எண்ணங்கள் பலவிதம்

என் எண்ணங்களின் நீருற்று


3 பின்னூட்டங்கள்

சில எண்ணங்கள் -23

தட்பம் வெப்பம் காற்று
இவை மூன்றும் சேர்ந்த
விபரீத கலவையினால்
வந்து தீர்வதே
காதலும் காய்ச்சலும்!!

படம்

 

இன்று 8848மீ உயரத்தில்
இருந்து கால் தடுக்கி விழ
பார்த்து மயிரிழையில் உயிர்
தப்பினேன்………
.
.
.
இதுக்கு தான் மதிய நேரங்களில்
பையனோடு சேர்ந்து 
‘The Himalayan Range’
பூகோளம் பாடத்தை எல்லாம்
படித்திருக்க கூடாது
என்னமா தூக்கம் வருது!

படம்

 

உச்சி வெயிலில் கூட
இந்த குச்சி ஐஸை பார்த்து
விவரம் தெரிஞ்சவங்க
யாரும் சத்தியமா
உருக மாட்டாங்க
Ice Gola!
படம்

 

 யாரொருவர் தன் மனதினுள்
கோப தாபங்களை கொஞ்சம்
கூட சூடு குறையாமல் 
வைத்திருக்கிராரோ அவர்
கண்டிப்பாக மன புழுக்கத்துக்கு
உள்ளாவாதும் நிச்சயம்….
Casserole!
படம்
 
 


37 பின்னூட்டங்கள்

சப்பாத்தி சொல்லும் வாழ்க்கை பாடம்

images

சப்பாத்திக்கும், நாம புதிதாக தொடங்கும் வாழ்க்கைக்கும், நிறையவே சம்பந்தம் உண்டு! புதிதாக சப்பாத்தி போட படிப்பவர்கள் தெரிந்து கொள்ள வேண்டிய முக்கியமானதொரு விஷயம் என்னவென்றால், முதல் தடவையிலேயே, சப்பாத்தி நல்ல வந்துடாது. நல்லா வரவில்லை, என்ற ஒரே காரணத்துக்காக, சப்பாத்தி போடுவதையே விட்டு விட கூடாது. ஒவ்வொரு முறையும் போட போட தான் வரும். இதே போல், புதிதாக வாழ்க்கையை ஆரம்பிப்பவர்களுக்கும், ஆரம்பத்தில், கற்பனை செய்ததை போல் எல்லாம் நடந்து விடாது! வாழ்க்கையை, வாழ வாழ தான், அதாவது அனுபவம் கூட கூட தான் வாழ்க்கை இனிக்கும்!

முதன் முதலில் சப்பாத்தி மாவ பிசைந்தது எல்லாருக்கும் நல்லாவே நியாபகம் இருக்கும்.. தண்ணீர் கூடி, இல்லை மாவு இறுகி இப்படி எதாவது ஒரு பிரச்சனை ஆகாம இருந்திருக்காது. மாவை கூட்டி, குறைத்து, உப்பு போட மறந்து, சப்பாத்தி செய்து முடிப்பதற்க்குள் போதும், போதும் என்று ஆகி இருக்கும். ஒழுங்காக எல்லாம் நடக்க வேண்டும் என்றால், முதலில் டென்ஷன் ஆக கூடாது. எவ்ளோ பேருக்கு சப்பாத்தி செய்ய போகிறோம் என்பதை முதலில் அறிந்து, அதுக்கு தக்கவாறு மாவு எடுக்க தெரியனும். மறக்காமல் உப்பு போடணும். ரொம்ப நிதானமாய், பொறுமையாய், தண்ணீர் விட்டு கிளறி, ரொம்பவும் தண்ணியாக ஆகி விடாமல், மாவை சிறிது கிளுகிளுவென பிசைந்து, கடைசியில் 2 ஸ்பூன் நல்லெண்ணெய் விட்டு பிசைந்து, உருண்டைகள் இட வேண்டும். சப்பாத்தி அருமையாக வர வேண்டும் எனில், இந்த மாவின் பதம் அருமையாக இருக்க வேண்டும். இதே போல், நம் வாழ்க்கையிலும், நம் வாழ்க்கை துணையோடு, கொஞ்சம் கூட டென்ஷன் ஆகாமல், கூலாக வாழ பழகி கொள்ளுவது மிக மிக அவசியம். எந்த ஒரு விஷயத்திலும் பொறுமையை கடை பிடித்தல் நலம். விட்டு கொடுக்கும் மனப்பான்மையை வளர்த்து கொள்ளுதல் நல்லது.

