எண்ணங்கள் பலவிதம்

என் எண்ணங்களின் நீருற்று


4 பின்னூட்டங்கள்

சில எண்ணங்கள் -1

சிக்கனம் பற்றி,
அவ்வப்பொழுது யோசித்தாலும்,
மனது அலெர்ட் ,
ஆவது என்னவோ,
பொருள் காலியாக,
போகவிருக்கும்,
கடைசி தருணத்தில்,
மட்டும்தான்!!!

படம்

 

 

சில்லுனு ஒரு காற்று,
இதமான தூறல்,
ஈரமான செடிகள்,
ஒளி வெள்ளத்தில், 
சிகப்பு, பச்சை, மஞ்சள், பர்பிள் என,
கலர், கலராய்,
மனம் மயங்க ,
கண்கள் கூச,
கால்கள் மட்டும்,
சதக் சதக் என்று,
சொருகி கொண்டே வந்தது ,
 புதை மணலுக்குள் …..
.
.
.
மழை கால ,
மாலை நேர காய்கறி சந்தை!!!!
படம்
 
 
நம்ம எதிர்ல யானை, பல்லி ,
இதுல எது குடு குடுன்னு,
ஓடி வந்தாலும்,
நமக்கு திக்கு திக்குன்னு இருக்கும்,
ஏன் தெரியுமா….??
.
.
.
யானை நம்மை மிதித்து விடுமோ,
இல்லை பல்லியை நாம மிதித்து விடுவோமோ என்று!!!
படம்