எண்ணங்கள் பலவிதம்

என் எண்ணங்களின் நீருற்று


1 பின்னூட்டம்

வேற்றுக்கிரக நாகரீகங்கள் – பகுதி 1

சரவணாவின் பரிமாணம்

எழுதியது: சிறி சரவணா

டாக்டர் மிச்சியோ காகுவின் கட்டுரை, “The Physics of Extraterrestrial Civilizations” இன் தமிழாக்கம். சில புதிய விடயங்களையும் சேர்த்து எனது பாணியில் இங்கு தருகிறேன். கட்டுரை சற்று நீளமாக இருப்பதால், பகுதிகளாக எழுதுகிறேன்.

காலம்சென்ற பிரபல வானியலாளர், கார்ல் சேகன் ஒரு மிக முக்கியமான கேள்வியை முன்வைத்தார்.

“மில்லியன் வருடங்கள் வாழ்ந்துவிட்ட நாகரீகங்கள் எப்படி இருக்கும்? எம்மிடம் இப்பொது ரேடியோ தொலைகாட்டிகள், விண்வெளி ஓடங்கள் என்பன சில தசாப்தங்களாக மட்டுமே உண்டு; எமது தொழில்நுட்ப நாகரீகம் வெறும் சில நூற்றாண்டுகள் மட்டுமே கண்டது. இப்படி இருக்கும் போது, சில பல மில்லியன் வருடங்களாக இருக்கும் தொழில்நுட்ப நாகரீகங்கள் எப்படி இருக்கும்? அவற்றுக்கு நாம், அதாவது இந்த மனித இனம் குரங்குபோல தெரியுமோ?”

இன்றுவரை விடை தெரியாத ஒரு குருட்டு விடயமாக இருப்பது என்னவென்றால், இந்த விரிந்த பிரபஞ்சத்தில் நாம் மட்டுமா இருக்கிறோம் என்பதே. பூமியைத் தவிர வேறு எங்கும் உயிர் இருப்பதற்கான எந்தவொரு தடயமும் இல்லாதிருப்பினும், இந்த பாரிய பிரபஞ்சத்தில் நிச்சம் எம்மைப் போலவே வேறு அறிவுள்ள உயிரினங்கள் இருக்கவேண்டும் என்பது பெரும்பாலான அறிவியலாளர்களின் கருத்து.

View original post 541 more words


33 பின்னூட்டங்கள்

என்னடா இப்புடி பண்ணுறியேடா..

 

சில மாதங்களுக்கு முன்னால் , எனக்கும், என் இரு பசங்களுக்கும், திடீரென்று ஒரு ஆசை.. நாம ஏன் ஒரு வளர்ப்பு பிராணி வளர்க்க கூடாது! இது வளர்க்கவா இல்லை அது வளர்க்கவா என்று ஆளுக்கு ஒரு பிராணியை சொல்லி , கடைசியில் பூனை வளர்ப்பது என்று முடிவாயிற்று! பூனை வளர்க்கலாம் தான்….. ஆனா என்று நான் ஒரு பெரிய இழு இழுத்தேன்! எதுக்கு?? காரணம் இருக்கு. பூனை வளர்த்தால், அப்பூனையின் முடி நம் மூக்குக்குள் சென்று விட வாய்ப்புகள் அதிகம். ஏற்கனவே , அலர்ஜி , ஆஸ்துமா போன்ற பிரச்சனைகள் உண்டு! அதனால் என்ன செய்யலாம் என்று யோசித்து கொண்டிருக்கும் போதே பெரிய பையன் ஒரு யோசனை சொன்னான்!talk1

அவன் சொன்னான், நாம ஏன் ஒரு டாக்கிங் டாம்(Talking Tom ) வளர்க்ககூடாது! எனக்கும் அது ஒரு நல்ல முடிவாகத்தான் பட்டுது. ஏன் என்றால், அது ஒரு மெய்நிகர் பூனை (Virtual Cat ) . டாக்கிங் டாம் என்பது ஒரு Android App. அதை நாம் நமது Android போனிலோ இல்லை டேப்லட்டிலொ (Tablet ) பதிவிறக்கம் செய்து கொள்ளலாம். நாம ஏதாவது பேசினால் , அது சொன்னதை சொல்லும் கிளி பிள்ளை போல் திரும்ப பேசும்! நம் காலை உரசி கொண்டு நிற்காது. நம் வீட்டு பாலை தெரியாமல் குடிக்காது. நம் மடியில் சொகுசாக வந்து படுக்காது.எலியை தூக்கி கொண்டு வந்து நம் வீட்டில் போடாது. காலுறைகளை கடித்து வைக்காது . முக்கியமாக மியாவ்.. மியாவ் என்று கத்தி நம் உசுர வாங்காது! டபுள் ஓகே சொன்னேன் நான்! அன்றைய தினமே எங்கள் வீட்டிற்கு டாக்கிங் டாம் வந்து சேர்ந்தது!

talk6

பெரிய பையனுக்கு, ரொம்பவே மகிழ்ச்சி! கண்ணை இமை காப்பது போல் அதை நன்கு பார்த்து கொண்டான்! அதற்கு பசித்த போது , அதற்கு தேவையான உணவை வாங்கி அதன் வாயில் கொடுத்து சாப்பிட வைத்தான்! நேரத்துக்கு தூங்க வைத்தான்! சிறிது நேரம் அதன் கூட விளையாடினான்! அதற்கு உச்சா , கக்கா வந்தால் உடனே அப்பூனையை கழிப்பறை செல்ல பழக்கினான்! அதனால் நாளொரு மேனியும் , பொழுதொரு வண்ணமுமாக பூனை வளர்ந்து வந்தது! அவ்வாறு பொறுப்பாக வளர்க்கும் போது அதற்கு ஏற்றாற் போல் நாணயங்கள் பரிசாக கிடைக்கும்! பூனையுடன் விளையாடும் போதும் , ஊக்க பரிசாக நாணயங்கள் கிடைக்கும். அவ்வாறு சேகரித்த நாணயங்களை கொண்டு , பூனைக்கு தேவையான உணவுகளை வாங்கி கையிருப்பில் வைத்து கொள்ளலாம். அதற்கு பசிக்கும் போது ஊட்டி கொள்ளலாம்!

