடந்த காலத்திலும் , அவனுடன் வகுப்பில் ஒன்றாய் படித்த , முரட்டு மாணவன் பிப் பினது கொடுமைக்கு சதா ஆளாகிறார்!!

back11

அன்றைய தினம் , ஒரு கார் மோத வந்த விபத்தில் இருந்து , தன் இளவயது அப்பா ஜார்ஜை காப்பாற்ற முயற்சித்து , மார்டீ விபத்தில் சிக்குகிறான்! மூர்ச்சை அடைந்த அவனை , காரை வைத்து மோதியவர் , இரக்கப்பட்டு தன் வீட்டுக்கு அழைத்து சென்று முதலுதவி அளிக்கிறார்! ஒரு வழியாய் , நினைவு திரும்பி , கண் விழித்த மார்டீ , பார்த்த மாத்திரத்தில் காதல் வயப்பட்ட கண்களோடு , தன் அருகில் அமர்ந்து , தன்னையே வைத்த கண் வாங்காமல் பார்க்கும் தன் இளவயது அம்மாவை கண்டு அதிர்ச்சி அடைகிறான்!

back6

ஆம் , அந்த வீடு மார்ட்டியின் அம்மா வீடு தான் ! விபத்தை உண்டாக்கியர் மார்ட்டியின் தாத்தா தான்!

இந்த இடத்தில் , நீங்கள் ஒன்று கவனிக்க வேண்டும்.. விதிப்படி என்ன நடந்திருக்க வேண்டுமோ , அது நடக்கவில்லை! ஜார்ஜ் தான் கார் விபத்தில் அடிப்பட்டு படுத்திருக்க வேண்டும். ஆனால் , எதிர்பாராது , மார்டீ கார் முன் விழுந்து  , வரலாறையே குழப்பி விட்டு விட்டான் என்று தான் சொல்ல வேண்டும்! ஜார்ஜை காதலோடு பார்த்திருக்க வேண்டிய லோர்ரைனே , தன் எதிர்கால மகன் என்று அறியாமல் , மார்டீயை கண்ட வுடன் காதல் கொண்டாள்! இந்த குழப்படியில் இருந்து , ஒருவாறு தப்பித்த , மார்டீ , தன் விஞ்ஞானி நண்பன் , இளவயது டாக்டர். பிரவுனை தேடி சென்றான் ! இனி , அவன் திரும்பவும் எதிர்காலம் செல்ல , டாக்டர்.பிரவுன் உதவியை தான் நாடி ஆக வேண்டும்!  ஏனெனில்  ப்ளுட்டனியமும் இல்லை ,வேறு வழி எதுவும் இப்போதைக்கு தென்படவும் இல்லை! அங்கே , இங்கே விசாரித்து , ஒரு வழியாய் தன் விஞ்ஞானி நண்பனை தேடி கண்டு பிடிக்கவும் செய்து விட்டான்  மார்டீ !