சிலர், சப்பாத்தி மாவை, மிக கடினமாக பிசைந்து வைத்து விட்டு, டம் டம் என்று அதை போட்டு அடித்து கொண்டு இருப்பர். பாவம் அவர்களுக்கு தெரியாது,எப்படி அடித்தாலும்,அது வர்ர மாதிரி தான் வரும் என்று. அதே மாதிரி, நம் வாழ்க்கையிலும், நம் வாழ்க்கை துணையை அளவற்ற அன்பினால் கவர முயற்சி செய்ய வேண்டுமே ஒளிய வன்முறையாலோ, அடக்குமுறையாலோ, ஆதிக்கத்தாலோ அல்ல!! மென்மையான குணமும், அன்புக்கு கட்டுபடும் மனமும் இருந்தால் போதுமானது..

இப்போ உருண்டைகளை தேய்க்க ஆரம்பிக்கலாம். ஒவ்வொரு உருண்டையாய் எடுத்து, மாவில் தோய்த்து, சப்பாத்தி கட்டையில் வைத்து, உருளையால் மாவை அழுத்தி, வட்ட வடிவமாய் இழுக்க வேண்டும். இவ்வாறு தேய்க்கும் போது, நிதானம் மிகவும் அவசியம். அவசர பட்டு தேய்த்தோமேயானால், கட்டையில் மாவு ஒட்டி கொண்டு விடும். நேரம் வீணாகி, மாவும் இழுக்க வராமல் போய் விடும். இதே மாதிரி, வாழ்க்கையிலும், இன்பம் போல துன்பமும் அப்ப அப்ப தலை காட்டாமல் இருப்பதில்லை. இந்த மாதிரி நேரத்தில், அவசரப்பட்டு எந்த ஒரு முடிவும் எடுக்க கூடாது. எந்த ஒரு சண்டை, சச்சரவு எல்லவற்றையும் மிக பொறுமையாய் கையாளுவது அவசியம். சரியான முடிவுகளை, சரியான நேரத்தில் எடுக்க தெரிந்து கொண்டால், வாழும் நிமிஷங்கள் ஒவ்வொன்றும் சந்தோஷத்தில் மட்டுமே கறைந்து செல்லும்.

அடுத்த முக்கியமான வேலை, தேய்த்த சப்பாத்தி ஒவ்வொன்றையும் சப்பாத்தி கல்லில் போட்டு எடுப்பது. இதற்கு முதலில் கல்லை காய வைக்க வேண்டும். கல் ரொம்பவும் காய்ந்து விட கூடாது, சரியான சூட்டில், சப்பாத்திகளை போட்டு எடுக்க வேண்டும். அப்ப அப்ப சப்பாத்தியை திருப்பி போடணும், ஒரே பக்கமாய் ரொம்ப நேரம் வேக விட்டு விட கூடாது, பிறகு வலுத்து கொண்டு வறட்டி போலாகிவிடும். திருப்பி போட்டு எடுப்பதற்க்கு முன்னால், எண்ணெய் சிறிது விட்டு எடுக்கலாம்.. இதே போல், வாழ்க்கை துணைவரோடு எழும் ஊடல்கள் ரொம்ப நேரம் தாக்கு பிடிக்க விட கூடாது. அப்ப அப்ப, அவரவர் செய்த தவறுகளை ப்ரஸ்பரம் மறந்து, மன்னித்து, காதல் குறையாமல் பார்த்து கொள்வது நலம்.

