எண்ணங்கள் பலவிதம்

என் எண்ணங்களின் நீருற்று


8 பின்னூட்டங்கள்

சில எண்ணங்கள் -25

மின் தடையால்
மிக்ஸி ஓடவில்லை
கிரைண்டர் ஓடவில்லை
ப்ரிஜ் ஓடவில்லை
வாசிங் மிஷின் ஓடவில்லை
மோட்டர் ஓடவில்லை
டீவீ ஓடவில்லை
ஆக மொத்தம் எனக்கு
கையும் ஓடவில்லை
காலும் ஓடவில்லை!

படம்

என்னது பூரிக்கு தொட்டுக்க கிழங்கா??
என்ன கொடுமை அம்மா இது!
.
.
.
.
புரட்டாசியில் புறப்படும்

புதல்வனின் புலம்பல்கள்!!

படம்

ஒரு ஊருல ஒரு ராஜா
இருந்தானாம்…
அவர் ஏழு கடல் தாண்டி
ஏழு மலை தாண்டி ஒரு
எலுமிச்சம்பழம் கொண்டு
வந்தாராம்….
ரெண்டு வரி கதை 
சொல்வதற்குள்ளேயே
பையன் அலுத்து கொண்டான்..
பக்கத்து பெட்டி கடை பாட்டி
கிட்ட கேட்டாலே குடுத்திருக்கும்..
போங்கடா நான் கதையே சொல்லல!!

படம்

ஒன்ன ரெண்டாக்கி
ரெண்ட நாலாக்கி
நால எட்டாக்கி
ஒவ்வொன்றுக்கும் 
இடையே கால் ஸ்பூன்
சீனி போட்டு தண்ணி
ஊற்றி…..
ஐய்யையோ சத்தியமா
ரெசிபி எல்லாம் இல்லை
ஒரே வாயில போட்டு
மாத்திரையை விழுங்க
சொன்னா கேக்க
மாட்டிகிரான் என் பையன்!

படம்

குக்கரின் சூடு பொறுப்பாள்
எண்ணெயில் பொரிந்து கைகளில்
வெடித்து சிதறும் கடுகின்
சூடை பொருட்படுத்த கூட மாட்டாள்
எதிர்பாராமல் கைகளில் கொட்டி
விடும் வெந்நீரை பூ வென்று ஊதி
வலி மறந்து போவாள்
மனம் பொறுக்க மாட்டாமல்
அலறுவாள் ‘அம்மா’ தன் குழந்தையின்
மேனி சுடும் போது மட்டும்!!

படம்


3 பின்னூட்டங்கள்

சில எண்ணங்கள் -18

அழுத்தமாய் இதழ்களை பதித்தும் 
பாவம் இவரால் இப்பொழுதெல்லாம்
இம்ப்ரஸ் செய்யவே முடிவதில்லை
.
.
.
.
இன்னிகோ நாளைக்கோ
என்று நாட்களை எண்ணி
கொண்டிருக்கும் 
Liquid Shoe Polish!!

படம்

இருக்கலாம்..
முன் ஜென்மத்து பந்தமாய்
என் தர்ம பத்தினியாய்
பின்னே எவ்வளவு தான்
கண்டும் காணாமலும்
கேட்டும் கேட்காமலும்
பார்த்தும் பார்க்காமலும்
இருந்தாலும் சற்றும் 
சளைக்காமல் சல சலவென
சொன்னதையே திருப்பி
திருப்பி சொல்லுவதும்
நிமிஷத்துக்கு ஒரு முறை
குறுஞ்செய்திகளை அனுப்பியும்
உயிரை எடுப்பதேனோ
.
.
.
விட்டு தொடரும் பந்தம்
Airtel!!

படம்

அது ஒரு நடு நிசி நேரம்
சோவென்று கொட்டியது மழை
இரவை பகலாக்க முயன்று 
தோற்ற மின்னல்கள்
இருட்டிலே துலாவிய கைகள்
பட்டு உயிர் பெற்ற மின்விளக்கின்
வெளிச்சத்தில் முகம் அலம்ப 
நினைத்து முடியாமல் பச்சை
பொத்தானை அவசரமாக
அமுத்த அய்யோ………….
என்று அலறியது உள்ளம்
டேங்கில் தண்ணீர் 
‘காலி’யானது மட்டுமல்லாமல்
மோட்டரும் அநியாயமாய் தன்
உயிரை விட்டிருந்தது!!

படம்

 

துவையல் செய்வதற்காக
கொத்தமல்லி கரிவேப்பிலை புதினா
சம அளவு எடுத்து சுத்தம் செய்து
வாணலியில் நல்லெண்ணையை காய வைத்து
உளுந்தம் பருப்பு ஒரு கையளவு எடுத்து
போட்டு அது பொன்னிறமானவுடன்
காரத்திற்கேற்ப ஐந்து ஆறு பச்சை மிளகாய்
கிள்ளி போட்டு பத்து பல் பூண்டு உரித்து போட்டு
எலுமிச்சை அளவு புளியும் போட்டு
வதக்கி பின் கொத்தமல்லி கரிவேப்பிலை புதினாவை
அதில் போட்டு வதக்கும் போது எழும்
சுகந்தமான வாசனையின் சுகமான இம்சையில்
அருவியாய் ஜொள் அல்ல வியர்வை ஊற்றெடுக்க
அடுப்படி ஜன்னல் வழியாய் எனக்காகவே
புறப்பட்டு வந்து என் முகத்தை ஸ்பரிசித்து விட்டு
செல்லும் தென்றல் காற்று தான் நிஜமாகவே கவிதை!!

படம்