எண்ணங்கள் பலவிதம்

என் எண்ணங்களின் நீருற்று


7 பின்னூட்டங்கள்

சில எண்ணங்கள் -46

தன் அழும் குழந்தையை
சமாதானம் செய்ய
அக்குழந்தையின் தாய்
ஜன்னல் கம்பிகளின் ஊடே
தன் கைகளை நீட்டி என்னை
சுட்டி காட்டி சொல்லுவாள்
பாரு பாரு Aunty பாரு….
வாழைப்பழம் நீட்டாத
குறை ஒன்று தான்..
வேடிக்கை!!
can-stock-photo_csp13240812

வலியும் வேதனையும்
நெஞ்சில் சுமந்திருந்தும்
யாதொரு தருணத்திலும்
வதனத்தில் வலியதொரு
புன்னகையை தவழ
விடுபவரின் நெஞ்சம் வலியது!!
download

அரிசி பருப்பு வேக வைப்பதாகட்டும்
பயிறு காய்கறிகள் அவிப்பதாகட்டும்
இப்படி எதை எடுத்தாலும் சமயத்தை
மையம் கொண்டு செய்வதே சமையல்!!

Cooking_times

ஆ….. ஐயோ………
போதும் போதும் அம்மா ……
.
.
.
டேய் நான் இன்னும் நகத்தை
வெட்டவே ஆரம்பிக்கவில்லை!

download (1)

நம்மை தன் வசப்படுத்தும்
இஷ்டங்களை துறக்க முற்படின்
கஷ்டங்கள் தீர்ந்து வாழ்க்கை
நம் வசப்படும்!
images

போதும் என்று உரைத்தால்
அவள் முறைப்பாள்….
குமட்டுதுனு சொன்னா
குமட்டுலேயே குத்துவாள்
இருந்தும் தன் மனதொப்ப
பாதி காலி செய்த தட்டை நீட்டி
அவளின் மனதை நிறைப்பான்
அம்மா..Thank You.. என்றுரைத்து!!
images (1)

பத்துக்கு பதி என்றார்
இருபதுக்கு இருபதி என்றார்
முப்பதுக்கு முப்பதி என்றார்
இதை மனதில் கொண்டு
நாப்பதி என்று கேட்ட
ஆட்டோ ஓட்டுனரிடம்
நாற்பது ரூபாய் நீட்டினால்
முறைத்து பார்க்கிறார்
ஐம்பது ரூபாயாம்!
காப்பி அடிச்சதே அடிச்சேள்
திருந்த அடிக்கப்படாதோ..
கொச்சை தெலுங்கு!!
Telugu-Telugu

கைக்குட்டை கைக்கு
எட்டாமல் கண்கட்டு
வித்தையாய் மாயாமாகும்
மர்மத்தை ஆராய்ச்சி
செய்ததன் முடிவில் மேலும்
நான்கு கைக்குட்டைகள்
இருந்த இடம் தெரியாமல்
கை விட்டு போச்சு……..
images (2)

மயில்கள் அகமகிழ்ந்து
தோகையை விரிக்கும்
மானிடர்களும் அகமகிழ்ந்து
கண்களை விரிக்கின்றனர்
கார்மேகத்தை காணும்
பொழுதெல்லாம்….
நிலைமை அப்படி!!
images (3)

விழுந்து விழுந்து கவனிப்பாள் மனைவி
தன் மீது கணவர் எதற்கும் எரிந்து விழாதவரை!!

images (4)

பையன் : அம்மா! நான் ஸ்கூலுக்கு கிளம்பறேன்!
அம்மா : வீட்டில் இருந்து கிளம்புவதற்கு
முன் இப்படியா சொல்லிட்டு போவாங்க ??
பையன் : சரி… கிளம்பிட்டேன்!
அம்மா: டேய்….
பையன் : சரி …. கிளம்பி போறேன்!
அம்மா : போயிட்டு வரேன்னு சொல்லுடா!!!!
F89EE261A9F2173FFD3FFA642F243_h302_w400_m2_bblack_q99_p99_cUBIINJTa