ஒரே மாதிரியே சப்பாத்தி போட்டாலும் போர் அடித்து விடும். ஒரு நாள், புல்கா, ஒரு நாள் காய்கரி ஸ்டஃப் செய்யபட்ட சப்பாத்தி, வாழைப்பழ சப்பாத்தி, பால் ஊற்றி பிசைந்த சப்பாத்தி, நெய் சப்பாத்தி என்று வித விதமாய் செய்தால் நல்லது. நாமும், அப்ப அப்ப, நம்ம ஸ்டைல மாத்தி, வாழ்க்கை துணையோட கண்களுக்கு ஃப்ரெஷா தெரிந்தல் நல்லது தானே, வாழ்க்கை போர் அடிக்காமல், ஒவ்வொரு நாளும் புதிதாகவும்,வாழ்க்கை அழகாகவும் இருக்கும்….


8 பின்னூட்டங்கள்

ஒளிந்திருந்த முகம் -2

படம்

Belenனின் கோபமான, கோர முகத்தை காட்டிய இயக்குனர், அவளுடைய கடந்த கால நிகழ்வுகளுக்கு நம்மையும் இழுத்து செல்கிரார்.. Belenனின் காதலன் Adrianனுக்கு, கொலம்பியாவில் உல்ல Bogota மாநகரத்தின், Cவை, தலைமை ஏற்று, வழி நடத்த அழைக்கிரார்கள்! அவன் தன் உயிர்க் காதலி Belenனையும், அழைத்து செல்கிரான். Belen தன் காதலனுக்காக, தான் பார்த்து கொண்டிருக்கும் வேலையை துறந்து விட்டு, காதலோடு அவனை தொடர்ந்து செல்கிறாள்.படம்

Bogotaவில், ஊருக்கு ஒதுக்குபுறமான இடத்தில், அமைந்த, அரண்மனை போன்ற பெரிய வீட்டை வாடகைக்கு எடுக்கிரார்கள். அந்த வீடு, Emma என்ற ஒரு பெண்மணிக்கு சொந்தமான வீடு. அவளுடைய கணவர் ஒரு ஜெர்மானியர். அவர் இறந்து விட்ட படியால், அவள் இந்த வீட்டில் இருக்க விரும்பவில்லை எனவும், தான் பெர்லின் செல்ல விரும்புவதாகவும், குறிப்பிடுகிராள். தன் வளர்ப்பு நாயான Hanசை பார்த்து கொள்ளுமாரும், பெர்லின் கிளம்புவதற்க்கு முன், ஒரு தடவை, வருவதாய் சொல்லி விட்டு கிளம்புகிராள்.படம்

Adrianனும், Belenனும், தங்கள் வாழ்க்கையை அவ்வீட்டினுள் இனிதே ஆரம்பிக்கின்றனர்!! ஒரு நாள் தான் வழி நடத்தும்,இசை குழுவினர் அரங்கேற்றிய நிகழ்ச்சியை காண்பிக்க, Belenனை அழைத்து கொண்டு செல்கிரான் Adrian. மிக அற்புதமாக, இசை குழுவை வழி நடத்தும் Adrianனை கண்டு, உள்ளம் பூரித்து போகிராள் பெலென். நிகழ்ச்சி, பெருத்த ஆரவாரத்துடனும், கைத்தட்டலுடன் இனிதாக முடிகிரது. மிகுந்த உற்சாகத்துடன் Adrianனை தேடி செல்கிராள் பெலென். அவனை, காணாமல் ஏமாற்றம் அடையும் அவள், ஒரு மறைவான இடத்தில்,பேசி கொண்டிருக்கும், Adrianனையும், அவனுடைய இசை குழுவின், வயலின் வாசிக்கும் Veronicaவையும் முதன் முறையாக பார்க்கிராள். பிறகு, இருவரும் வீடு திரும்புகிரார்கள்.

