நான் கலை நயத்தோட
சிற்பம் செதுக்கனும்னு நினைக்கல
ஏன் மைக்ரோ ஆர்டிஸ்ட்
ஆகனும்னு கூட விரும்பல
ஆனா இதெல்லாம் நடந்திருமோனு
பயமா இருக்கு…………….
Camlin Exam Pencils & Sharpeners
திருகி திருகி..
தண்ணீர் இல்லாமல்
குடம் கவுந்து கிடந்தாலும்
தண்ணீருக்குள்ளே
ஓடம் கவுந்து கிடந்தாலும்
அவை நமக்கு உணர்த்துவது
ஒன்றே ஒன்று தான்
.
.
.
நான் காலி!!
என் இரத்தத்தை சுண்ட வைத்து
தன் கூரிய ஊசி கரங்களால்
என் மேனி துளைத்து என்னை
உறைய வைத்த திமிரில்
சுழன்றடித்து செல்லும் குளிர்
காலத்து ஊத காற்றே ..
எங்கே
என் வீட்டில் சுண்ட காய்ச்சி
உரை குத்திய பாலை உறைய
வைத்து தயிராக்கி காட்டு பார்க்கலாம்!
யாரு மனசுல யாரு அவரவர்
முகபுத்தக சுவரை பாரு.
குளுகுளுனு இருப்பதற்காக
குழம்பிலே கசகசாவை
அரைத்து போடுவதும்
கசகசனு இருக்கிறதே
என்று குளுகுளு ஏசியின்
ஸ்விட்ச்சை போடுவதும்
நடைமுறை வாழ்க்கையில்
சகஜமான ஒன்று!
அதிசயமாய் இன்று காலை
ஒரு தடவை Bye
சொன்னதற்கு திருப்பி
நாலு தடவை Bye சொன்னான்
எங்க குட்டி பையன்..
அப்புறம் தான் புரிந்தது
என் கையில் இருந்த
அவனிடம் குடுக்க மறந்த
ஸ்கூல் பேக் கேட்டு
அலறுகிறான் என்று!
6:33 முப இல் நவம்பர் 16, 2013
வணக்கம்
சகோதரி
நாலு தடவை Bye சொன்னான்
எங்க குட்டி பையன்..
அப்புறம் தான் புரிந்தது
என் கையில் இருந்த
அவனிடம் குடுக்க மறந்த
ஸ்கூல் பேக் கேட்டு
அலறுகிறான் என்று!
எண்ணங்கள் நல்ல சிந்தனைத்துளிகள் அருமை வாழ்த்துக்கள்
-நன்றி-
-அன்புடன்-
-ரூபன்-
10:02 முப இல் நவம்பர் 16, 2013
வாங்க சகோதரா!
தங்கள் வருகைக்கும், இந்த பதிவை ரசித்து பின்னூட்டம் இட்டமைக்கும் மிக்க நன்றி 🙂
6:37 முப இல் நவம்பர் 16, 2013
தங்கள் எண்ணங்கள்
நல்ல எண்ணங்கள்
தொடருங்கள்…
10:06 முப இல் நவம்பர் 16, 2013
வாங்க சார்!
இந்த பதிவை ரசித்து, பின்னூட்டம் இட்டு என்னை உற்சாகம் செய்ததற்கு என்னுடய மனமார்ந்த நன்றிகள் 🙂
10:00 பிப இல் நவம்பர் 22, 2013
இன்றைய எண்ணங்கள் எல்லாமே சூப்பருங்க.
4:18 முப இல் நவம்பர் 23, 2013
நன்றி சித்ரா மேடம் 🙂