download

இளவயது டாக்டர்.பிரவுனுக்கு தான் எதிர்காலத்தில் இருந்து, கால இயந்திரம் மூலமாக வந்திருப்பதை , தன் கேமராவில் பதிந்து வைத்த காணொளி மூலமாக ஒருவாறு புரிய வைத்தான் மார்டீ!  ப்ளுடோனியம் இல்லாமல் எதிர் காலத்துக்கு மீண்டும் செல்வது சாத்தியப்படாது என்று விளக்கிய டாக்டர்.பிரவுன் , இத்தகைய சிக்கலில் இருந்து தப்பித்து செல்ல வேற ஒரு வழியை விளக்குகிறார்! கால இயந்திரத்தை கிளப்புவதற்கு 1.21கிகா வாட்ஸ் அளவு சக்தி வேண்டும்! அத்தகைய அளவு சக்தி ,ஒரு முறை மின்னல் வெட்டும் போது மட்டுமே வெளியிடப்படும்.. அந்த அளவு  சக்தியை ,மின்னல் வெட்டும் நேரம் , பிடித்து ,கால இயந்திரத்துக்கு குடுத்தோம் ஆனால் , மீண்டும் எதிர்காலம் செல்வது சாத்தியமாகும்!  மேலும் , மார்டீயை , அவனது இளவயது தாய் தந்தை யாரையும் இந்த தருணத்தில் சந்திக்க வேண்டாம் என்று அறிவுறுத்துகிறார்!  ஒரு வேளை அவ்வாறு சந்திக்க நேரின் , அவனையும் அறியாமல், அவன் வரலாறையே எசகு பிசகாய் மாற்றி அமைக்க கூடும் என்று அச்சுறுத்துகிறார்! அப்பொழுது தான் , தன்னால் ஒரு பெருத்த பிழை உண்டாகி விட்டதை  மார்டீ உணர்கிறான்!  விதிப்படி , தன் தாத்தா ஓட்டி வந்த கார் , தன் அப்பா ஜார்ஜை இடித்திருக்கணும்! அப்பொழுது தான் , தன் இளவயது அம்மாவும் , அப்பாவும் சந்திக்க ஒரு வாய்ப்பு கிடைத்திருக்கும்..  அதன் பின்னே காதலும் அரும்பி இருக்கும்! அப்படி நடந்தால் தானே , மார்டீ என்ற ஒருவன் பிறக்கவே வாய்ப்பு இருந்திருக்கும்! அதனால் , எப்படியாவது , அவனது இளவயது தாய்க்கும் , தந்தைக்கும் இடையே சந்திப்பை உண்டு செய்து , அவர்களுக்குள் காதல் மலர செய்யுமாறு , டாக்டர்.பிரவுன் அறிவுறுத்துகிறார் !

அது போக , மார்டீயை பத்திரமாய் , எதிர்காலம் அனுப்ப , மின்னலின் சக்தி வேண்டும்! அதற்கு எங்கே போவது! அதற்கு ஒரு வழி சொல்கிறான் மார்டி.. சரியாக இன்னும் ஒரு வாரத்தில் , அவ்வூரில் இருக்கும் மணிக்கூண்டின் மேல் , மின்னல் வெட்ட போவதை , வரலாற்றின் மூலமாக ஏற்கனவே அறிந்திருந்ததை டாக்டர்.பிரவுனிடம் உரைக்கிறான்! அவரும் , எப்படியாவது , அதன் சக்தியை பயன்படுத்தி ,அவனை எதிர்காலம் அனுப்பி வைக்க , உறுதி   மொழி அளிக்கிறார்!

back5

மார்டீ தன் இள வயது தந்தையை , தேடி போய் சந்திக்கிறான்! அவர் தன்னம்பிக்கை சிறிதும் இல்லாதவராக விளங்குகிறார்! நன்றாக அறிவியல் புனை கதைகள்  எழுதும் திறன் இருந்தாலும் , யாரிடமும் , தான் எழுதிய கதைகளை  காட்டாமல் , தனக்குள்ளே பூட்டி வைத்து கொள்கிறார்! எங்கே , தன் கதைகளை யாராவது படித்து , கேலி , கிண்டலுக்கு ஆளாகி விடுவோமோ என்ற பயத்திலேயே காலத்தை ஓட்டுகிறார்! தன் வயது பெண்களை அவருக்கு பிடித்திருந்தாலும், அவர்களிடத்தில் தன் மனதை வெளி காட்ட தெரியாத பயந்தாங்கொள்ளியாகவே விளங்கினார்! இப்படி இருக்கும் ஒருவரை எந்த பெண்ணுக்கு தான் பிடிக்கும்!  இந்த லட்சணத்தில் , இளவயது அப்பா ஜார்ஜின் , கூட படிக்கும் பிப் வேறு , அவ்வப்பொழுது , தன் சகாக்களோடு வந்து , தன் இளவயது அப்பாவையும் , அம்மாவையும் , பாடாய் படுத்துவது கண்டு , மனம் குமுறுகிறான்!