 

எல்லாம் நன்றாகத்தான் போய் கொண்டிருந்தது! ஆசை அறுபது நாள் , மோகம் முப்பது நாள் என்று சும்மாவா சொன்னாங்க! ஒரு நாள் எங்க பெரிய பையனுக்கு டாக்கிங் டாம் போரடித்து போயிற்று. அதை கண்டு கொள்ளாமல் விட்டு விட்டான். அதற்கு பதிலாக, டாக்கிங் ஜிஞ்சர், பென் , டாக்கிங் ஏஞ்செலா என்று நிறைய பதிவிறக்கம் செய்து அவற்றோடு விளையாட ஆரம்பித்து விட்டான். இந்த ஜிஞ்சர் பூனை , நம்ம டாக்கிங் டாமுக்கு கசின், அதாங்க உடன் பிறவா சகோதரன்! பென் என்பது ஒரு சோம்பேறி பேசும் நாய், அப்புறம் , இந்த ஏஞ்செலா இருக்கே, அது அசின்! பெரிய அழகினு நினைப்பு அதுக்கு சாப்பாடு ஊட்டினது பத்தாது என்று , அதன் பல் இடுக்கில் சிக்கி இருக்கும் உணவு துகள்களை பிரஷ் வைத்து சுத்தம் வேறு செய்து விட வேண்டும்! அசப்புல பாக்க , டார்லிங் படத்து பேய் மாதிரி ஒரு மூஞ்சி! ஆனாலும் எங்க வீட்டு பசங்களுக்கு இவுங்க எல்லாத்தையும் பிடிக்க தான் செய்யுது!!talk3 talk9 talk10 talk14

இப்படியாக, அசின் , கசின் என்று பெரிய பையன் திசை மாறி போக, டாக்கிங் டாமை கண்டு கொள்ள ஆள் இல்லாமல் போயிற்று! அப்போ தான் நுழைந்தான் எங்க வீட்டு குட்டி பையன்! டாக்கிங் டாம்மோடு ஆசையாக விளையாட ஆரம்பித்தான்! அவன் ரொம்பவே சேட்டைக்காரன்! கிளி மாதிரி வளர்த்த டாக்கிங் டாமை குரங்கு கையில குடுத்த மாதிரி! நாணயங்களை தண்ணீராக செலவழிப்பான்! எது தேவை , எது தேவை இல்லை என்பதை பற்றி கவலை கொள்ளாமல் , டாக்கிங் டாமுக்கு , வித விதமாய் உணவு வகைகளை வாங்கி ஊட்டி தள்ளினான்! அதுவும் காணாததை கண்டதை போல தின்று தீர்த்தது! அதற்கு சாப்பாடு குடுக்க வேண்டியது , கழிப்பறையில் விட வேண்டியது , அரை குறையாய் தூங்க விடுவது என்று அவன் இஷ்டத்திற்கு டாம் வளர்ந்து வந்தது! மருந்துக்கு கூட , டாமோடு விளையாடுவது கிடையாது. கொஞ்சம் கொஞ்சமாய் நாணயங்கள் குறைந்து ஒரு கட்டத்தில் நாணயங்கள் சுத்தமாக இல்லாமல் போயிற்று.. அன்றைக்கு ஆரம்பித்தது தலை வலி எனக்கு!

talk2       talk13

நாணயங்கள் காலி ஆனதால் உணவு சுத்தமாக தீர்ந்து போனது! என்ன செய்வதென்று தெரியாமல் , எங்க குட்டி பையன் திரு திருவென்று முழித்தபடி என்னிடம் வந்து சேர்ந்தான். அவனுக்கு கவலை , பூனைக்கு ஆப்பிள் வாங்க முடியவில்லையே, ஆரஞ்சு வாங்க முடியவில்லையே என்று! சரி, பூனையோடு விளையாடினால் நாணயங்கள் கிடைக்கும் என்று விளையாட நினைத்தால் , பூனை பசி மயக்கத்தில் இருந்தது! என்ன செய்வது என்று தெரியாது , பெரிய பையனை கூப்பிட்டு கேட்டால் , அவன் சொல்லுகிறான்… நீங்க , அப்பப்ப அது கூட விளையாடி விளையாடி நாணயங்களை சேர்த்திருக்கணும் என்று!

 

talk15     talk17       talk11

விட்டால்… என்னை கழைக்கூத்தாடி ஆக்கிடுவானுங்க போல ! இந்த பூனையின் பசியை தீர்ப்பதற்காக டாக்கிங் டாம் App நியூஸ் லெட்டெருக்கு subscribe செய்தேன். ஒரு 1500 நாணயங்கள் அதற்காக கொடுத்தார்கள்! அப்பாடா.. என்று சொல்லி முடிப்பதற்குள் , எங்க குட்டி பையன் அதை மொத்தமாக காலி செய்திருந்தான்! அதன் பின்னே டாக்கிங் டாம் Youtube videos உக்கு subscribe செய்தேன்! அதுவும் அதே வழியில் காலி ஆகியது! பூனை பசி எடுக்க ஆரம்பித்தவுடன் கையில் ஒரு கோழி ரோஸ்ட் படத்தை வரைந்த அட்டையை தூக்கி காண்பித்து ஆ.. ஆ… ஆ என்றுஅதன் கையை வாயில் சுட்டி காட்டி எதையாவது சாப்பிட ஊட்டி விட மாட்டாயா என்று என் குட்டி பையனை பார்த்து கேட்டு கொண்டிருந்தது !

பூனை மியாவ் என்று உயிரை வாங்கினால் கூட பரவாயில்லை போல.. இது ஆ.. ஆ.. ஆ .. என்று கத்துவது எரிச்சல் ஊட்டுவதாக இருந்தது. நிஜ பூனையாக இருந்தால் கூட ஒரு கிண்ணத்தில் பாலை ஊற்றி வைத்து அதன் வாயை அடைத்து விடலாம்! இந்த மெய் நிகர் பூனையை என்ன செய்வது என்று தெரியாமல் முழித்தோம்! உடனே , பெரிய பையன் சொன்னான் , கொஞ்ச நாள் அந்த பூனையை கண்டு கொள்ளாமல் விட்டு விடுங்கள் , அது ஓடி போனாலும் போயிடும் என்று! வேறு வழி , இரண்டு வாரத்துக்கு எட்டி கூட பார்க்காமல் இருந்தோம். இரு வாரங்கள் கழிந்த பின்னே , மனது கேட்காமல் சென்று பார்த்தேன்! பார்த்தவுடன் அழுகையே வந்து விட்டது! பூனை இரு வாரமாய் கழிப்பறை செல்லாமல் , பூச்சிகள் தலையை வட்டமடிக்க எங்களுக்காக காத்து கொண்டிருந்தது!