2 பின்னூட்டங்கள்

நினைவுகள்-1

படம்

எப்படி ஆரம்பிப்பது தெரியவில்லை, நினைவு தெரிஞ்ச நாள், அது எந்த நாள், சரியாக நியாபகம் இல்லை! அப்பா அம்மா உறவினர்கள் சொல்ல கேட்டதுண்டு, நீ இது செய்வாய் , அது செய்வாய் என்று, என் நியாபகத்தில் அழியாமல் இருப்பது மட்டும் இங்கே காலத்தால் அழியாத சுவடாய் பதித்து விடுகிரேன். மழலை பேசும் வயதில் சொட்ட சொட்ட நான் நனைந்த மழை தான் முட்டி மோதி கொண்டு முதல் நியாபகமாய் கண் முன் வருகிறது. ஸ்கூலில் முதல் தடவையாய் தண்டனை வாங்கியதும் அதற்காகதான்! எல்.கே.ஜி படித்து கொண்டிருந்த நேரம். மழையில் நனைந்ததை கூட அவர்கள் குற்றமாக சொல்லவில்லை, தூரத்தில் ஆசிரியை வருவதை கண்டவுடன், கமுக்கமாக உள்ளே ஓடி சென்று சமர்த்து பிள்ளையாய், ஈரமாய் உட்கார்ந்து இருந்ததை தான் அவர்களால் ஜீரணிக்கவே முடியவில்லை!