அடுத்த நாள், Adrian வேலைக்கு செல்ல, பெலெனும் தன் வேலை சம்பந்தமாக, தனியே ஊருக்குள் செல்கிராள். வேலை வேகமாக முடிந்த படியால், Adrian வேலை செய்யும் இடத்துக்கு, சென்று விட்டு வர நினைக்கிராள். அவனுடைய அலுவலகத்துக்கு உற்சாகமாக சென்றவளுக்கு,ஏமாற்றமே மிஞ்சுகிரது. அங்கே, Adrian, Veronicaவுடன், சிரித்து பேசி, தண்ணியடித்து கூத்தடித்து கொண்டிருக்கிரான்! படம்விருட்டென்று, அவனை இழுத்து கொண்டு வெளியேறிய, பெலென்,வீட்டுக்கு செல்லும் வரை, அவனை கடிந்து கொண்டே வருகிராள். Adrianனும், தனக்கும், Veronicaவுக்கும், எந்த ஒரு உறவும் இல்லை என்று அவள் தலையில் அடிக்காத குறையாக சத்தியம் செய்கிரான். ஊடலுடன் ஆரம்பித்த அந்த தினம், இரவில் காதலுடன் முடிவடைகிரது.

அடுத்த நாள், Adrian வேலைக்கு, செல்ல ஆயுத்தமாக, அவனின், கை பேசியை எடுத்து கொண்டு, கோபமாக, அவனை இடை மறிக்கிராள் பெலென். ‘உனக்கும், Veronicaவுக்கும் என்ன சம்பந்தம், அதிகாலையில், எதற்கு இவ்வளவு குறுஞ்ச்செய்திகள்’ என்று கோபம் கொள்கிராள். அப்பவும், Adrian, முகத்தில் சின்ன சலனம் கூட இல்லாமல், ‘ உன்னை தவிர வேறு ஒரு பெண் என் வாழ்வில் கண்டிப்பாக இல்லை’ என்று பதிலளித்து விட்டு தன் வேலைக்கு செல்கிரான். அப்பொழுது, அந்த வீட்டினுடைய உரிமையாளர், Emma ,வீட்டுக்கு வருவதாய் போன் செய்கிரார். அடுத்த, அரைமணி நேரத்தில் வந்து சேரும் Emma, தான் பெர்லின் புறப்பட்டு விட்டதாகவும், கடைசியாக, பெலெனை பார்த்து விட்டசெல்ல வந்ததாகவும் குறிபிடுகிறாள். பெலெனும், எம்மாவும் மனம் விட்டு பேசி கொள்கின்றனர். எம்மா, தன் ஜெர்மானிய காதல் கணவனுக்காக, இந்த Bogota மாநகரத்துக்கு வந்தவள், இன்று தன் சொந்த ஊரான, பெர்லினுக்கு கிளம்பி விட்டதாக கூறுகிராள். உடனே பெலெனும், தானும், தன் காதலனுக்காக, இங்கு வந்ததாகவும், இப்படி இங்கே காதலனை நம்பி வந்து,பெரிய பிழை செய்து விட்டேனோ என்று மன கிலேசம் கொள்கிராள்.படம்