 

அந்த நேரத்தில் , இளவயது அம்மா லோர்ரைனே ,மார்டீயை , தன் எதிர்கால மகன் என்று அறியாமல் , வரப்போகும் ஒரு நடன நிகழ்ச்சிக்கு , தன்னுடன் நடனமாட , ஒரு தலை காதலோடு வந்து அழைக்கிறாள்! இந்த தருணத்தை , எப்படியாவது , தன் அப்பா , இளவயது ஜார்ஜுக்கு சாதகமாக்கி விட துடிக்கிறான் மார்டீ! அதற்காக ஒரு திட்டம் தீட்டுகிறான்! நடன நிகழ்ச்சிக்கு செல்லும் சாக்கில் ,தன் அம்மா லோர்ரைனோடு காரில் ஏறி , அவளிடம் தப்பாக நடந்து கொள்ள முயற்சிக்கும் நேரம் , தக்க சமயத்தில் , அவனுடைய இள வயது அப்பா ஜார்ஜ் வந்து , மார்டீ யை அடித்து போட்டு , லோர்ரைனை காப்பாற்றுவதாக பிளான்! ஆனால் , பிளான் சொதப்பி , மார்டீக்கு பதிலாக , குடி போதையில் இருந்த பிப் , லோர்ரைனை அடைய முயற்சிக்க , தக்க சமையத்தில் ஜார்ஜ் வந்து , தன்னுள் இத்தனை நாளாய் , ஒளிந்து கொண்டிருந்த , வீராவேசத்தை வெளிப்படுத்தி ,முரடன் பிப் பினது மூஞ்சியில் ஒரு கும்மாங்குத்து விட்டான்!

back16

கிட்டத்தட்ட பிப் மூர்ச்சை யடைந்தான் என்று தான் சொல்ல வேண்டும்! ஊரே ஜார்ஜை பார்த்து வியந்தது ! இத்தனை நாள் பரிகாசம் செய்து சிரித்தவர்கள் கூட , இன்று அவனை ஒரு கதாநாயகனாக நோக்கினர்! லோர்ரைனே ஜார்ஜின் வீராவேசத்தை கண்டு சிறிது சொக்கி தான் போனாள்! அவளே , அவனை தேடி சென்று , அவளுடன் நடன நிகழ்ச்சியில் சேர்ந்து நடனமாட அழைப்பு விடுக்கிறாள்! அதன் பின் கண்ணும் , கண்ணும் கலந்து சொந்தம் கொண்டாடியது என்று சொல்லவும் வேண்டுமா! எல்லாம் இனிதே நடந்ததை கண்டு இன்புற்ற மார்டீ , டாக்டர்.பிரவுனை தேடி செல்கிறான் !

back7        images (1)

மணிக்கூண்டின் மேல் மின்னல் வெட்ட போகும் அந்த நாளும் வந்து சேர்ந்தது. மின்னல் வெட்டும் போது , அது வெளிப்படுத்த போகும் சக்தியை , கால இயந்திரத்துக்கு கொடுப்பதற்கு ஏற்றாற் போல் , எல்லா ஏற்பாடுகளையும் செம்மையாய் செய்து வைத்திருந்தார் டாக்டர்.பிரவுன்! கிளம்ப நாலு நிமிடங்களே பாக்கி இருக்கும் பொழுது , மார்டீ , டாக்டரிடம் ,அவருக்கு எதிர்காலத்தில் , லிபிய கலகக்காரர்களால் , ஏற்படப் போகும் துர்மரணத்தை பற்றி எச்சரிக்கிறான்! அதன் பின்னே , மின்னல் தக்க சமயத்தில் வெட்ட , அதன் சக்தியை கொண்டு , மார்டீ 1955 இல் இருந்து , தான் இப்போ வாழ்ந்து கொண்டிருக்கும் 1985 வருடத்திற்கு கால இயந்திரம் மூலமாக பத்திரமாய் ஓரிரு நிமிடங்கள் முன்னையே வந்து சேர்கிறான்! அந்த நிமிடம் , லிபியா கலகக்காரர்கள் டாக்டர்.பிரவுனை சராமாரியாக நெஞ்சிலே சுட்டு விட்டு தப்பி செல்கின்றனர்! செய்வதறியாது திகைத்து நின்றான் மார்டீ! ஆனால் , எதிர்பாராத ஒரு விடயம் அப்பொழுது நடந்தது! இறந்து விட்டதாக நினைத்த டாக்டர் பிரவுன் , சிறு கீறல் கூட இல்லாது எழுந்து அமர்கிறார்! ஆம் , அவர் , மார்டீ , கால இயந்திரம் மூலமாக வந்து ஏற்கனவே எச்சரித்து இருந்ததால் , தான் குண்டு துளைக்காத ஆடை அணிந்திருந்ததாக உரைக்கிறார்! பிறகு , தன் கால இயந்திரத்தில் ஏறி , அவர் மட்டும் எதிர்காலத்துக்கு பயணப்படுகிறார்! மார்டீ தன் வீட்டை அடைகிறான்!

