எண்ணங்கள் பலவிதம்

என் எண்ணங்களின் நீருற்று


12 பின்னூட்டங்கள்

அழுகுனி குமாரி

images

ஆரம்பத்துல ரொம்ப ஆர்வமாக தான் இந்த குழந்தையோடு விளையாட ஆரம்பித்தான் எங்கள் குட்டி பையன்! ஆனால், கொஞ்ச நேரம் , அதனோடு விளையாடுவதற்குள் , அந்த குழந்தை வாய் விட்டு அலறி அழ ஆரம்பித்து விட்டது. கொஞ்சம் பயந்து தான் போயிட்டான் எங்க பையன். பயத்தில் , என்னிடம் வந்து தஞ்சம் அடைந்தான். எதற்கு அழுகிறது என்று விசாரிக்கும் பொழுது தான் தெரிந்தது, அந்த குழந்தைக்கு , அது சொன்னபடி எல்லாம் ஆடினால் மட்டுமே , நன்கு சிரித்து விளையாடும் என்று! என்ன கொடுமையடா இது!

இப்போதைக்கு , அந்த குழந்தையின் அழுகையை நிறுத்த ஏதாவது செய்ய வேண்டும்.. சரி நடப்பது நடக்கட்டும் என்று அந்த குழந்தையோடு விளையாட , துணிந்து களத்தில் இறங்கினேன்! அந்த குழந்தை என்னை ஒரு சூப்பர் மார்கெட் அழைத்து சென்றது! அங்கே முதலில் , காய்கறிகள் வாங்க வேண்டும் என்று சைகையில் சொன்னது.. சரி, என்று காய்கறிகள் இருக்கும் இடம் அழைத்து சென்றேன்! அங்கே, நிறைய காய்கறிகள்  பளிச் என்று காட்சி அளித்தன. ஆசையாக , ஒரு கிலோ தக்காளியை நான் கையில் எடுக்க , அவ்வளவு நேரம் சிரித்து கொண்டிருந்த குழந்தை , லைட்டா உறுமியது ! நான் , அப்பவே சுதாரித்து இருக்கணும் , நான் என் இஷ்டத்துக்கு காய்கறிகள் எடுப்பதை கவனித்தவுடன் , அது வீல் வீல் என்று அழ ஆரம்பித்து விட்டது! அதுக்கு என்ன காய் பிடிக்குமோ அதை தான் நான் வாங்கணுமாம்! சரி , சரி  என்று அவசர அவசர மாக , அதற்கு பிடித்த , உருளை கிழங்கையும் , கேரட்  மற்றும் பூசணியை , தள்ளு வண்டியில்  போட்ட பின்னால் தான் , குழந்தை அழுகையை நிறுத்தி , தன் கை கொட்டி சிரித்தது! அடுத்ததாக , பழங்கள் இருக்கும் இடத்தை கைகாட்டியது !

images1

 

எதற்கு வம்பு என்று , இந்த தடவை , பழங்கள் இருக்கும்  இடம் சென்று , அது எந்த பழம் என்று கை  காட்டும் வரை பொறுத்திருந்தேன்! அதுவும் , ரொம்ப ஆசையாக , ஆப்பிளை கை  காட்டியது! சரி , என்று ஒரு கிலோ ஆப்பிளை வாங்கி தள்ளு வண்டியில் போட்டு கொண்டேன்!  அழாமல் இருந்தால் சரி தான் என்று இருந்தது! வெளிஇடம்  வேறு! இந்த குழந்தை வேறு இன்னும்  பேச ஆரம்பிக்கவில்லை! திடீரென்று அழ ஆரம்பித்தால் , பிள்ளை கடத்தும் கும்பலை சேர்ந்தவள் என்று யாரேனும் நினைத்து விட்டால்  என்ன செய்வது என்ற பயம் வேறு எனக்கு! அடுத்து , பால் பொருட்கள் இருக்கும் இடத்தை கை காட்டியது! ஆழம் தெரியாம கால விட்டாச்சு! இனி, சற்று சூதானமாக  தான் கரையேற முடியும்! பால் பொருட்கள் இருக்கும் இடம் நோக்கி நகர்ந்தோம்!