இப்பொழுதும் இந்த நிலைமையை சமாளிக்க, பெரிய பையன் தான் ஆபத்பாந்தவனாய் வந்தான்! தன் நண்பனிடம் கேட்டு Hacked டாக்கிங் டாம்மை போட்டு கொடுத்தான்! அதில் நாணயங்களுக்கு பஞ்சம் இல்லாது நிறைய இருந்தது! சின்ன பையனுக்கோ கொண்டாட்டம்! கொஞ்ச நாட்களிலேயே எப்படி இருந்த நான் இப்படி ஆகிட்டேன் என்பது போல் , இராஜ போக வாழ்க்கை வாழ்ந்து கொண்டிருந்தது டாக்கிங் டாம்! அதன் உடை , உணவு , தாங்கும் இடத்திலிருந்து எல்லாவற்றிலும் செல்வச்செழிப்பு தாண்டவமாடியது! சரி , இத்தோடு பிரச்சனை ஓய்ந்தது என்று நினைத்தால், அது முடியவே முடியாது போல!

talk7

 

 

talk5

 

அப்படி என்ன பிரச்சனை?? அது ராஜ போக வாழ்க்கை வாழ்ந்து என்ன பிரயோஜனம், எங்க குட்டி பையன் , அதை நேரத்துக்கு தூங்க விட மாட்டிகிறான்! அது கொட்டாவி விட்டு கொண்டே சாப்பிடுகிறது.. அதாவது பரவாயில்லை, அது உச்சா , கக்கா போவதற்கு கூட விட மாட்டிகிறான்! அது அடக்க முடியாது காலை காலை ஆட்டி கொண்டு நாட்டியமாட , இங்கே இவன் வெடி சிரிப்பு , சிரித்து கொண்டிருக்கிறான்!

talk12                 talk16

டேய்.. பாவம்டா… அதுக்கு வயிறு வலிக்க போகுது டா… அத கொஞ்ச நேரம் நிம்மதியா தூங்க விடுடா… இவை எல்லாம் என் புலம்பல்கள்!! என்னடா இப்புடி பண்ணுறியேடா!!


பின்னூட்டமொன்றை இடுக

மின் விசிறிக்கு என்ன ஆச்சு??

இல்லத்தரசியின் பார்வையில் அறிவியல் என்ற பெயரில் புதிய தளம் ஆரம்பித்திருக்கிறேன்! இதில் எளிய தமிழில் அறிவியலை யாவரும் புரிந்து கொள்ளும் படியாக பதிவுகளை பதிந்து கொண்டிருக்கிறேன். படித்து விட்டு உங்கள் கருத்துக்களை மறக்காமல் சொல்லுங்கள் நண்பர்களே…

இல்லத்தரசியின் பார்வையில் அறிவியல்

images (4)

நேற்று வரை நல்லா ஓடி கொண்டிருந்த மின் விசிறி திடீரென்று சொல்லாமல் கொள்ளாமல் எனக்கு என்ன என்று நின்று விட்டதா?? உடனே என்ன செய்வார்கள், எலக்ட்ரீஷியனை அவசர அவசரமாக அழைத்து , யப்பா… ஏதாவது பண்ணுப்பா.. உனக்கு புண்ணியமா போகும்.. புழுக்கம் தாங்கலை… என்று அங்கலாய்ப்பார்கள்! அவரும் மின் விசிறியை தொட்டு கூட பார்க்காமல் சொல்லுவார்.. Capacitor போயிருக்கும்! அப்படி சொல்லவில்லை என்றால் அடுத்ததாக அவர் உபயோகிக்கும் வார்த்தை.. காயில் எரிந்து போயிருக்கும்! இப்போ நான் கேட்குர கேள்விக்கு பதில் சொல்லுங்க .. என்னைக்காவது அப்படி என்றால் என்ன?? மின் விசிறியினுள்ளே அதன் பயன் பாடு என்ன?? ஒரு தடவையாவது கேட்டு அறிந்ததுண்டா????? உங்கள் பதில் இல்லை என்றால் மேற்கொண்டு படியுங்கள் ..

Fan 2

அதோ அந்த வெள்ளை நிற உருளை படத்தில் இருக்கறதே.. அது தான் மின்தேக்கி (capacitor )! இது என்ன மின்கலமா (Battery) என்று வியப்பவர்களுக்கு சொல்லுகிறேன்.. இது மின்கலம்(Battery) அல்ல ஆனால் மின்கலம் (Battery)மாதிரி.. ஆமாம்,  மின்தேக்கியிலும்(capacitor)  மின்கலம் (Battery) போன்று சார்ஜ் ஏற்றி வைத்து கொள்ளலாம். இந்த இரண்டுக்கும் உள்ள வித்தியாசம் ஒன்றே ஒன்று தான்!மின்கலம்(Battery) உபயோகம் செய்ய செய்ய காலி ஆகும்.  மின்தேக்கியோ (Capacitor) உபயோகித்த மறுநொடியே தான் சேமித்து வைத்த அத்தனை சார்ஜையும் காலி செய்து விடும் இயல்புடையது .

flashgun

இந்த  மின்தேக்கியை (capacitor) எளிதாக புரிந்து கொள்ள நாம் Flash Camera வை பற்றி சிறிது நேரம் பார்க்கலாம்…

View original post 182 more words


4 பின்னூட்டங்கள்

சோப்பு ஒரு சிறப்பு பார்வை

இல்லத்தரசியின் பார்வையில் அறிவியல் என்ற பெயரில் புதிய தளம் ஆரம்பித்திருக்கிறேன்! இதில் எளிய தமிழில் அறிவியலை யாவரும் புரிந்து கொள்ளும் படியாக பதிவுகளை பதிந்து கொண்டிருக்கிறேன். படித்து விட்டு உங்கள் கருத்துக்களை மறக்காமல் சொல்லுங்கள் நண்பர்களே…

இல்லத்தரசியின் பார்வையில் அறிவியல்

images

சோப்பு பத்தி பேச என்ன இருக்கு?? இருக்கே.. நிறைய இருக்கே… நாம் அன்றாடம் உபயோகிக்கும் சோப்பு நம்மை கிருமிகளிடம் இருந்து பாதுகாக்கிறது. குளியல் சோப்பு , கை கழுவதற்கு என்று தனியாக சோப்பு , முகம் கழுவுவதற்கு என்று ஒவ்வொன்றுக்கும் தனி தனியே கடைகளில் விற்கபடுகிறது. இந்த சோப்புகள் என்னவோ நம்மை கிருமிகளிடம் இருந்து பாதுகாப்பது உண்மை தான்.. ஆனால் விளம்பரத்தில் சொல்வது போல் எல்லா சோப்புகளும் 99.9% கிருமிகளை அழிப்பது இல்லை ! பொதுவாக சோப்புகள் இயற்கையாக விளையும் காய்கறி கொழுப்புகள் மற்றும் எண்ணெயிலிருந்து தயாரிக்க படுகின்றன… அவை ரொம்பவே சுத்தமானது.