அங்கே , அவன் வீடே தலை கீழாக மாறி இருந்தது! மார்டீயின் தந்தை ஜார்ஜ் மிகுந்த தன்னம்பிக்கை மிக்க ஒரு புகழ் பெற்ற , அறிவியல் புனை கதை எழுத்தாளராக விளங்கினார்! அவன் தாய் லோர்ரைனே மிக உற்சாகம் நிரம்பிய , தன் உடலை இந்த வயதிலும் சிக்கென்று கச்சிதமாக வைத்து கொள்ளும் பெண்மணியாக விளங்கினாள்!

back12

அவள் , மார்டீ யின் காதலியான ஜெனிபர் பற்றி மிக ஆர்வமாக விசாரித்தாள்! பிப் தன் அப்பாவின் சொல் கேட்டு நடக்கும் பணியாளாக ,அவரடியில் வேலை செய்வதை பார்க்க ரொம்பவே ஆச்சரியமாக தான் இருந்தது மார்டீக்கு! அந்த ஆச்சரியத்தோடு , தன் காதலி ஜெனிபரை காண விரைகிறான் மார்டீ! அவளை சந்தித்து பேசி கொண்டிருக்கும் போது டாக்டர் பிரவுன் தன் கால இயந்திரத்தில் மீண்டும் வந்து சேர்கிறார்! அவர்கள் இருவரையும் தன்னோடு அவசரமாக எதிர்காலத்துக்கு வருமாறு அழைக்கிறார்! மார்டீ ஜெனிபருக்கு எதிர்காலத்தில் பிறக்க போகும் குழந்தைகளுக்கு ஏதோ பிரச்சனையாம்.. அதை தீர்க்க வேண்டும் என்ற காரணத்தோடு கால இயந்திரம் , மூவரையும் ஏற்றி கொண்டு , எதிர்காலத்துக்கு ஹாயாக பறந்து செல்கிறது!!

Back to the Future II

முதல் பகுதி முற்றும்!!


12 பின்னூட்டங்கள்

அழுகுனி குமாரி

images

ஆரம்பத்துல ரொம்ப ஆர்வமாக தான் இந்த குழந்தையோடு விளையாட ஆரம்பித்தான் எங்கள் குட்டி பையன்! ஆனால், கொஞ்ச நேரம் , அதனோடு விளையாடுவதற்குள் , அந்த குழந்தை வாய் விட்டு அலறி அழ ஆரம்பித்து விட்டது. கொஞ்சம் பயந்து தான் போயிட்டான் எங்க பையன். பயத்தில் , என்னிடம் வந்து தஞ்சம் அடைந்தான். எதற்கு அழுகிறது என்று விசாரிக்கும் பொழுது தான் தெரிந்தது, அந்த குழந்தைக்கு , அது சொன்னபடி எல்லாம் ஆடினால் மட்டுமே , நன்கு சிரித்து விளையாடும் என்று! என்ன கொடுமையடா இது!

