ஒரு நாள் தாங்கி பிடித்தேன்
மறு நாள் கை நழுவ விட்டேன்
உனை நான் கொல்லாமல்
கொன்று புதைத்தேனே
மன்னிப்பாயா…..
என் உயிர் கை பேசியே!
உளுந்தை ஊற வைத்து
நன்கு அரைத்து
உப்பு, வெங்காயம், மிளகாய்,
கரிவேப்பிலையுடன் சிறிது
அன்பையும் சேர்த்து
துளி கூட எண்ணெய்
குடிக்காமல் சுட சுட மெது
வடை சுட்டு குடுத்து
விட்டு ஆசையுடன் கணவரின்
விமர்சனத்தை எதிர்பார்த்தால்
நன்கு ருசித்து புசித்து விட்டு
சொல்வார் உளுந்து நல்ல
உயர்ந்த ரகம் போல என்று..
முடிவு செய்தாயிற்று
இனி அடுத்த வாரம் வடை
சுடுவதற்கு பதில் ஒரு
கிண்ணத்தில் இதே உளுந்தை
கொஞ்சம் போட்டு ஸ்பூன்
போட்டு குடுத்து விட
வேண்டியது தான்!!
நான் எப்போ வருவேன்
எப்படி வருவேன்னு சொல்ல
முடியாது ஆனா மசாலா
நெடி மூக்குல ஏறுகிர ஒவ்வொரு
நொடியும் கண்டிப்பா வந்தே தீருவேன்
.
.
தும்மல்!
வைரசுக்கும் என் மூச்சு
குழாய்க்கும் இடையே
நடந்த ‘வைரஸ்ஸே வெளியேறு’
போராட்டத்தின்
உச்ச கட்டமாய் மூக்கடைத்து
தன் வேலை நிறுத்தத்தை
பகிரங்கமாய் உடம்புக்கு அறிவித்து
இருக்கிறது என் மூக்கு!!