soap

வெறுமனே தண்ணீர் வைத்து கைகளை கழுவும் போது கைகள் சுத்தமாவது இல்லை! பாக்டீரியா போன்ற கிருமிகள் நம் கைகளில் ஒட்டி கொண்டு தான் இருக்கும். அடுத்து நாம் சாப்பிடும் போது அக்கிருமிகள் நம் கைகளில் இருந்து வாய்க்கு சென்று விடும் வாய்ப்புகள் அதிகம். சாதாரண சோப்புகள் கூட கிருமிகளை விரட்டும் அதனை ஒழுங்காக உபயோகிக்கும் வழிதனை அறிந்து கொண்டால்..   சோப்பு போட்டு கைகளை நன்கு தேய்த்து   பின் ஓடும் தண்ணீரில் கைகளை கழுவுவது நலம் பயக்கும்.. அதன் பின்னே நல்ல காய்ந்த  சுத்தமான  துண்டில் கைகளை துடைத்து கொள்ளும் போது ஓரளவு சுத்தமாகும். உணவு தயாரிப்பில் ஈடுபடுபவர்கள் அதற்கு முன்னே நல்ல தரமான கிருமி நாசினிகள் உடைய சோப்பை  பயன்படுத்தும் போது கிருமிகள் முழுவதும் அழிந்து விடுகின்றன. சோப்பு வழங்கு…

View original post 410 more words


10 பின்னூட்டங்கள்

பதிவுலக நண்பர்களை அன்புடன் அழைக்கின்றேன்

மரியாதைக்குரிய பதிவுலக நண்பர்களுக்கும் , வாசக பெருமக்களுக்கும் என் பணிவான வணக்கங்கள்! இது என் நூறாவது பதிவாக அமைந்ததில் எனக்கு பெருமகிழ்ச்சி.. இந்த பொன்னான நாளில் என்னையும் ஒரு எழுத்தாளராக மதித்து, ஊக்குவித்து வந்த அத்தனை பேருக்கும் என் மனமார்ந்த நன்றிகளை கூற கடமை பட்டிருக்கிறேன். என்னை முதன் முதலில் கண்டு கொண்டு இடைவிடாது ஊக்குவித்த ரஞ்சனி அம்மா  http://pullikkolam.wordpress.com/ , கவிஞர் ரூபன் அண்ணா அவர்கள்  http://2008rupan.wordpress.com/ , அன்பின் மறுஉருவம் காமாட்சி அம்மா https://chollukireen.wordpress.com/, கவிதாயினி சகோதரி வேதா அவர்கள் http://kovaikkavi.wordpress.com/, மதிப்பிற்குரிய அண்ணன் பாண்டியன் அவர்கள் http://kadaisibench.wordpress.com/, நல்வழி காட்டும் ராஜலட்சுமிபரமசிவம் மேடம் http://rajalakshmiparamasivam.blogspot.com/, நம் பாரத பாரம்பரியத்தை, சம்பிரதாயங்கள் , புதிது புதிதாய் செய்திகள் என்று ஆயிரம் பதிவு பதித்த விஜிகுமாரி மேடம்  https://chinnuadhithya.wordpress.com/ , நண்பர் ஆறுமுகம் சார் https://aarumugamayyasamy.wordpress.com/, நம் பாரம்பரிய சமையலை உலகறிய செய்து வெற்றி கொடி நட்டிய மதராசி அவர்கள் http://madraasi.com/, மதிப்பும் மரியாதைக்கும் உரிய டாக்டர் முருகானந்தம் அவர்கள்  http://hainalama.wordpress.com/ , தமிழை பேணி பாதுகாக்கும் யாழ்பாவணன் ஐயா அவர்களுக்கும் http://yarlpavanan.wordpress.com/, என் பிறந்த ஊர்க்காரரும் இணைய சித்தர் என்று பதிவுலக நண்பர்களால் அன்புடன் அழைக்கப்படும் திண்டுக்கல்  தனபாலன் சார் http://dindiguldhanabalan.blogspot.com/ அவர்களுக்கும், இனிய சித்ரா அக்கா http://chitrasundar5.wordpress.com/ அவர்களுக்கும் என் இதயம் கனிந்த நன்றிகள் !

இன்று இந்த பதிவை பதிய முக்கிய காரணம் என் புதிய வோர்ட்ப்ரெஸ் தளத்தை அறிமுகம் செய்வதற்காக.. தளத்தின் முகவரி

http://mahalukshmiv.wordpress.com/

தளத்தின் பெயர் : இல்லத்தரசியின் பார்வையில் அறிவியல்

இது என் நெடு நாளைய கனவு! அறிவியல் சார்ந்த பதிவுகளை எளிய தமிழில் பாமரருக்கும் புரியும் வகையில் எடுத்துரைக்கவே இந்த தளத்தை ஆரம்பித்து இருக்கிறேன்… நிறைய பதிவுகளை பதித்து நான் படித்த படிப்புக்கும், என் தாய் மொழியாம் தமிழுக்கும் பெருமை சேர்ப்பேன் என்ற நம்பிக்கையோடு தொடங்குகிறேன்… உங்கள் அனைவரின் மேலான ஆதரவுக்காக வழி மேல் விழி வைத்து காத்து கொண்டிருக்கிறேன்! அத்தளத்தில் என் முதல் பதிவு நான் படித்த மின்னியல் மற்றும் மின்னணுவியல் படிப்பை சார்ந்தது. அந்த பதிவின் முகவரி இதோ ,

http://mahalukshmiv.wordpress.com/2014/12/19/%E0%AE%AE%E0%AE%BF%E0%AE%A9%E0%AF%8D-%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%9A%E0%AE%BF%E0%AE%B1%E0%AE%BF%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AF%81-%E0%AE%8E%E0%AE%A9%E0%AF%8D%E0%AE%A9-%E0%AE%86%E0%AE%9A%E0%AF%8D/

images (5)

 


4 பின்னூட்டங்கள்

கல்யாண பெண்ணே காதை கொஞ்சம் குடு

bride3

ஒரு சாயுங்காலம் வழக்கம் போல் சப்பாத்தியை சுட்டு அடுக்கி விட்டு , அதில் ஒன்றை எடுத்து கொண்டு பக்கத்து வீட்டு குஜராத்தி பாபிஜீயிடம் காட்டி , அதற்கு ஐந்துக்கு மூணரை மதிப்பெண் வாங்கி கொண்டு வீட்டுக்கு திரும்பும் பொழுது பக்கத்து வீட்டு பெண் பார்த்து சிரித்தாள். நானும் சிநேகமாய் சிரித்து விட்டு என் சப்பாத்திக்கு கிடைத்த மார்க்கை அவளிடம் பகிர்ந்து கொண்டேன். அவளும் ஒரு வாய் பிய்த்து சாப்பிட்டு பார்த்து நன்றாக இருக்கிறது என்று சர்டிபிகேட் கொடுத்தாள். அதன் பின்னே நடந்த சம்பாஷணைகள்…

 

 

பெண் : எங்க வீட்டில் இரவு எப்பொழுதும் சோறு தான். சப்பாத்தி எல்லாம் போட எங்கள் பாட்டி அனுமதிக்க
மாட்டார். ஆனால் நான் கல்யாணம் செய்து செல்லும் வீட்டில் இரவு எனக்கு பிடித்த மாதிரி எல்லா நாளும்
சப்பாத்தி தான்…