இப்போதைக்கு , அந்த குழந்தையின் அழுகையை நிறுத்த ஏதாவது செய்ய வேண்டும்.. சரி நடப்பது நடக்கட்டும் என்று அந்த குழந்தையோடு விளையாட , துணிந்து களத்தில் இறங்கினேன்! அந்த குழந்தை என்னை ஒரு சூப்பர் மார்கெட் அழைத்து சென்றது! அங்கே முதலில் , காய்கறிகள் வாங்க வேண்டும் என்று சைகையில் சொன்னது.. சரி, என்று காய்கறிகள் இருக்கும் இடம் அழைத்து சென்றேன்! அங்கே, நிறைய காய்கறிகள்  பளிச் என்று காட்சி அளித்தன. ஆசையாக , ஒரு கிலோ தக்காளியை நான் கையில் எடுக்க , அவ்வளவு நேரம் சிரித்து கொண்டிருந்த குழந்தை , லைட்டா உறுமியது ! நான் , அப்பவே சுதாரித்து இருக்கணும் , நான் என் இஷ்டத்துக்கு காய்கறிகள் எடுப்பதை கவனித்தவுடன் , அது வீல் வீல் என்று அழ ஆரம்பித்து விட்டது! அதுக்கு என்ன காய் பிடிக்குமோ அதை தான் நான் வாங்கணுமாம்! சரி , சரி  என்று அவசர அவசர மாக , அதற்கு பிடித்த , உருளை கிழங்கையும் , கேரட்  மற்றும் பூசணியை , தள்ளு வண்டியில்  போட்ட பின்னால் தான் , குழந்தை அழுகையை நிறுத்தி , தன் கை கொட்டி சிரித்தது! அடுத்ததாக , பழங்கள் இருக்கும் இடத்தை கைகாட்டியது !

images1

 

எதற்கு வம்பு என்று , இந்த தடவை , பழங்கள் இருக்கும்  இடம் சென்று , அது எந்த பழம் என்று கை  காட்டும் வரை பொறுத்திருந்தேன்! அதுவும் , ரொம்ப ஆசையாக , ஆப்பிளை கை  காட்டியது! சரி , என்று ஒரு கிலோ ஆப்பிளை வாங்கி தள்ளு வண்டியில் போட்டு கொண்டேன்!  அழாமல் இருந்தால் சரி தான் என்று இருந்தது! வெளிஇடம்  வேறு! இந்த குழந்தை வேறு இன்னும்  பேச ஆரம்பிக்கவில்லை! திடீரென்று அழ ஆரம்பித்தால் , பிள்ளை கடத்தும் கும்பலை சேர்ந்தவள் என்று யாரேனும் நினைத்து விட்டால்  என்ன செய்வது என்ற பயம் வேறு எனக்கு! அடுத்து , பால் பொருட்கள் இருக்கும் இடத்தை கை காட்டியது! ஆழம் தெரியாம கால விட்டாச்சு! இனி, சற்று சூதானமாக  தான் கரையேற முடியும்! பால் பொருட்கள் இருக்கும் இடம் நோக்கி நகர்ந்தோம்!

 

அங்கே, பால் , வெண்ணெய் என்று அது கை காட்ட , அதன் கைக்கு கட்டுப்பட்ட ரோபோ போல நானும் அப்பொருட்களை அள்ளி போட்டு கொண்டே வந்தேன்! அது , தன் முகத்தை சாப்பிட்டு முடித்தவுடன் துடைக்க , Wet Tissues வாங்க சொல்லி  கை காட்டியது. நானும் அதை ஒரு எட்டு எட்டி எடுப்பதற்குள் , சற்றே  கால தாமதம்  ஆக, குழந்தை சந்திரமுகி ஆகியது! ஒருவாறு சமாளித்து , அதன் அழுகையை நிறுத்தியவுடன் , பாத்திரம் இருக்கும் திசை நோக்கி கை காட்டியது!

images4

 

எங்கே செல்லும் இந்த  பாதை என்று பாட்டு ஒன்று தான்   பாடவில்லை! தள்ளு வண்டியை தள்ளி கொண்டு பாத்திரம் இருக்கும் இடத்தை வந்து அடைந்தோம்! அடுப்பு , வாணலி , கரண்டி , தட்டு , கும்பா  என்று தன்  மகளை தனி குடித்தனம் வைப்பதற்கு முன்னே , அத்தனையும் பார்த்து  பார்த்து  வாங்கும் அன்னை போல், வாங்கி  குவித்து கொண்டிருந்தேன்! எதுக்கு குழந்தாய் இத்தனையும் உனக்கு என்று கேட்டு தெரிந்து கொள்ள ஆசை தான்! எதுக்கு வம்பு என்று உள் மனது எச்சரிக்க , கை கொண்டு என் வாயை பொத்தினேன்! குழந்தை மசாலா பொடி இருக்கும் கை காட்டியது! கிச்சன் சூப்பர் ஸ்டார் ஜூனியர் எதிலும் பங்கு எடுத்திருக்குமோ குழந்தை , என்று சந்தேக பார்வை பார்த்தவாறே  , உப்பும் , மிளகு பொடியும் எடுத்து போட்டு கொண்டோம்! திடீரென்று லக லக லக என்று ஒரே சத்தம்! பீதியில் உறைந்து போய் , திரும்பி பார்த்தால் ,குழந்தை தான் , சந்தோஷம் தாங்க முடியாமல் சிரித்து கொண்டிருந்தது! இனி , ஒரு வினாடி  கூட தாமதிக்காமல் , குழந்தையை வீட்டில் விட்டு விட வேண்டியது தான் என்று என் மனம் அவசரப்படுத்தியது!