இதை கேட்ட எம்மா, பெலெனுக்கு, தன் மனதின் உள்ளே, மறைத்து வைத்த ரகசியத்தை போட்டு உடைக்கிராள். எம்மா, பெலெனை, வீட்டினுள்ளே அவர்களுடைய படுக்கை அறைக்கு அழைத்து செல்கிராள். அங்கே, இருந்த முகம் பார்க்கும் கண்ணாடியின் பின்னே, ஒரு ரகசிய அறையை காண்பிக்கிராள். அந்த அறைக்கான தாழ்ப்பாள், புத்தக அலமாரின் உள்ளே அமைந்திருந்தது. இவர்களுடைய, படுக்கையறையிலும், குளியலறையிலும், இருக்கும் கண்ணாடி, One Way Vision கண்ணாடி. ரகசிய அறையிலிருந்த படியே, படுக்கையறையிலும், குளியலறையிலும் நடப்பவற்றை தெள்ள தெளிவாக காண முடியும், சத்தத்தையும் தெளிவாக கேட்க முடியும் என்று சொல்கிராள். அதே போல், ரகசிய அறையில் இருந்து, ஒரு சின்ன சத்தம் கூட வெளியே வராது, என்றும் சொல்கிராள். இந்த வீடு, தன் ஜெர்மானிய கணவரின் ஆசைப்படி, ஒரு இத்தாலிய கட்டிடம் கட்டுபவராள் வடிவமைக்கப்பட்ட வீடு. போர் காலங்களில், மறைந்து கொள்வதற்கு என்று கட்ட பட்ட ஒரு ரகசிய அறை இது என்றும், Adrianனின் உண்மையான காதலை கண்டு கொள்ள இந்த அறை உனக்கு உதவும், என்று கூறிவிட்டு, விடை பெறுகிரார் எம்மா.படம்

அன்றே, தன் உயிர் காதலனுக்கு, காதல் பரிட்சை, வைத்து, சிறிது அவனுக்கு, புத்தி புகட்ட எண்ணுகிராள் பெலென்.அவசர, அவசரமாக, தன் உடைமை அனைத்தையும், எடுத்து கொண்டு, அந்த ரகசிய அறைக்குள் தஞ்சம் அடைகிராள் பெலென். அதற்கு முன், தன்னை தானே, ஒரு ஒளி படத்தை எடுத்து, முன் பதிவில் கூறியபடி, தான் அவனை விட்டு  நீங்கி செல்வதாகவும், இனி தன்னை தேட வேண்டாம் , இந்த முடிவே இருவருக்கு நல்லது என்று உருக்கமாக பதிவு செய்து, அவன் அதை எடுத்து பார்க்க, ஒரு பேப்பரில் குறிப்பு எழுதி, அதை முகம்பார்க்கும் கண்ணடியில் ஒட்டுகிறாள். Adrianனின் கார் வரும், சத்தம் கேட்கவே, அவசர அவசரமாக, ரகசிய அறைக்குள் ஓடி,கதவை சாத்துகிராள். அந்தோ பரிதாபம், ஓடுகிர அவசரத்தில், ரகசிய அறையின் சாவி, கீழே விழுவது கூட தெரியாமல், ஓடி ,கதவை சாத்தி கொண்டாள், நம் கதா நாயகி..

Adrian, காலையில் நடந்த வாக்குவாதங்களை மனதில் வைத்து, தன் காதலி பெலெனுக்காக, அழகான பூங்கொத்துடன், படுக்கையறைக்குள் நுழைகிரான். பெலெனை, காணாமல், தவிக்கும் அவன் கண்ணில், அவள் கண்ணடியில்,ஒட்டிய குறிப்பு கண்ணில் படுகிரது. ஒளி படத்தை பார்த்து விட்டு, துக்கம் தாங்க முடியாமல், ஒவென்று கதறிஅழுகிரான். இவை அனைத்தையும் ஒன்று விடாமல், ரகசிய அறையில் இருந்து பார்த்த பெலெனுக்கு, தான் தேவை இல்லாமல், தன் அன்பு காதலனை சந்தேகம் கொண்டு விட்டோமோ என்று பதறியடித்து ,ரகசிய அறையை திறந்து வெளியே சென்று தன் அருமை காதலனை கட்டிகொள்ள துடிக்கிராள்.