நான் : அதனால் தானோ என்னவோ அவர்கள் உன்னை தங்கள் வீட்டு மருமகள் ஆக்க பிரிய பட்டிருக்கிறார்கள்!
இன்னும் ஆறு நாள் தானே பாக்கி இருக்கிறது கல்யாணத்திற்கு, வேலைகள் எல்லாம் எப்படி போய் கொண்டிருக்கிறது ??

bride

பெண் : எல்லாம் நல்லா தான் போய் கொண்டிருக்கிறது.. எனக்கு தான் நாள் நெருங்க நெருங்க பயம் கூடி கொண்டே போகிறது . எனக்கு வரப்போகும் கணவரிலிருந்து, அவருடைய வீட்டுகாரர்கள் வரை எல்லோரும் புதியவர்கள். கூட்டு குடும்பம் வேறு. எப்படி தான் சமாளிக்க போகிறேனோ தெரியவில்லை. நினைத்தாலே பதை பதைப்பாக இருக்கிறது. எனக்கு கோபம் வேறு அதிகமாக வரும் . பிறந்த வீட்டில் கோபத்தை நினைத்த மாத்திரத்தில் வெளி காட்டுவது போல், புகுந்த வீட்டில் காட்டி விடாதே என்று ஒரு மாதமாக ஒவ்வொருவராய் அழைத்து உபதேசம் கொடுக்கின்றனர்!

நான்: ஆரம்பத்தில் அப்படி தான் இருக்கும் . கண்ணை கட்டி காட்டில் விட்டது போல் பாதை தெரியாது மனது குழம்பும். அதற்காக முகமூடி அணிந்து கொள்ள மட்டும் நினைக்காதே. நீ நீயாக இரு .. ஒரு தடவை முகமூடி அணிய தொடங்கி விட்டால், நீ உன் வாழ்நாள் முழுக்க அதை கழட்ட இயலாது. உனக்கு எது பிடிக்கும் எது பிடிக்காது என்பதை முதலிருந்தே சொல்லி விடு. உன் வீட்டில் இருக்கும் ஒவ்வொருவருடனும் மனம் விட்டு பேச கற்று கொள். அவர்கள் உன்னை பற்றி அறிந்து கொள்ள ஒவ்வொரு சந்தர்ப்பத்திலும் முயற்சி எடு.  அவர்கள்  உன்னை முழுதாய் புரிந்து கொள்ளும் வரை நீயும் பரஸ்பரம் அவர்களை புரிந்து கொள்ள முயற்சி செய்!!

 

பெண் :  கூட்டு குடும்பமாக இல்லாமல் தனிக்குடித்தனம் செய்தால் நன்றாக இருக்குமா??

நான் : கண்டிப்பாக இல்லை! இவ்விரண்டும் இக்கரைக்கு அக்கரை பச்சை என்பது போன்ற விஷயம்! தனிக்குடித்தனம் செய்யும் பொழுது நாம் தான் ராணி.. நாம்  இயற்றுவது தான் சட்டம். பிரச்சனை என்று ஒன்று வரும் வரை எல்லாம் நன்றாக தான் இருக்கும்.. வீட்டில் யாருக்கேனும் உடம்பு சரி இல்லை என்றால் கூட உதவி செய்ய ஆள் இருக்காது.. தனித்தே எல்லா சிரமங்களையும் சமாளிக்க வேண்டும். வீட்டு நிர்வாகத்தை எடுத்து நடத்துவது  என்பது அவ்வளவு சுலபமான காரியம் இல்லை.. எது அவசியம், எது அவசியமில்லை என்று  ஒவ்வொரு விஷயங்களையும் ஆராய்ந்து பார்த்தே அறிந்து கொள்ள முடியும்.. அதற்கு சிறிது காலம் பிடிக்கும். கூட்டு குடும்பத்தில் இருக்கும் பொழுது இவற்றை  கொஞ்சம் கொஞ்சமாக நீ கற்று கொண்டு விடலாம்!

bride1

பெண் : எனக்கு வரப்போகும் கணவர் இது  வரை ரொம்பவே நல்லவராக தான் தெரிகிறார்! இதுவரை நீ இப்படி தான் இருக்க  வேண்டும்  அப்படி தான்   இருக்க வேண்டும்  என்று  எந்த கோட்பாடுகளும்  எனக்கு விதிக்கவில்லை ….. ..

 

நான் : அவசரப்படாதே… ஆரம்பத்தில் எல்லோரும் இனிக்க இனிக்க தான் பேசுவார்கள்! ஓரிரு மாதங்கள் சென்ற பிறகே உண்மையான முகம் வெளிச்சத்துக்கு வரும்…  என் மனைவி என் வீட்டுக்காரி என்ற எண்ணம் மனதில் தோன்றியவுடன்  ஒவ்வொன்றாக கோட்பாடுகளை நம் மேல் திணிக்க ஆரம்பிப்பர்.. இந்த தருணத்தில் தான் சண்டைகள் முளைவிட ஆரம்பிக்கும். இவ்வாறாக ஆரம்பிக்கும் சண்டைகளே உங்கள் இருவருக்கும் இடையே இருக்கும் உறவை பலப்படுத்தும்…  அதனால் சண்டைகள் வந்தால் உடைந்து போய் விட வேண்டாம்..  அத்தகைய நேரங்களில்  நீங்கள் இருவரும் சந்தோஷமாக பேசி சிரித்த தருணங்களை நினைவில் கொள்ளவும். சண்டைகள் வர வர அந்த சண்டைகள் ஏன் எதனால் எப்படி வந்தது என்று ஆராய்ந்து அவற்றை களைய முற்பட வேண்டும்.. அவ்வாறு செய்ய முற்படும் போது சண்டைகள் தீர்ந்து நாளடைவில் சந்தோஷம் பூத்து குலுங்கும்.  இவ்வாறு தவறுகள் திருந்தப்படும் போது ஒரு 7 அல்லது 8 வருடங்கள் கழித்து நீ அவருக்காகவும் அவர் உனக்காகவும் நிறையவே மாறி இருப்பது கண்கூடாக தெரிய வரும். நீயே அம்மாற்றங்கள் கண்டு ஆச்சரியப்படுவாய்!

bride4

 

பெண் : மிக்க நன்றி! கல்யாணத்திற்கு முந்தைய நாள் இரவே வந்து விடுங்கள்!

நான் : கண்டிப்பாக! எங்களுடைய ஆசிர்வாதங்கள் உனக்கு எப்பொழுதும் உண்டு!


8 பின்னூட்டங்கள்

சில எண்ணங்கள் -52(அம்மா பையன் ஸ்பெஷல்)

அம்மா : என்னடா சனி கிழமையும் அதுவுமா ஒரே சோகமா இருக்க ??
பையன் : என் கிளாஸ் மேட் சொன்னான் ஏதோ ஒரு செயிண்ட் கரெக்டா second saturday அன்னைக்கு போய்                                        சேர்ந்துட்டாராம்… அதனால தான் எல்லா second saturday வும் லீவு விடுறாங்களாம்.. அவரு போனதே                                போனாரு ஒரு third saturday போயிருக்கலாம்… இன்னிக்கு லீவா இருந்திருக்கும்..

