அம்மா : 1 to 50 சொல்லு
பையன் : 1 2 3 4 5 6 7 8 9 10
11 12 13 14 15 16 17 18 19 20
21 22 23……….!!!!!!
அம்மா : என்னடா திரு திருன்னு முழிக்கிற…..
23 அதுக்கு அப்புறம் என்ன வரும் ?
பையன் : பாத்ரூம்
அம்மா :ஓடுடா … ஓடுடா …..
இதில் போடப்படும் அனைத்தும்
கோவிலுக்கே சொந்தம் என்று
போர்டு ஒன்று தான் எழுதி மாட்ட
வில்லை மற்றபடி typical ஆளுயர
மஞ்சள் துணி சுற்றிய பெருமாள்
கோவில் உண்டியலின் பக்கவாட்டில்
காணிக்கை செலுத்துவதற்காக
ஏற்படுத்தப்பட்ட ஓட்டை வழியாக
தன் மண்டையை நுழைத்து ஆராய்ச்சி
செய்த தன் மைந்தனின் செயல்
சகிக்காமல் அவன் காதில் கிசுகிசுத்தாள்
அன்னை… டேய்… what is this???
அவனும் தன் ஆராய்ச்சியை தொடர்ந்தவாரே
பதிலளித்தான்.. உண்டியல் அம்மா!!!
துப்பு கெட்ட விஷயமாக
இருந்தாலும் துப்பு துலக்காமல் தப்பு
யார் மீது என்று கை காட்டுவது தப்பு!
வர்ஷம் அதிகம் இல்லாத
ஊர்களில் எல்லாம் ஒவ்வொரு
நிமிஷமும் வருஷம் தான்!
கோ பத்தினால் என்ன லாபம் ??
.
.
.
.
.
.
.
.
.
அதன் பால் உற்பத்தி திறனையும்
1 லிட்டர் பாலுக்கு நிர்ணயிக்கப்பட்ட
விலையையும் பொறுத்தது!
பானி பூரி சாப்பிட என்றே
ஒரு தனி பாணி உண்டு
நாலு பேரு முன்னிலையில்
புசிக்கும் போது எங்கே நம்
மரியாதை கெட்டு விடுமோ
என்ற அச்சத்தில் முடிந்தும்
முடியாமல் ஒரே வாயில்
பூரியை திணித்து விழுங்கிட
தயுவு செய்து முயற்சி செய்யாதீர்..
யார் கண்டார் பின் தங்களுக்கு
இறுதி மரியாதை செய்ய நேரிடும்!
என்னமா.. எப்படி இருக்க?
என்று என்னை கேட்பதற்கு
பதிலாக என் வீட்டு குக்கரில்
அவிந்து கொண்டிருக்கும்
அவரைக்காயை கேட்டால்
என் நிலை சொல்
லுமே!
4:44 பிப இல் செப்ரெம்பர் 26, 2014
வர்ஷம் / வருஷம் வைத்து சொல் விளையாட்டு விளையாடிவிட்டீர்கள், மஹா! முதல் கவிதை வாய்விட்டு சிரிக்க வைத்துவிட்டது. நாளுக்கு நாள் முன்னேறி வருகிறீர்கள், பாராட்டுக்கள்!
5:43 முப இல் செப்ரெம்பர் 28, 2014
உங்கள் அன்பிற்கும் இடைவிடாது கொடுக்கப்படும் ஊக்கத்திற்கும் என் மனமார்ந்த நன்றிகள் ரஞ்சனி அம்மா
8:52 முப இல் செப்ரெம்பர் 27, 2014
இது ஒரு ‘அச்சா ஹை’ பதிவு. கலக்கல்.
5:51 முப இல் செப்ரெம்பர் 28, 2014
धन्यवाद भैया! मुझे बहुत मजा आया! மிகுந்த சந்தோஷம் உங்கள் பின்னூட்டம் கண்டு பாண்டியன் சார்!
8:03 முப இல் செப்ரெம்பர் 28, 2014
அச்சான்னு ஒரு வார்த்தையப் போட்டதுக்கா இத்தணை இந்தி. 😵
2:51 பிப இல் செப்ரெம்பர் 29, 2014
எனக்கு தமிழுக்கு அடுத்து மிகவும் பிடித்த மொழிகளில் ஒன்று ஹிந்தி 🙂
5:51 முப இல் செப்ரெம்பர் 30, 2014
உண்மையைச் சொன்னதற்கு சபாஷ்.
11:35 முப இல் செப்ரெம்பர் 27, 2014
நகைச்சுவை ரசிக்க வைத்தது பாராட்டுக்கள் மஹா
5:53 முப இல் செப்ரெம்பர் 28, 2014
உங்கள் வருகைக்கும் உங்கள் மனமார்ந்த பாராட்டுக்கும் என் மனமார்ந்த நன்றிகள் விஜிகுமாரி மேடம் 🙂
8:03 முப இல் செப்ரெம்பர் 28, 2014
ரொம்பரொம்ப ரஸித்தேன். எல்லாவற்றையும். அன்புடன்
2:46 பிப இல் செப்ரெம்பர் 29, 2014
மிக்க நன்றி காமாட்சி அம்மா 🙂
4:33 பிப இல் செப்ரெம்பர் 29, 2014
சிறந்த பதிவு
சிந்திக்கவைக்கிறது
தொடருங்கள்
யாழ்பாவாணனின் மின்நூலைப் படிக்கலாம் வாங்க!
http://wp.me/pTOfc-bj
4:31 பிப இல் ஒக்ரோபர் 5, 2014
நன்றி ஐயா! கண்டிப்பாக உங்கள் மின்னூலை படிக்க வருகிறேன் 🙂
4:38 பிப இல் ஒக்ரோபர் 4, 2014
“..யார் கண்டார் பின் தங்களுக்கு
இறுதி மரியாதை செய்ய நேரிடும்!..”
சூப்பராக இருக்கு
4:29 பிப இல் ஒக்ரோபர் 5, 2014
நன்றி டாக்டர் ஐயா 🙂