படம்சாவியை எடுக்க தன் கை பையின்னுள், துலாவிய போது தான், தான் சாவியை தொலைத்தது அவளுக்கு தெரிய வருகிரது. காட்டு கத்தல் கத்தியும், பிரயோஜனம் இல்லை, ஒரு சத்தம் கூட, வெளியே Adrianனுக்கு கேட்க வில்லை. அழுது முடித்து, வாஷ்பேசினில், தண்ணீர் நிரப்பி, முகம் கழுவிய Adrianனை, குளியலறை கண்ணாடி வழியாய், பார்க்கும் பெலென், ஒரு உருட்டு கட்டையால், ரகசிய அறையில் செல்லும் தண்ணீர் குழாய்களை அடித்து, வாஷ் பேசினில் எழுந்த நீர் அலைகள் மூலம், அவனின் கவனத்தை கவர முயலுகிராள்.. மனம் வெறுத்த அவனோ, அவள் பிரிந்து சென்ற துக்கம் தாங்காமல், வீட்டை விட்டு, தன் கார் போன போக்கில் செல்கிரான். விதியை நொந்தவாறு பெலென் ரகசிய அறைக்குள் செய்வதறியாமல் திகைக்கிறாள். பெலென் தப்பித்தாளா, அவள் காதலனுடன்  சேர்ந்தாளா, பொறுத்திருந்து அடுத்த பதிவில் பார்ப்போம்.


16 பின்னூட்டங்கள்

என்னை இன்னொரு முறை திருமணம் செய்துகொள்வாயா!!!

படம்

இப்படியொரு கேள்வியை யாரு கேப்பா எனது அருமை கணவரை தவிர! அதுவும், இரவு 11 மணிக்கு, நான் பாதி தூக்கத்துக்கு சென்ற பிறகு, எழுப்பி கேட்டார், ‘WILL U MARRY ME FOR THE SECOND TIME?’ இப்படி பாதி தூக்கத்தில் எழுப்பி கேட்டால், என்ன சொல்ல, மனதில் இருப்பதை தவிர! கொஞ்சம் கூட யோசிக்காமல் சொன்னேன்,’ அய்யயோ, முடியவே முடியாது, சான்சே இல்லை, மாட்டவே மாட்டேன், நடக்கவே நடக்காது, இப்படி எல்லாம் புலம்பி விட்டு, போர்வையை இழுத்து பொத்தி கொண்டு, ஆழ்ந்த உறக்கத்துக்கு சென்றே விட்டேன்! அய்யோ பாவம் அவர், இப்படி ஒரு பதிலை, என்னிடம் எதிர்ப்பார்த்திருக்கவே மாட்டார் !!

காலையில் எழுந்த போது தான் கவனித்தேன், பேப்பரும் கையுமாய்,சிறிது முகத்தை தூக்கி வைத்து கொண்டு உட்கார்ந்திருந்தார்! சூடான,தேனீருடன், அவர் அருகில் சென்று அமர்ந்தேன்! நேற்று எதற்காக,அப்படி ஒரு கேள்வியை கேட்டீர்கள்,என்று சிரித்து கொண்டே கேட்டேன்! அவரும் மெல்ல வாயை திறந்தார், போன வாரம் ஒரு கறுத்தரங்கில், ஒருவர் பேசினார், ‘ யார் வேண்டுமானாலும், உங்கள் மனைவியிடம் கேட்டு பாருங்கள், ‘இன்னொரு முறை கடந்த காலத்துக்கு செல்ல ஒரு வாய்ப்பு கிடைத்தால், சென்று,என்னையே மீண்டும் வாழ்க்கை துணையாக தேர்வு செய்து, திருமணம் செய்து கொள்வாயா??’ என்று, எந்த ஒரு மனைவியும், ‘கண்டிப்பாக உங்களை தான் திருமணம் செய்து கொள்வேன்’ என்று கூற மாட்டாள், என்று கூறினார்! என் கணவர் மிகுந்த மன வருத்ததோடு குறிப்பிட்டார்,’நீயும் இப்படி சொல்லுவனு நான் கொஞ்சம் கூட எதிர்பார்க்கல!!’