சரி என்று அவசர அவசரமாக , குழந்தையின் வீடு சென்றால் , அங்கு ,  அதன் அம்மாவை காணவில்லை! ஐயோ பாவம் குழந்தை , இவ்வளவு நேரத்திற்குள் அதற்கு பசித்திருக்கும், என்று எண்ணி சமையல் செய்ய ஆயுத்தமானேன்! குழந்தை அங்கேயும் என்னை என் இஷ்டப்படி விடவில்லை! அது மாமியார் போலவும் , நான் புதிதாய் திருமணம் முடிந்து வந்திருக்கும் மருமகள் போலவும் என்னை நடத்தியது! இது அது என்று சைகை காட்டி , காட்டி , மசித்த ஆப்பிள் , கேரட், பூசணி , உருளை , பால் , வெண்ணெய் , உப்பு , மிளகு பொடி சேர்த்து வேக வைத்த காய்கறி சூப் என்று என்னை சக்கையாய்  வேலை வாங்கியது குழந்தை! அப்பாடி, வேலை முடிந்தது என்று நினைப்பதற்குள், குழந்தை , சாப்பாடு மேசையை கை காட்டியது! சரி , இதோடு ஆள விட்டா சரி  தான் என்று , மசித்த ஆப்பிள் ஒரு கிண்ணம் , காய்கறி சூப் ஒரு கிண்ணம் , வெட்டிய கொய்யா ஒரு தட்டு , குடிக்க தண்ணீர் , வாய் துடைக்க  wet tissues  என்று அது கை காட்டியது எல்லாம் எடுத்து வைத்தது போக , ஒரு கிலுகிலுப்பை , ஒரு லாலிபாப் , ஒரு டெடி பியரையும் , மேசை அருகே எடுத்து வைக்க சொன்னது !

images3                              images5

சரி, இவ்வளவு தூரம் வந்தாச்சு , அதுக்கு சாப்பாடை ஊட்டி விட்டு விடுவோம் என்று உடையைப் பாதுகாக்க குழந்தையின் கழுத்தில் கட்டித் தொங்கவிடப்படும் துணியை மாட்டி விட்டேன்! குழந்தை உடனே , ஆப்பிள் மசியலை கை காட்டியது! ஒரு ஸ்பூனை போட்டு , ஒரு ஐந்து தடவை வாயில் கொடுத்திருப்பேன் , உடனே அது வெட்டிய கொய்யாவை வாயில் கொடு என்று கை காட்டியது! சரி என்று ஒரு துண்டை கொடுத்தவுடன் , ஒரு கடி தான் கடித்திருக்கும் , அதற்கு பல் வலித்து , வழக்கம் போல் வீல்…. வீல்  என்று கதறி அழ ஆரம்பித்தது! ஒரு நிமிஷம் வெலவெலத்து போச்சு! அப்புறம், லாலி பாப் , டெடி பியர் , கிலுகிலுப்பை எல்லாத்தையும் எடுத்து கொடுத்தவுடன் , ஒரு வழியா அழுகைய நிறுத்துச்சு குழந்தை! பின்னர் , காய்கறி சூப்பை கை காட்டுச்சு!அதையும் , ஸ்பூன் போட்டு , அது  கேட்க , கேட்க பொறுமையா வாயில ஊட்டி கொண்டே வந்தேன்!