அம்மா : அடபாவி ! சரி யாருடா அந்த செயிண்ட்???

பையன் : யாரோ John L . Baird
அம்மா : என்னடா டீவீ கண்டு புடிச்சவரை போய் செயின்ட் அது இதுனு சொல்ற?
பையன் : ஹீ.. ஹீ.. உங்களுக்கு தெரியுமா.. நான் உங்களுக்கு என்னத்த தெரிஞ்சிருக்க போதுனு வாய்க்கு வந்த பெயரை அடிச்சி விட்டேன்..
அம்மா : !!!

graphics-saturday-715122

 

 

பையன் : அம்மா.. ப்ளீஸ்.. Wash the affected area with lime water. Apply baking soda and cold cream. place ice pack on the affected area . If its itching apply calamine lotion… ஹும்.. ஹும்.. சீக்கிரமா…

அம்மா : டேய்.. கொசு உன்னைய கடிச்சதுக்கு பதிலா என்ன கடிச்சிருக்கலாம்! உஸ்.. அப்பா.. முடியல!

images

 

 

பையன்:  என்னம்மா.. பக்கத்து வீட்டு ஆன்ட்டி ஏதோ ஒரு கவரை உங்க கையில கொடுத்து உள்ள கோப்ரா இருக்கு                       கொஞ்சம் உங்க வீட்டு பிரிட்ஜ் உள்ள வையுங்கனு ஹிந்தில சொல்லிட்டு போறாங்க.. நீங்களும் ஈ..ன்னு                       சிரிச்சிட்டே வாங்கி உள்ள கொண்டு போறீங்க! உள்ள நிஜமாவே cobra வா இருக்கு???
அம்மா : ஆமா! cobra வை புடிச்சி carrybag ல கட்டி வெச்சி பிரிட்ஜ் உள்ள வைக்க போறேன்.. யாரு டா  அவன்…                                  கொப்பரை தேங்காய்  டா !!

 

kopra putih

 

தொண்டை புண்ணால் அவதியுற்று
வாயை திறந்தால் வெறும் காற்று
தான் வரும் என்ற சூழ்நிலையிலும்
முந்தைய நாள் ஸ்கூல் கபோர்டில்
தன் பின் மண்டையை இடித்து
கொண்ட நாலாம் வகுப்பு
படிக்கும் என் தவப்புதல்வனை
ஸ்கூலில் இருந்து வீடு திரும்பிய
உடன் முதல் வேலையாய் குசலம்
விசாரிக்க எண்ணி அவன் பின் மண்டையை
என் கைகளால் சுட்டி காட்டி முக
பாவனைகளாலும் என் கைகளையும் ஆட்டி ஆட்டி
இப்ப எப்படி டா இருக்கு என்று அக்கறையோடு
கேட்க அவனும் சிறிது நேரம் யோசித்து
சொன்னான்.. எனக்கு Dandruff problem
எதுவும் இல்லையே!!

images (1)

 

அம்மா : ஹே.. ஜாலி! இன்னிக்கு டின்னர் வெளில..
அப்பா இப்போதான் கால் பண்ணினாங்க..
பையன் : என்ன ஜாலி?? ஓஹோ.. நீங்க சமையல் பண்ண
வேண்டியது இல்லையோ.. எனக்கும் ஜாலி தான்..
நீங்க சமையல் பண்றத இன்னிக்கு நான் சாப்பிட
வேண்டியதில்லை..
அம்மா : !!!!!

images (2)


10 பின்னூட்டங்கள்

சில எண்ணங்கள் -51

களுக் என்று ஆரம்பத்தில் சிரித்தவரை
பார்த்து விவரம் ஏதும் அறியாமலேயே
குபுக் என்று வாய் விட்டு சிரிப்பவர்களுக்கே
நறுக் என்று உச்சந்தலையில் கொட்டப்படும்

How-to-Laugh-Without-Anyone-Noticing

 

கொசு வலை மட்டும்
இல்லையென்றால்
பசு வாலை ஆட்டிய
கதை தான் இரவினிலே!

 

?????????????????????????????????????????????????????????????????????????????????????????????????

 

 

தும்மல் வந்த பிற்பாடு
தூசி தட்ட நினைப்பது..
துன்பம் வந்த பின்னே
துலாபாரம் கொடுக்க
நினைத்தாற் போல்..

 

cartoon-vector-of-cartoon-businesswoman-sneezing-coloring-page-outline-by-ron-leishman-23498

 

மனதுக்கு பிடிக்காதவற்றை
கண்டு கொண்டு பின் கண்டபடி
விமர்சிப்பதை விட கண்டும்
காணாமல் இருக்க பழகி கொண்டால்
யாருக்கும் எந்த கண்டமும் இல்லை!

bob-zahn-he-wears-lifts-pretend-you-don-t-notice-cartoon

 

இதி மஞ்சா?? என்று ஒரு
பீர்க்கங்காயின் தரத்தை
பற்றி என்னிடம் ஒருவர்
தெலுங்கில் வினவ நானும்
எனது பாணியில் பதில் அளித்தேன்
.
.
.
.
பிச்சா தெரியும்
பிஞ்சா என்று!

download

 

யப்பா…
ஒரு quarter தான் பா இருக்கு
ஒரு half கூட இல்ல
நாலு full சாயுங் காலத்துக்குள்
கொண்டு வந்து என் வீடு சேர்த்தா
உனக்கு புண்ணியமாக போகும்…
இது குடிகாரியின் புலம்பல் அல்ல
மினரல் வாட்டர் கேன்காரனிடம்
ஒரு குடித்தனக்காரியின் புலம்பல்!

 

??????????????????????????????????????????????????????????

 

நியாபகம் வந்த நொடியே
அக்காரியத்தை செய்ய
சோம்பல் பட்டு நாளை
நாளை என்று தள்ளி
போடும் மனது நம்பகமற்றது!

download (1)

 

 


13 பின்னூட்டங்கள்

விடாது சிகப்பு

gas1

அன்றைய பொழுது  நன்றாக தான் விடிந்தது. நேற்றைய  தினம்  Gas புக்  செய்ய சொல்லி இருந்தது  நினைவில் வர கணவரிடம் அது பற்றி கேட்டேன். அவரும் எங்கள்  Gas  Agency  விநியோகம் செய்திருந்த நோட்டீசை என்னிடம்  நீட்டினார். அதில் வாடிக்கையாளர் சேவைக்காக Indianoilcorporation  IVRS  நம்பர் புதிதாய்  அறிமுகம் செய்திருப்பதை அறிவித்து  இருந்தது .மனது  நிம்மதி  பெருமூச்சு  விட்டது . இனி வீட்டில்  இருந்த படியே எந்த நேரமும் கேஸை புக்  செய்து  கொள்ளலாம் என்று மனது  குதூகலித்தது. கணவரிடம் நோட்டீஸை  காட்டி  ஒரு முறை  எல்லாவற்றையும்  சரி  பார்த்து விட்டு  நிமிடத்தில்  கேஸை புக் செய்தேன்.