இப்பவும் நான் அடித்து கூறினேன், கண்டிப்பா மாட்டவே மாட்டேன்! திருமணம் முடிந்து, இது ஒன்பதாவது வருடம் நடந்து கொண்டிருக்கிறது! பெற்றோர் பார்த்து நடத்தி வைத்த திருமணம்! எதிரும் புதிரும், எலியும் பூனையும், தென் துருவம் வட துருவம், இப்படி சொல்லி கொண்டே போகலாம், எங்கள் இருவரையும்!! மிக சிறந்த பக்திமான் அவர்! நானோ, கடவுள் பக்தி கிடையாதுனு சொல்ல முடியாது, ஒவராக கிடையாது!
அதுவே, அவருக்கு ஆரம்பத்தில் பெரிய ஷாக் தான்! போக, போக புரிந்தும் கொண்டார்! எனக்கு பேசாமல், இருக்கவே முடியாது, அவரோ அமைதியின் சின்னம்! எனக்கு பிடித்த எதுவுமே அவருக்கு புடிக்காது! ஆரம்ப காலங்களில், என் சமையல் எதுவுமே அவருக்கு புடிக்காது! அவருக்கு,என்ன புடிக்கும், என்ன புடிக்காது, எது அவருக்கு ஒத்து கொள்ளும்,எது ஒத்து கொள்ளாது, இப்படி ஒவ்வொரு விஷயமும், அவருடன் பழகி பார்த்து தான் அறிந்து கொள்ள முடிந்தது! ஆரம்பத்தில், சண்டை கோழியாய் இருந்த நாங்கள், அந்த சண்டைகளையே எங்களுக்கு சாதகமாய் ஆக்கிக் கொண்டோம்! ஒருவரை ஒருவர், நன்கு புரிந்து கொண்டோம்! கிட்டதட்ட, ஒவ்வொரு நாளும்,ஏதாவது ஒன்று புதிதாய் ஒருத்தரை ஒருத்தர் அறிந்து கொள்கிறோம், ஏதாவது ஒரு விதத்தில்! அனாவசிய சண்டைகள் குறைந்து, அன்பு கூடி கொண்டே செல்கிறது, வருடங்கள் செல்ல செல்ல! இது தான் காதலோ??

இப்போ சொல்கிறேன், நான் ஏன், என் கணவரிடம், ‘முடியவே முடியாது, மாட்டவே மாட்டேனு’சொன்னேன் என்று , இவ்வளவு வருட காலம், ஒருத்தரை, ஒருத்தர் புரிந்து, அவருக்காக நானும், எனக்காக அவரும், நிறையவே மாறி இருக்கிறோம், மாறியது கூட அறியாமல்! இவ்ளோ தூரம் வந்தாச்சு, இப்போ போய், திருப்பி முதலில் இருந்து, யாராவது ஆரம்பிப்பார்களா!! என்னங்க நான் சொல்லுரது ரைட்டு தான!!!!!!!


10 பின்னூட்டங்கள்

திகட்டாத காதல்

படம்

எப்போ இருந்து இந்த காதல் ஆரம்பிச்சிதுனு சரியா சொல்ல தெரியல!

இன்னிக்கு நேத்துனு இல்ல, ரொம்ப வருஷமா தீராத காதலா வளர்ந்து கிட்டேதான் இருக்கு!

இன்னிக்கு வரைக்கும், கொஞ்சம் கூட அந்த காதல் குறையவே இல்ல!

ஆனா யார்கிட்டையும் சொன்னதே இல்ல, ஏன்னா சொன்னா அது காதலே இல்லயே!

சரி இப்போவாது யாருனு சொல்லி தொலைனு சொல்லுரீங்களா

, இருங்க, இருங்க எல்லாம் நம்ம ஊரு ஸ்வீட் மேலதான்! அதாங்க, இந்த நெய், பால், அது இதுனு போட்டு  செஞ்சு  குடுப்பாங்கலே அதே தான்!


நமக்கு எவ்ளோ பிரச்சனை இருந்தாலும், ஒரே ஒரு ஸ்வீட் அ வாயில போட்டு, கண்ண மூடிட்டு, அந்த சில நிமிடங்கள, உலகை மறந்து ரசியுங்க!