 

அங்கே, பால் , வெண்ணெய் என்று அது கை காட்ட , அதன் கைக்கு கட்டுப்பட்ட ரோபோ போல நானும் அப்பொருட்களை அள்ளி போட்டு கொண்டே வந்தேன்! அது , தன் முகத்தை சாப்பிட்டு முடித்தவுடன் துடைக்க , Wet Tissues வாங்க சொல்லி  கை காட்டியது. நானும் அதை ஒரு எட்டு எட்டி எடுப்பதற்குள் , சற்றே  கால தாமதம்  ஆக, குழந்தை சந்திரமுகி ஆகியது! ஒருவாறு சமாளித்து , அதன் அழுகையை நிறுத்தியவுடன் , பாத்திரம் இருக்கும் திசை நோக்கி கை காட்டியது!

images4

 

எங்கே செல்லும் இந்த  பாதை என்று பாட்டு ஒன்று தான்   பாடவில்லை! தள்ளு வண்டியை தள்ளி கொண்டு பாத்திரம் இருக்கும் இடத்தை வந்து அடைந்தோம்! அடுப்பு , வாணலி , கரண்டி , தட்டு , கும்பா  என்று தன்  மகளை தனி குடித்தனம் வைப்பதற்கு முன்னே , அத்தனையும் பார்த்து  பார்த்து  வாங்கும் அன்னை போல், வாங்கி  குவித்து கொண்டிருந்தேன்! எதுக்கு குழந்தாய் இத்தனையும் உனக்கு என்று கேட்டு தெரிந்து கொள்ள ஆசை தான்! எதுக்கு வம்பு என்று உள் மனது எச்சரிக்க , கை கொண்டு என் வாயை பொத்தினேன்! குழந்தை மசாலா பொடி இருக்கும் கை காட்டியது! கிச்சன் சூப்பர் ஸ்டார் ஜூனியர் எதிலும் பங்கு எடுத்திருக்குமோ குழந்தை , என்று சந்தேக பார்வை பார்த்தவாறே  , உப்பும் , மிளகு பொடியும் எடுத்து போட்டு கொண்டோம்! திடீரென்று லக லக லக என்று ஒரே சத்தம்! பீதியில் உறைந்து போய் , திரும்பி பார்த்தால் ,குழந்தை தான் , சந்தோஷம் தாங்க முடியாமல் சிரித்து கொண்டிருந்தது! இனி , ஒரு வினாடி  கூட தாமதிக்காமல் , குழந்தையை வீட்டில் விட்டு விட வேண்டியது தான் என்று என் மனம் அவசரப்படுத்தியது!

சரி என்று அவசர அவசரமாக , குழந்தையின் வீடு சென்றால் , அங்கு ,  அதன் அம்மாவை காணவில்லை! ஐயோ பாவம் குழந்தை , இவ்வளவு நேரத்திற்குள் அதற்கு பசித்திருக்கும், என்று எண்ணி சமையல் செய்ய ஆயுத்தமானேன்! குழந்தை அங்கேயும் என்னை என் இஷ்டப்படி விடவில்லை! அது மாமியார் போலவும் , நான் புதிதாய் திருமணம் முடிந்து வந்திருக்கும் மருமகள் போலவும் என்னை நடத்தியது! இது அது என்று சைகை காட்டி , காட்டி , மசித்த ஆப்பிள் , கேரட், பூசணி , உருளை , பால் , வெண்ணெய் , உப்பு , மிளகு பொடி சேர்த்து வேக வைத்த காய்கறி சூப் என்று என்னை சக்கையாய்  வேலை வாங்கியது குழந்தை! அப்பாடி, வேலை முடிந்தது என்று நினைப்பதற்குள், குழந்தை , சாப்பாடு மேசையை கை காட்டியது! சரி , இதோடு ஆள விட்டா சரி  தான் என்று , மசித்த ஆப்பிள் ஒரு கிண்ணம் , காய்கறி சூப் ஒரு கிண்ணம் , வெட்டிய கொய்யா ஒரு தட்டு , குடிக்க தண்ணீர் , வாய் துடைக்க  wet tissues  என்று அது கை காட்டியது எல்லாம் எடுத்து வைத்தது போக , ஒரு கிலுகிலுப்பை , ஒரு லாலிபாப் , ஒரு டெடி பியரையும் , மேசை அருகே எடுத்து வைக்க சொன்னது !