 
வாழ்க்கையில் அந்த குட்டி வயதில் என் லட்சியம் என்ன தெரியுமா, எங்கள் வகுப்பின் முன் அமைந்த சிறு விளையாட்டு திடலில் இருந்த ஊஞ்சலில் வேகமாய் ஆடி, அதன் பக்கத்தில் இருந்த வேப்ப மர உச்சியில் உள்ள பேய் இல்லை, இலையை காலால் தொட்டு விட வேண்டும் என்பது தான் அந்த தணியாத ஆசை! அந்த ஆசையும் ஒரு நாள் நிறைவேறியது. நான் பிற்காலத்தில் பற்பல சுவர்களையும் அசால்டாக ஏறி இறங்க இந்த சிறு விளையாட்டு திடலே எனக்கு பாலமாக இருந்தது. அந்தவயதில் பிடிக்காத ஒரே ஒரு விளையாட்டு குடைராட்டினம், பூமி என்னை சுற்றுவதை நான் ஒரு போதும் விரும்பியதே இல்லை.
எல்.கே.ஜி முடித்து, லீவு விட்டு ஸ்கூல் ஆரம்பித்தவுடன், யு.கே.ஜி செல்ல மனமின்றி திரும்பவும் எல்.கே.ஜி யிலேயே சென்று அமர்ந்தது இன்றும் பசுமையாக நினைவில் நிற்கிறது. பிறகு வலுக்கட்டாயமாக யு.கே.ஜி அனுப்பியது வேறு கதை. அந்த வயதில் எனக்கு ஸ்கூல் ரசித்ததே இல்லை. ஏதோ கடனுக்கு போய் விட்டு வருவேன். அடிக்கடி நோய்வாய்ப்படுவதுண்டு. என்னதான் மருந்து, டாக்டர் ஊசி என்ற பயம் ஒரு பக்கம் இருந்தாலும், ஸ்கூல் போக வேண்டாம் என்ற நினைவு சந்தோஷத்தையே தரும். நான் அம்மாவுக்கும், அப்பாவுக்கும் முதல் செல்ல மகள் என்பதால் சிறிது செல்லம் உண்டு. இந்த மாதிரி உடம்பு சரி இல்லாமல் போகும் சமயங்களில் எல்லாம், என் வீட்டு பாடத்தை அம்மாவே எழுதி குடுத்து விடுவார். ருசி கண்ட பூனை சும்மாவா இருக்கும், வீட்டு பாடங்களை எல்லாம், எனக்கு கை வலிக்குது, கால் வலிக்குது என்று அம்மாவையே செய்ய வைத்து விடுவதுண்டு. ஒரு நாள் அம்மா என் வீட்டு பாடத்தை செய்ய மறந்து போனார். காலையில் தான் அம்மாவுக்கு நியாபகம் வர, அன்று வீட்டு பாடத்தை அப்பாவை எழுதி வைக்க சொல்லி விட்டார்.
அன்று பல நாள் திருடன் ஒரு நாள் அகப்படுவான் என்ற கதையாய்,மாறி இருந்த கையெழுத்தால் அன்று நான் பிடிபட்டேன். இத்தனை நாள் ஏமாற்றிய கை வலி கால் வலிகள் அன்று நிஜமாகின. முதன் முறையாய் வகுப்புக்கு வெளியே முட்டி போட வைத்தனர். அதுக்கப்புறம் சொல்ல வேண்டிய அவசியம் இல்லை, நானே என் வேலைகளை செய்து கொள்ள ஆரம்பித்தேன். அன்று நான் கூடுதலாக கற்று கொண்ட இன்னொரு பாடம், வலிக்காமல் முட்டி போடுவது எப்படி என்பதை! பின்னாளில் அவசிய படும் இல்லையா!
என் முதலாம் வகுப்பு ஆசிரியை மிகவும் கண்டிப்பானவர். எப்பவும் உம் என்று முகத்தை தூக்கி வைத்திருப்பார். அவரை பார்த்தாலே எனக்கே குலை நடுங்கும். எப்பொழுதும் அவருடைய கோபத்துக்கு இரையாவது என் காது மடலின் நுனிகள். அவருடைய கூர்மையான நகங்களை வைத்து நன்கு கிள்ளி வைத்து விடுவார். ஒரு நாள், என் பெயரை சொல்லி அழைத்தார், ரொம்பவே பயந்து போனேன், அய்யையோ போச்சுடா என்று காதை கைகளால் மறைத்து கொண்டே அருகில் சென்றேன், ரிபோர்ட் கார்டை கையில் குடுத்து, நீ முதல் ரேங்க், வாழ்த்துக்கள் என்று முறைத்து கொண்டே சொன்னார். இது கனவா, நிஜமா என்று அவர் கிள்ளாத குறைக்கு, நானே என்னை கிள்ளி பார்த்து கொண்டேன். நான் வாழ்க்கையில் வாங்கிய முதல் ரேங்க், அதுவே முதலும் கடைசியும்!
இன்னும் நியபகத்தில் இருக்கும் ஒரு விஷயம், எனக்கு அடிக்கடி ஆகஸ்ட் 15 1947(சுதந்திர தினமும்), ஜனவரி 26 குடியரசு தினமும் குழப்போ, குழப்பென்று குழப்பி தள்ளி விடும். அதனால் ஈசியாக படிக்க நான் செய்தது, விடைகளை எல்லாம், கட்டிலுக்கு அடியில், அம்மாவுக்கு தெரியாமல் எழுதி வைத்து விட்டு, அம்மா கேள்வி கேட்க கேட்க டான் டான் என்று, பார்த்து பார்த்து சொல்லி விடுவேன். பரிட்சைக்கு முந்தய தினம் ஒருவாறு சமாளித்தாலும், எவ்ளோ நாள் சோற்றுக்குள் முழு பூசணியை மறைத்து வைக்க முடியும்! பரிட்சை தாள் திருத்தி வந்தவுடன், அம்மா ஸ்கூலுக்கு வந்து மிஸ்ஸோடு சண்டையிட்டு கொண்டிருப்பார். வீட்டில் நன்கு படிக்கும் பிள்ளைக்கு ஏன் பரிட்சையில் சோபிக்க முடியவில்லை, அம்மா ஆராய்ந்து பார்த்து என்னை கையும் களவுமாய் பிடித்து விட்டார் ஒரு நாள்.அப்புறம் என்ன அடி, படி படி என்று உயிரை வாங்கி என்னை படிக்க வைத்த பெருமை என் அம்மாவையே சாரும்!