புக் செய்தாயிற்று… இருந்தும் sms எதுவும்  வரவில்லையே என்ற  மனக்குறை வாட்டி வதைத்தது . திரும்ப  திரும்ப  அந்த  நோட்டீஸில்  அச்சடிக்கப்பட்டிருந்த  எண்ணுக்கு  டயல்  செய்து  டயல்  செய்து  Gasbookingstatus  என்னவென்று சரி  பார்த்து  கொண்டேன் . புக்  செய்த ஒரிரு  நாளில் நான் புக் செய்ததை  உறுதி  படுத்தும் விதமாக sms உம்  வந்து  சேர்ந்தது . அதை  என்  கணவரிடம் ஒரு முறை  காட்டி  மன  உவகை கொண்டேன்!

images (15)

தினம் தினம் நான் அந்த நம்பருக்கு டயல் செய்வதும்  அவர்கள் நாட்களை  கவுன்ட்  டவுன்  செய்து கொண்டே  வருவதும்  தொடர்ந்து  கொண்டிருந்தது. ஒரு  வழியாய்  அந்த பத்து  நாள் அவஸ்தை முடிந்து  கேஸை  அவர்கள்  விநியோகம்  செய்ய  வேண்டிய  நாளும் வந்தது. நானும் காலையிலிருந்து  மாலை  வரை குட்டி போட்ட  பூனை  போல்  நிலை கொள்ளாமல்  வழி  மேல் விழி  வைத்து  காத்து கிடந்தேன் . ஒரு வழியாய்  மாலையில்  வந்து சேர்ந்தது . ஆனால்  வந்தது  கேஸ்  அல்ல கேஸ் விநியோகம் செய்து  ஆகி  விட்டது என்ற sms. ஐயகோ! இது  என்ன  கொடுமை என்று மனம் ஆர்ப்பரித்தது.

waiting cat

கணவரிடம்  இதை  பற்றி  முறையிட  அவர்  நாளை  காலை  வரை காத்திரு.. அதற்கு  பின்பும் வர வில்லை எனில்  என்ன ஏது  என்று  நேரில்  சென்று  விசாரிக்கலாம் என்று ஆசுவாசப்படுத்தினார். அன்று இரவு  உறக்கம்  பிடிக்கவில்லை.  அடுத்த நாள்  காலை  முதல்  வேலையாய்  கேஸ்  விநியோகம்  செய்பவர்களிடம்  நேரில்  சென்று  விசாரித்ததில்  அவர்கள்  எங்கள்  booking status  ஐ  எடுத்து  பார்த்து  விட்டு  நீங்கள்  இதுவரை booking  எதுவும்  செய்யவில்லை  என்று உரைக்க என்  கணவர் எரிமலை ஆகி விட்டார். உடனே  என் கைபேசியை  தொடர்பு கொண்ட அவர்  இதை கோபமாக  குறிப்பிட்டு  எங்கள் கஸ்டமர் நம்பரை  கேஸ்  புக்கை  பார்த்து  சொல்ல   சொன்னார். நானும் சொன்னேன்.. அதன் பின்னே தான் தெரிந்தது  நான்  அந்த  நோட்டீசில்  பால் பாயிண்ட் பேனா  வைத்து  your gas number  என்று குறிப்பிட பட்டிருந்த  இடத்தில் எழுத பட்டிருந்த  ஏதோ  ஒரு எண்ணுக்கு  புக்  செய்திருந்தது தெரிய வந்தது.

5

 

images (13)

ஒரு கேஸை  ஒழுங்கா  புக்  பண்ண  தெரியாதா ?????  நான் அந்த நோட்டீஸை  கணவர்  கையில்  குடுத்த  அன்று  பல  முறை திருப்பி திருப்பி கேட்டது  நினைவில் வந்தது. இந்த நம்பர் புதியதாய் இருக்கிறதே.. இது தானா .. எந்த மாற்றமும் இல்லையே…  ஒரு வேளை  sms  booking புதியதாய்  ஆரம்பித்து  இருப்பதால் ஒவ்வொரு  வாடிக்கையாளருக்கும்  இந்த ஐந்து  இலக்க  எண்ணை  அலாட்  செய்திருப்பார்களோ???? இப்படி பலவாறு  யோசித்து  கணவரின் தலையாட்டலுக்கு  பின்னே தான் கேஸ்  புக்  செய்தேன் . இப்போ  தவறு நடந்தவுடன் பழி  எல்லாம்  என் மேல். கண்ணை  கட்டி காட்டில்  விட்டாற் போல்  இருந்தது . இந்த  தடவை  என் மேல்  நம்பிக்கை  அற்று  போய்  அவரே  கேஸ்  புக்  செய்தார்.

திருப்பி  முதலில்  இருந்தா??  ஏற்கனவே  பத்து  நாட்கள்  ஓடி  போய் விட்டது . இன்னும்  பத்து  நாட்கள்  காத்து  கிடக்க  வேண்டும்.  இனி  தலை  கீழாய்  நின்றாலும்  ஒன்றும்  ஆவதற்கு  இல்லை . கேஸும்  ஆடி அசைந்து  ஒருவாறு  பத்து  நாட்கள்  கடந்த பின்னே  வந்து  சேர்ந்தது.

அந்த  கேஸ் வந்து ஐந்து  நாட்களில் ஏற்கனவே  உபயோகத்தில் இருந்த கேஸ்  தீர்ந்து போனது . உடனே  நானும்  என் கணவரும் சேர்ந்தே முடிவெடுத்து  உடனே  அடுத்த கேஸை  புக்  செய்யும் முயற்சியில்  இறங்கினோம் .  ஆரம்பத்தில்  உடனே அடுத்த கேஸை  புக்  செய்ய முடியுமோ  என்று சந்தேகமாக தான் இருந்தது.. ஆனால்  அக்கம்பக்கம் விசாரித்ததில்  ஒன்றும் பிரச்சனை இல்லை என்று அனைவரும் உறுதி  அளிக்க அடுத்த கேஸுக்கு  புக் செய்தோம்.