நம்ம மனச அமைதி படுத்த இத விட ஒரு ஈசி, டேஸ்டி வழி இருக்கா என்ன!

ஆனா நான் ஒரு தடவை கூட, ஸ்வீட் பிரியைனு பகிரங்கமா அறிவிச்சதே இல்லை!

எப்போ ஸ்வீட் பத்தி பேசுனாலும், அது எனக்கு சுத்தமா பிடிக்காத மாதிரியே தான் பேசுவேன்!

ஸ்வீட் எல்லாம் ரொம்ப சாப்பிடாதீங்க, உங்க வாயை கொஞ்சம் கன்ட் ரோல் பண்ணுங்கனு கூசாம மத்தவங்களுக்கு அட்வைஸ் பண்ணுவேன்!

எல்லா அட்வைஸும் ஸ்வீட் கண்ணுல படாத வரைக்கும் தான்! ஸ்வீட் வீட்டுக்குள்ள வந்துரிச்சுனா, என்னால, என் வாயையோ, என் கையையோ, சத்தியமா கன்ட் ரோல் பண்ணவே முடியாது!

போகிர வழி, வர்ர வழினு, ஸ்வீட் ட கடந்து போகும் போதெல்லாம், ஒன்ன எடுத்து வாயில போடாம இருந்ததே இல்ல!

ம ன சு ஒரு பக்கம், வெய்ட் கெய்ன் பத்தி அலெர்ட் பண்ணாலும், இன்னொரு பக்க மனசு, யார் பேச்சையும் கேக்காது!!

ஒவ்வொரு ஸ்வீட் ட வாயில போடும் போதும், நானே எனக்குள்ள சொல்லிப்பேன், ‘இன்னிக்கு ஸ்வீட் சாப்பிடுர கோட்டா முடிச்சதுனு… 

குடிகாரன் பேச்சாவது, விடிஞ்ச்சாதான் போச்சு, என் பேச்சு, ஒரு மணி நேரத்திலேயே போச்சு!!!

ஒரே ஸ்வீட் டா இருந்தா கூட பரவாயில்லை, ஒன்னு இல்ல ரெண்டு, இல்ல மிஞ்சி போனா  மூனு சாபிட்டா போர் அடிச்சிடும்!

இந்த assorted ஸ்வீட் இருக்கு பாருங்க அது கொடுமை, இது கொஞ்சம், அது கொஞ்சம்னு மனச அலைய வெச்சிடும்!

எல்லாம் சாப்பிடுர வறைக்கும் நல்லாதான் இருக்கும், எப்பவாது, ஸ்வீட்ட சாப்பிட்டு பிரச்சனை ஆச்சு, ஸ்வீட் மேல கோவம் பயங்கரமா வந்துடும்!

 அத வாங்கி குடுத்தவங்க மேல அத விட பயங்கரமா வந்துடும்!!!

ஒவ்வொரு தடவையும், தீபாவளி முடிந்து, திகட்ட, திகட்ட ஸ்வீட்ட காலி செஞ்ச பிறகு, தவறாம, என் கணவர் கிட்ட சொல்வேன், இந்த ஸ்வீடட பாத்தாலே எரிச்சல் எரிச்சலா வருது, இனிமே, ரெண்டு வருஷத்துக்கு, இந்த ஸ்வீட் பக்கம் தலை வெச்சி கூட படுக்க மாட்டேனு சத்தியம் பண்ணுவேன்!!

ஆன என்ன பண்ண, எவ்ளோதான் ஸ்வீட்ட வீட்ட விட்டு தள்ளி வெச்சாலும், கடவுளுக்கே பொறுக்காது!!

திருப்பதி இல் இருந்து, பெருமாளே பார்த்து, அப்போ, அப்போ, யார்கிட்டையாவது லட்டு குடுத்து அனுப்பிச்சுடுவார்! செஞ்ச சத்தியத்த எல்லாம், மறந்து, இது சாமி பிரசாதம் நு சொல்லி சாப்பிட வேண்டியதுதான்!!!