images6          images7

திடீர் என்று , குழந்தைக்கு காரம்  ஏறி ஒரே இருமல்! பின் தண்ணீரை குடிக்க கொடுத்து , wet tissue வைத்து வாயை துடைத்து முடித்தவுடன் , ஒரு ஏப்பம் விட்டு , தன் சாப்பாட்டை முடித்து கொண்டது குழந்தை ! தன் வயிறு  நிறைந்ததன்  அடையாளமாய் திரும்பவும் லக லக லக என்று சிரித்து பயமுறுத்தியது  குட்டி குழந்தை ! நான் பெற்ற குழந்தைகளுக்கு கூட இவ்வளவு பொறுமையா , சாப்பாடு ஊட்டி இருப்பேனா என்பது சந்தேகம் தான்!

baby-hazel-new-year-bash-med

அடுத்து தொட்டிலில் போட்டு , என்னை தாலாட்ட சொல்லுமோ என்று பயந்த நொடியில் Game  over  என்று என் மொபைல் ஸ்க்ரீன் பிளின்கியது! என் குட்டி பையன் , என்னை பார்த்து வெற்றி புன்னகை பூத்தான் !!!

யான்  பெற்ற இன்பம் தாங்களும் பெற விரும்புவோர் இங்கே கிளிக் செய்யவும்!

http://www.babyhazelgames.com/

 


2 பின்னூட்டங்கள்

100,000 விண்மீன்பேரடைகளில் வேற்றுலகவாசிகளைத் தேடல்

சரவணாவின் பரிமாணம்

எழுதியது: சிறி சரவணா

விண்ணியல் ஆய்வாளர்கள், வேற்றுலகவாசிகள் இருப்பதற்கான அடையாளம் உண்டா என அண்ணளவாக 100,000 விண்மீன்பேரடைகளில் தேடியுள்ளனர். இதுவரை “எதிர்பார்த்த” முடிவு கிடைக்கவில்லை. அதாவது  வேற்றுலகவாசிகள் இருப்பதற்கான எந்தவொரு தடயமும் இன்னும் கிடைக்கவில்லை. நாசாவின் வைஸ் (WISE) என்ற செயற்கைக்கோளைப் பயன்படுத்தியே இந்த ஆய்வாளர்கள் இந்த 100,000 பேரடைகளை ஆய்வுசெய்துள்ளனர்.

இந்த ஆய்வாளர்களின் கருத்துப்படி, ஒரு விண்மீன் பேரடையில் உள்ள விண்மீன்கள் வேற்றுலகவாசிகளால் குடியேற்றப்பட்டிருந்தால், அந்த சமுதாயத்தின் தொழில்நுட்ப பாவனையினால் வெளியிடப்படும் விரயமான சக்தி, அகச்சிவப்பு கதிர்வீச்சாக வெளியிடப்படும், இந்தக் கதிர்வீச்சை கண்டறியும் வண்ணமே வைஸ் செய்மதி உருவாக்கப்பட்டுள்ளது.

View original post 332 more words


4 பின்னூட்டங்கள்

வேற்றுக்கிரக நாகரீகங்கள் – பகுதி 4

சரவணாவின் பரிமாணம்

எழுதியது: சிறி சரவணா

நிகோலாய் கர்டாசிவ் தான் முதன் முதலில் நாகரீகங்களை இப்படி மூன்றாக வகைப்படுத்தியவர். இன்று நாம் பல்வேறு அறிவியல் துறைகளில் முன்னேறிவிட்டோம், உதாரணாமாக, நானோ தொழில்நுட்பம், உயிரியல் தொழில்நுட்பம், குவாண்டம் இயற்பியல் போன்றவற்றில் எமக்கு இருக்கும் அறிவு வளர்ந்துள்ளது. இந்த வளர்ச்சி நாம் எப்படி, வளர்ந்த நாகரீகங்களை வகைப்படுத்தலாம் என்பதிலும் செல்வாக்கு செலுத்துகிறது.