 

—-நினைவுகள் தொடரும்


6 பின்னூட்டங்கள்

சில எண்ணங்கள் -14

எங்கோ இருக்கும் நெசவாளி
தறியில் பட்டு நூல் கோர்க்கும்பொழுதே
இந்த சேலை இந்த பெண்ணுக்கு தான்
என்று நினைத்து கொண்டே நெய்வார்..
கொஞ்சம் மெதுவா சொல்லும்மா திரிஷா
நெசவாளியின் வீட்டுக்காரம்மவுக்கு 
கேட்டுட போவுது!!

படம்

எந்த ஒரு கல்யாண வீட்டுக்கு
சென்றாலும் அங்கே வரும் அழகான
மூக்கும் முழியுமாய் வரும் திருமதிகளை
பார்த்து விட்டு ‘இந்த பெண்ணை எனக்கு தான்
முதலில் பார்த்தார்கள்’ என்று மனைவியிடம்
பெருமையடிக்கும் ஆண்களே….
ஒன்று தெரிந்து கொள்ளுங்கள்
உங்கள் மனைவி அந்த பெண்ணை 
பார்த்து பெருமூச்சு விட்டு 
கண்டிப்பாக மனதினுள் எண்ணுவாள்
தப்பிச்சிட்டியேடி!!!

படம்

 

பிள்ளைகளை ஸ்கூலுக்கு கிளப்பி விட
இன்னும் ஐந்து நிமிடங்களே பாக்கி
இருக்கும் போது தான் ஃபோன் வரும்..
கண்ட நேரத்தில யாருனு எரிச்சலோட
நீ எடுடா என்று பையனை கை நீட்ட
அவனும் ஃபோனை எடுத்து ரிசீவரை
காதில் வைத்து விட்டு
பொய்யான வருத்தம்
குரலில் தொணிக்க சொன்னான் 
‘என்னது ஸ்கூல் லேதா???’ 
அதை கேட்டு அதிர்ச்சியடைந்த நான்
ரிசீவரை பிடுங்கி காதில் வைக்க
எவரோ ‘விஷ்ணு லேதா? ‘நு கேட்டு
கொண்டு இருந்தார்…..
அவங்கவங்க பிரச்சனை அவங்கவங்களுக்கு!!

படம்

 

‘பார்பீ ஸ்டிக்கர் இருந்தா வாங்குங்க
இல்லையா டொரேமான் ஸ்டிக்கர்
வாங்கிடுங்க…
எங்க கிளாஸ் பொண்ணுங்களுக்கு
இந்த இரண்டும் தான் புடிக்கும்’
ரக்சா பந்தனை இன்று ஸ்கூலில்
கொண்டாட போகும் என் பையன்!!

படம்

யாருடைய கவனத்தையும் ஈர்க்காமல்
இருப்பதற்க்காக அணிய படுகின்ற
உடைகள் கூட பளிச் பளிச் என்று
கண்ணை சிமிட்டி நம்மை திரும்பி
பார்க்க வைக்கிறது
.
.
.
.
வெள்ளை நிற கற்கள் பதிக்கபட்டு
அழகு வேலைப்பாடுகள் செய்யப்பட்ட
பர்தாக்கள்!!!

படம்

 


6 பின்னூட்டங்கள்

சில எண்ணங்கள் -11

போனவுடன் கடிதம் போடு
புதினாவும் கீரையும் சேரு
புத்திமதி சொல்லும் தாயின்
மொழியே இல்லை!
ஏன் என்றால்………….
.
.
.
.
.
.
Whatsapp இருக்கே
தூரமில்லை!!!

படம்

அதிகாலையிலே உங்கள்
வீட்டின் சமையலறையில்
பூக்கின்ற பளிச் வெள்ளை நிற
பூக்கள் தீடீரென்று சற்றே
சிவந்து சிவந்து பூத்தால்
நீங்கள் தேங்காய் துறுவிய
கையோடு தேங்காய் மூடியையும்
சேர்த்து தூக்க கலக்கத்தில்
துறுவுகிறீர்கள் என்பதை
நினைவில் கொள்ளுங்கள்!!