images3                              images5

சரி, இவ்வளவு தூரம் வந்தாச்சு , அதுக்கு சாப்பாடை ஊட்டி விட்டு விடுவோம் என்று உடையைப் பாதுகாக்க குழந்தையின் கழுத்தில் கட்டித் தொங்கவிடப்படும் துணியை மாட்டி விட்டேன்! குழந்தை உடனே , ஆப்பிள் மசியலை கை காட்டியது! ஒரு ஸ்பூனை போட்டு , ஒரு ஐந்து தடவை வாயில் கொடுத்திருப்பேன் , உடனே அது வெட்டிய கொய்யாவை வாயில் கொடு என்று கை காட்டியது! சரி என்று ஒரு துண்டை கொடுத்தவுடன் , ஒரு கடி தான் கடித்திருக்கும் , அதற்கு பல் வலித்து , வழக்கம் போல் வீல்…. வீல்  என்று கதறி அழ ஆரம்பித்தது! ஒரு நிமிஷம் வெலவெலத்து போச்சு! அப்புறம், லாலி பாப் , டெடி பியர் , கிலுகிலுப்பை எல்லாத்தையும் எடுத்து கொடுத்தவுடன் , ஒரு வழியா அழுகைய நிறுத்துச்சு குழந்தை! பின்னர் , காய்கறி சூப்பை கை காட்டுச்சு!அதையும் , ஸ்பூன் போட்டு , அது  கேட்க , கேட்க பொறுமையா வாயில ஊட்டி கொண்டே வந்தேன்!

images6          images7

திடீர் என்று , குழந்தைக்கு காரம்  ஏறி ஒரே இருமல்! பின் தண்ணீரை குடிக்க கொடுத்து , wet tissue வைத்து வாயை துடைத்து முடித்தவுடன் , ஒரு ஏப்பம் விட்டு , தன் சாப்பாட்டை முடித்து கொண்டது குழந்தை ! தன் வயிறு  நிறைந்ததன்  அடையாளமாய் திரும்பவும் லக லக லக என்று சிரித்து பயமுறுத்தியது  குட்டி குழந்தை ! நான் பெற்ற குழந்தைகளுக்கு கூட இவ்வளவு பொறுமையா , சாப்பாடு ஊட்டி இருப்பேனா என்பது சந்தேகம் தான்!

baby-hazel-new-year-bash-med

அடுத்து தொட்டிலில் போட்டு , என்னை தாலாட்ட சொல்லுமோ என்று பயந்த நொடியில் Game  over  என்று என் மொபைல் ஸ்க்ரீன் பிளின்கியது! என் குட்டி பையன் , என்னை பார்த்து வெற்றி புன்னகை பூத்தான் !!!

யான்  பெற்ற இன்பம் தாங்களும் பெற விரும்புவோர் இங்கே கிளிக் செய்யவும்!

http://www.babyhazelgames.com/

 


2 பின்னூட்டங்கள்

100,000 விண்மீன்பேரடைகளில் வேற்றுலகவாசிகளைத் தேடல்

சரவணாவின் பரிமாணம்

எழுதியது: சிறி சரவணா

விண்ணியல் ஆய்வாளர்கள், வேற்றுலகவாசிகள் இருப்பதற்கான அடையாளம் உண்டா என அண்ணளவாக 100,000 விண்மீன்பேரடைகளில் தேடியுள்ளனர். இதுவரை “எதிர்பார்த்த” முடிவு கிடைக்கவில்லை. அதாவது  வேற்றுலகவாசிகள் இருப்பதற்கான எந்தவொரு தடயமும் இன்னும் கிடைக்கவில்லை. நாசாவின் வைஸ் (WISE) என்ற செயற்கைக்கோளைப் பயன்படுத்தியே இந்த ஆய்வாளர்கள் இந்த 100,000 பேரடைகளை ஆய்வுசெய்துள்ளனர்.

இந்த ஆய்வாளர்களின் கருத்துப்படி, ஒரு விண்மீன் பேரடையில் உள்ள விண்மீன்கள் வேற்றுலகவாசிகளால் குடியேற்றப்பட்டிருந்தால், அந்த சமுதாயத்தின் தொழில்நுட்ப பாவனையினால் வெளியிடப்படும் விரயமான சக்தி, அகச்சிவப்பு கதிர்வீச்சாக வெளியிடப்படும், இந்தக் கதிர்வீச்சை கண்டறியும் வண்ணமே வைஸ் செய்மதி உருவாக்கப்பட்டுள்ளது.

View original post 332 more words