நானோ தொழில்நுட்பத்தின் வளர்ச்சி, வான் நியூமான் ஆய்விகளை உருவாக்குவதில் பெரும் பங்கு வகிக்கும். இயற்பியலாளர் ரிச்சர்ட் பைன்மான், “இயற்கையின் அடியில் அதிகளவு இடம் இருக்கிறது” என்கிறார். அதாவது, மூலக்கூறு அளவுள்ள ரோபோக்களை உருவாக்குவதை எந்த இயற்பியல் விதிகளும் தடுக்கவில்லை. இப்போதே ஆய்வாளர்கள், சில பல அணுக்களை மட்டுமே கொண்ட கருவிகளை உருவாக்கி இருக்கின்றனர். உதாரணாமாக, வெறும் நூறு அணுக்கள் நீளம் கொண்ட இழையால் ஆன கிட்டாரை உருவாக்கி இருக்கின்றனரே. ஆக, அணுவளவில் நாம் ஆராயவும், உருவாக்கவும் நிறைய இருக்கிறது.

View original post 982 more words


1 பின்னூட்டம்

வேற்றுக்கிரக நாகரீகங்கள் – பகுதி 3

சரவணாவின் பரிமாணம்

எழுதியது: சிறி சரவணா

இந்தப் பிரபஞ்சம் மிக மிக பெரியது, அதுவும், இரண்டு நட்சத்திரங்களுக்கு இடையில் இருக்கும் இடைவெளி ஒளியாண்டுகள் தூரத்தில் அளவிடப்படுகிறது. அதுமட்டும் அல்லாது, அதிகமான நட்சத்திரத்தொகுதிகள், உயிரினம் வாழ தகுதியற்ற கோள்களையே கொண்டுள்ளன. ஆகவே மூன்றாம் வகையை சேர்ந்த நாகரீகமானது, எண்ணிலடங்கா நட்சத்திர, கோள்த் தொகுதிகளை ஆய்வு செய்ய மிகச்சரியான முறையை தேர்ந்தெடுக்க வேண்டும். அப்படி எவ்வாறான முறையைப் பயன்படுத்தி பில்லியன் கணக்கான நட்சத்திரங்களையும், கோள்களையும் ஆராய முடியும்?

நாம் அடிக்கடி அறிவியல் புனைக்கதைகளிலும், திரைப்படங்களிலும் பார்த்திருப்போம், ஒரு விண்கப்பல், அதில் ஒரு ஐந்து பேர்கொண்ட குழு, அவர்கள் எதோ ஒரு கோளை நோக்கி பயணிப்பார்கள். ஆனால் இந்த முறை நடைமுறைக்கு ஒத்துவராது. பில்லியன் கணக்கான நட்சத்திரங்களையும் கோள்களையும் ஆராய இப்படி பெரிய பெரிய விண்கலங்களையும் மனிதர்களையும் அனுப்புவதென்பது முடியாத காரியம்.

View original post 369 more words


1 பின்னூட்டம்

வேற்றுக்கிரக நாகரீகங்கள் – பகுதி 2

சரவணாவின் பரிமாணம்

எழுதியது: சிறி சரவணா

முதலாம் வகையை சேர்ந்த நாகரீகமானது ஒரு கோள் சார்ந்த நாகரீகமாகும். தான் இருக்கும் கோள்களில் இருந்து தனக்கு தேவையான சக்தியைப் பெற்றுக்கொள்ளும். நமது சக்தி உற்பத்தியைப் போல பல மில்லியன் மடங்கு அதிகமாக அவை உற்பத்தி செய்யக்கூடியது.

முதலாம் வகை  நாகரீகத்தால் தனது கோளில் இருக்கும் காலநிலையை கூட மாற்றமுடியும், அவை அந்தளவு அதிகமான சக்தியை பயன்படுத்தக் கூடியளவு வளர்ந்தவை. நினைத்துப் பாருங்கள், ஒரு சூறாவளி உருவாகிறது. உடனே ‘டுஸ்’ என ஒரு ஸ்விட்ச்சை போட்டு, அந்த சூரவளியயே இல்லாமல் ஆகிவிடலாம்! அதேபோல, நிலநடுக்கம், எரிமலை வெடிப்பு என்பவற்றைக் கூட கட்டுப் படுத்தக்கூடிய அளவு சக்தியை கொண்டிருக்கும். இவ்வளவு ஏன்? நிலப்பரப்புகளைக் கடந்து கடல்களிலும், சமுத்திரங்களிலும் நகரங்களை நிர்மாணிக்கக்கூடிய வல்லமை கொண்டிருக்கும்.

View original post 806 more words