படம்

மிளகு இருக்கும்
வறுத்த முந்திரி கிடக்கும்
வெண்பொங்கல் அல்ல
வேக வைத்த நிலகடலை அலங்கரிக்கும்
புளியோதரை அல்ல
ரொம்பவும் குழைவாக இருக்கும்
தயிர் சாதமும் அல்ல
ப்ரவுன் நிறத்தில் நெய்யில் வறுத்த
முந்திரி மிளகு நிலகடலையால்
அலங்கரிக்கபட்டு மிதமான காரத்துடன்
கடைசி வாய் சாப்பிடும் வரை 
சூடு தாங்க முடியாமல் நாக்கு
அலற அலற, என்னவாக இருக்கும் என்ற
ஐயம் தீராமலேயே வயிற்றினுள் தள்ளினால்
அதுவே குண்டூர் பெருமாள் கோவில் பிரசாதம்!

படம்

ஏழு ஸ்வரங்கள் உண்டு செய்யும்
மாயங்களில் அவ்வபொழுது
தொலைந்து போகும் எனக்கும்..
பள்ளியில் இருந்து பிள்ளைகள்
வீடு திரும்ப தாமதமாகும்
ஒவ்வொரு நொடியும் ஆட்டோவின்
பேரிரைச்சலை தவிர மற்ற எல்லா வகை 
இசையும் நாராசமாகவே ஒலிக்கின்றது!

படம்

மிஸ் பண்ணவே 
கூடாத விஷயங்கள் இரண்டு…
.
.
.
.
.
.
.
.
1)கத்தி
2)குக்கர் வெயிட்
இல்லாட்டி போனா
அன்றைய நாள் முழுக்க
சமையலறையினுள்
நீங்கள் தொலைந்து
போய் விடுவது நிச்சயம்!

படம்


5 பின்னூட்டங்கள்

சிரிக்கலாம் வாங்க- 6

படம்

ஒண்ணு ரெண்டு மூணு நாலு நாலுக்கப்புரம்
கீழ இருக்கிர நாலு பீட கீழ இறக்கிரனும்
அப்புறம் மேல இருக்கிர பீட கீழ இறக்கிரனும்,
அடுத்து ஆறு ஏழு எட்டு ஒன்பது ஒன்பதுக்கப்புரம்
திரும்ப இந்த நாலு பீடையும் கீழ இறக்கிரனும்
அப்புரம் மேல இருக்கிற பீட மேல தள்ளிரனும்…
டேய் டேய் ப்ளீஸ் டா, விட்டிடு டா..
அம்மாவுக்கு நாக்கு தள்ளிரும் போலயே டா..
இப்படிதான் ஒவ்வொரு நாள் சாயுங்காலமும்
பையன் என் உசுர வாங்குவான்
ABACUS CLASS எடுக்கரேங்கிற பேர்ல!

abacus

சோம்பேறித்தனமான நேரங்களில்
கடிகாரம் முன்னை விட
சிறிது வேகமாய் ஓடுகிறதோ
என்று மனதில் ஒரு ஐயம் தோன்றினால்
அது இயற்கை தான்!!

Runningclock

 

 

T.B
W.B
S.T
DICT
C.W
H.W
2 T.S
.
.

மிஸ்சுக்கும் அம்மாவுக்கும்
மட்டுமே புரிந்த
சங்கேத வார்த்தைகள்
ஸ்கூல் டைரியில்!!

images (1)

குழம்பு கொதிக்கையில்
ஆளை தூக்கும் வாசனை அளித்து
சுவையை நாக்கில் நர்த்தனம் புரிய வைக்கும்
மசாலா பொடி வகைகள்
வெறுமனே தின்று பார்க்கும் போது
மண் போல் சுவை தருவது
ஆச்சரியம் அளிக்கும் உண்மை!!

images (2)