smsgasbooking

எந்த  பிரச்சனையும்  இல்லாமல் புக்கிங் ஆனது . இன்னும் பத்து  நாட்களில் கேஸ்  வந்து சேரும் என்ற sms உம்  வந்து சேர்ந்தது . பத்து  நாட்கள்  வரை அதை பற்றி பெரிதாய்  ஒன்றும்  யோசிக்கவில்லை. பத்து  நாட்கள்  கடந்து  சென்ற பின்னர் எந்த sms  உம்  வரவில்லை , கேஸ்  வருவதற்கான அறிகுறியும்  இல்லை . என்ன  ஏது  என்று  திருப்பி  கேஸ் விநியோகம்  செய்பவரிடம் விசாரிக்க  அவர்களோ  நீங்கள்  கேஸ்  இந்த மாத ஆரம்பத்தில்  ஒன்று  டெலிவரி  எடுத்திருக்கிறீர்கள், பின்னர் இதே மாதத்தில் திரும்பவும் கேஸ்  புக்  செய்தது  தவறு , அதனால் நாங்கள்  நீங்கள்  புக்  செய்ததை  கேன்சல்  செய்து  விட்டோம்  என்று உரைக்க  நாங்கள் அதிர்ச்சியில் உறைந்து  போனோம்.

kid

 

இந்த தடவையுமா  மனம் வெறுத்து  போனது . அடுத்து  கேஸ்  புக்  செய்ய  இன்னும் 15 நாட்கள் காத்திருக்க  வேண்டும் . அந்த 15 நாட்கள் கழிந்த பின்னே  புக் செய்து விட்டு அதன் பின்னே ஒரு 10 நாட்கள்  காத்திருக்க வேண்டும் . இப்படி காத்து காத்து இலவு  காத்த கிளி  மாதிரி ஆகி விடுவோமோ  என்று  பயமாக  இருந்தது. முதல் தடவை  தெரியாமல் செய்த தவறால்  அடுத்தடுத்து எவ்வளவு  பிரச்சனை! அதற்காக வாழ்க்கை  வெறுத்து  போய் விட முடியுமா?? அவசர கால  திட்டம் ஒன்று தீட்டினேன்.

 

அக்கம் பக்கம் உள்ள வீடுகளில் யார் யாருக்கு இந்த மாதம் கேஸ்  டெலிவரி  எடுத்திருக்கிறார்கள் , யார்  யார் போன  மாதம் டெலிவரி செய்திருக்கிறார்கள் என்று பார்த்ததில் ஒருவர் போன மாதம் எடுத்திருந்தது தெரிய வந்தது. அவருடைய gas agency புக் செய்த  நான்கு  நாட்களிலேயே  டெலிவரி  செய்து  விடுவார்கள்  என்பதும் தெரிய வந்தது. எனக்கு ஒரு கேஸ் சிலிண்டர்  35  நாட்கள் வரை வரும் . அவர்களுக்கு ஒரு  கேஸ் 60 நாளுக்கு வரும் என்பதால்  அவர்கள் எனக்கு கேஸ்  புக் செய்து வாங்கி தருவதாகவும், அதன் பின்னே நான் எங்களுடைய கேஸ்  agency  யில் அவர்களுக்கு புக் செய்து வாங்கி தருவதாகவும் முடிவானது. அந்த அண்டை வீட்டுக்காரர் அன்றைய தினமே எங்களுக்கு கேஸ் புக் செய்து விட்டார் !

ஒரு மூன்று நாட்கள் கடந்த பின்னே என் கைபேசிக்கு  ஒரு sms  வந்தது . என்னவென்று பார்த்தால் நாங்கள் கேன்சல் ஆகி விட்டது  என்று எங்கள் கேஸ் ஏஜென்சியால் அறிவிக்கப்பட்ட கேஸ் சிலிண்டர் நாளை காலை எங்களுக்கு  வந்து சேரும் என்று அதில் குறிப்பிட பட்டிருந்தது. இதற்கு  நாங்கள் சந்தோஷப்படவா இல்லை துக்கபடவா என்று தெரியாமல் தவித்து கொண்டிருந்தேன். அடுத்த நாள் காலையும் வந்தது.. சிலிண்டரும் வந்தது… எனக்கும் வந்தது .. எனக்காக புக் செய்த அண்டை வீட்டுக்காரருக்கும் வந்தது. இருந்ததோ ஒரு காலி கேஸ் சிலிண்டர். என் விதியை நொந்து கொண்டே  உபயோகத்தில் இருந்த கேஸ் சிலிண்டரை கழட்டி  குடுக்கும்  முயற்சியில் நான் இறங்க, என் இன்னொரு அண்டை வீட்டுகாரர் ஆபத்பாந்தவரா ய்  எங்களுக்கு அவர்கள்  வீட்டில் இருந்த காலி  சிலிண்டரை தற்சமயத்தில் கொடுத்து  உதவினார். இப்போ ஒன்றுக்கு இரண்டு சிலிண்டர் கைவசம் வந்து  சேர்ந்து விட்டது. ஒன்றை எங்களுக்காக கேஸ் புக் செய்த அண்டை  வீட்டுக்காரருக்கு தூக்கி கொடுத்து  விட்டு  பெருமூச்சு விட்டவாரே  வந்து  நாற்காலியில் அமர்ந்தேன்.

prestige-mini-pic-1-0-mini-400x400-imadsfanst3bvz4r

 

இனிமேல் இந்த  கேஸை  எப்படி அதிக நாள் வருமாறு உபயோகிப்பது என்று திட்டம் தீட்ட ஆரம்பித்தேன் . ரொம்ப நாளாய் உபயோகம் செய்யபடாது  இருந்த Induction  அடுப்பு நியாபகத்துக்கு வர அதை தூசி தட்டி சமையல் அறையில் ஒரு ஓரமாய் வைத்தேன். அதற்கு ஏற்ற பெரிய த்ரீ பின் பிளக்  இல்லாமல் இருந்தது . அதற்கு ஏற்றாற் போல் ஒரு conversion  plug  வாங்கி  வர செய்து ஒரு வழியாய் Induction  அடுப்பை ஆன் செய்தோம் . நான்கு நாட்கள் வரை எந்த பிரச்சினையும் இல்லாமல் தான் சென்றது. போன மச்சான் திரும்ப வந்த கதையாய்  பிரச்சனை  Conversionplug வழியாக வந்தது. அப்போ  அப்போ தீப்பொறி  சுவிட்ச் போர்டில் வந்து கொண்டிருந்தது. அய்யய்யோ என்று நினைத்து  கொண்டிருக்கும் போதே  சுவிட்ச் இறுகி ஆன்  செய்யவே முடியாத நிலைமைக்கு போனது!

IMG_20140623_170939

உஸ்ஸ்.. ஷப்பா … இந்த சிகப்பு உருளையால்  வந்த பிரச்சனை  என்ன விடவே விடாது போல . பார்க்கலாம் இந்த சனி பெயர்ச்சிக்கு  அப்புறமாவது  இந்த பிரச்சனை தீருதா என்று … ஹலோ  எலக்ட்ரீசியன்??? என்  திட்டங்கள்  அது  வரை தீட்டப்பட்டு கொண்டே தான் இருக்கும்…………