ஆவிகளுக்கு கால்கள் கிடையாது
இது உலகம் அறிந்த உண்மை..
ஆனால் சத்தியமாக கைகள் உண்டு
இது நான் அறிந்த உண்மை..
அய்யோ! பளாரென்று எப்படி
அறை விடுது தெரியுமா முகத்திலே
இட்லி குக்கரை திறக்க முற்படும்
ஒவ்வொரு தருணமும்!
எங்க வீட்டிலேயும் ஒரு CCTv
கேமிரா மாட்டினால் என்ன
என்று பலமாக யோசிக்கிரேன்..
பின்னே வாங்கியே வராத
கொய்யா பழங்களை எங்கே
என்று குற்ற பத்திரிக்கை
வாசிக்கும் கணவருக்கு இனி
வரும் காலங்களில் மெய்பிப்பதற்க்கு!!
வேண்டாம் என்று தான்
முதலில் நினைத்தேன்
ஆனால் இந்தா வைத்து கொள்
என்று கூப்பிட்டு குடுத்த போது
வேண்டாம் என்று சொல்ல வார்த்தை
வராது விரும்பி இரு கை நீட்டி
வாங்கி கொண்டேன் அந்த
பச்சை மண்ணு பிள்ளையை…
அழகாய் வசீகரித்த அவனை
பார்த்து பார்த்து பத்திரமாய்
கூட்டத்தில் இடி படாமல் நெஞ்சோடு
சேர்த்து வீடு வந்தோம்
அக்கம்பக்கத்தினரை அழைத்து
அழைத்து அவனை காண்பித்து அவர்கள்
மனம் திருடி கொண்டோம்
ஆசை ஆசையாய் செய்த பால்
கொழுக்கட்டையை ஊட்டி மகிழ்ந்தோம்
இந்த பச்சை மண் பிள்ளையின்
ஈரம் கூட காயவில்லை அதற்குள்
அவனை ஆற்றிலேயோ குளத்திலேயோ
தொலைத்து விட்டு வர வேண்டுமாமே
என்ன ஒரு அநியாயம்
இதற்கு தான் மனம் முதலிலேயே அடித்து
கொண்டதோ வேண்டாம் வேண்டாம் என்று!
மதியம் 3:30 மணிக்கு
சிறிது கண் அசந்து
தூங்க நினைத்து
சாயுங்காலம் 4:30
மணிக்கு எழ அலாரம்
வைத்து இடையே உள்ள
1 மணி நேரத்தில் 40
தடவை மணி ஆயிற்றா
என்று உள்ளம் பதைத்து
பதைத்து எழுந்து பின்
உறங்கியும் உறங்காமலும்
எழுந்து அலாரத்தை
பொறுப்பாக அணைத்து
விட்டு தலை வலிக்க வலிக்க
எழுந்தால் அதுவே குட்டி
மதிய நேர தூக்கம்!!