சாப்பிட்டு கொண்டே
செய்தி தாள் படிக்கும்
கெட்ட பழக்கத்தை
இன்றோடு விட்டொழித்தேன்
Paradontax ToothPaste முதல் பக்க ADக்கு
என்னுடைய நன்றிகள்

spit


6 பின்னூட்டங்கள்

எங்க ஊரு ரயில்வே கிராசிங்

படம்                  ஏன் லேட்டுன்னு யாரவது ஸ்கூல்லயோ , அலுவலகங்களிலோ யாரவது கேட்டால் , சொல்வதற்கு இருக்கும் நூறு காரணங்களில், இதுவும் ஒன்று,’ ரயில்வே கிராசிங் மூடி இருந்தது!’ காலையில் அவசர அவசரமாக , மிகமிக சூடான இட்லியை , அம்மாவுக்காக வாயில் அடைத்து, மென்று, விழுங்கி, தண்ணீர் குடித்தும் குடிக்காமலும் , கணக்கு ஸ்பெஷல் வகுப்புக்காக , சைக்கிளில் பறந்து சென்றால், வழக்கம் போல் கேட் மூடி இருக்கும்! ரயில் வந்து, கேட்டை திறந்து , ஸ்கூல்லை அடைவதற்குள் , பாதி வகுப்பு நடந்து முடிந்து விடும்!

இந்த மாதிரி பிரச்சனைகளை சமாளிப்பதற்காகவே ஒரு சின்ன குறுக்கு பாதையை உருவாக்கி வைத்திருந்தார்கள்! கொஞ்சம் தில் இருந்தால் போதும், சைக்கிளை அலேக்காக தூக்கி, ரயில் தடத்தை தாண்டி அந்த பக்கம் சென்று விடலாம்! பத்து பேரில் கிட்டத்தட்ட எட்டு பேர் அந்த குறுக்கு பாதையை தான்  உபயோகிப்பார்கள். அதில் நானும் ஒருத்தி! ரயில் கேட்டை வந்து அடைவதற்கு ஒரு இருநூறு அடி முன்னால் ஒரு ஆற்று பாலம், அதனால் சிறிது மெதுவாகத்தான் ஊர்ந்து வரும். எத்தனையோ தடவை, ரயில் ஊர்ந்து வருவதை பார்த்து கொண்டே, தடத்தை தாண்டி சென்றிருக்கிறேன். நான் தனியாக சென்றவரை எந்த பிரச்னையும் வந்ததில்லை. ஒரு தடவை , தெரியாத்தனமாக , நான் கெட்டது போதாதென்று , என் தங்கையையும். அந்த குறுக்கு பாதையில் அழைத்து சென்றேன். நான் எப்போதும் போல் தாண்டி சென்று விட்டேன், என் தங்கையோ, சைக்கிளை தூக்க முடியவில்லை என்று நட்ட நடு தடத்தில் நின்று விட்டாள்! ரயில் வேறு வந்து கொண்டிருந்தது , நான் என் சைக்கிளை கீழே போட்டு விட்டு , அவள் சைக்கிளை தூக்க சென்றேன், அடுத்த நொடி என் சித்தப்பா கண்களில் தீ பொறியுடன்  முறைத்து கொண்டே சைக்கிளை தூக்கி கொடுத்தார்கள்! அப்புறம் வீட்டில் என்ன நடந்திருக்கும் என்று சொல்லவே வேண்டியதில்லை!

ரயில்வே தடத்தில் பேலன்ஸ் செய்து நடந்து செல்வது , ரொம்பவம் பிடித்தமான ஒரு விஷயம்! எப்பொழுதும் ஒரு கிறுக்கு தனம் செய்யாமல் இருந்ததில்லை, ரயில் வருவதற்கு சற்று முன் , தடத்தின் மேல் சிறு கல்லை வைத்து விட்டு, அது ரயிலின் சக்கரத்தில் உடைந்து  பொடி ஆவதை ஆசையோடு பார்போம்! ஒரு நாள் மூன்று வெவ்வேறு அளவிலான கற்களை ஒன்றன் பின் ஒன்றாக தடத்தின் மேல் வைத்து வழக்கம் போல் காத்து கிடந்தோம்! எங்க ஊரு புகை வண்டி வழக்கம் போல் அக்கட்களை சுக்கு நூராக்கிவிட்டு சென்றது! கூடவே ரயிலின் ஓட்டுனரும் தன் நாக்கை மடக்கி , விரலை ஆட்டு ஆட்டென்று  ஆட்டி விட்டு சென்றார்! அதுக்கப்புறம் ரயில்வே தடத்தின் திசையில் கூட தலை வைத்து படுத்ததில்லை!