எண்ணங்கள் பலவிதம்

என் எண்ணங்களின் நீருற்று


20 பின்னூட்டங்கள்

சில எண்ணங்கள் -44

யாதொரு இழப்பின் கொடுமையையும்
தாங்கி கொள்ள சிறு வயதிலிருந்தே
மனம் பழகி கொள்ளுகிறது நாம் ஊதிய
ஒவ்வொரு பலூன் உடையும் போதும்!!

படம்

உன்னால்
தலை முதல் கால் வரை
உருகுகிறேன்..
உன் தலை மறைந்த பின்பும்
மருகுகிறேன்..
இது எது வரையில் என்று
மருளுகிறேன்..
உன் குளிர் முக நினைவில்
வருந்துகிறேன்..
கோடை வெயில்!

படம்

எந்த ஒரு மருத்துவரை 
பார்க்க கூட்டம் கொள்ளே
கொள்ளே என்று நிற்கிறதோ
அங்கே யாரும் சொல்லாமலே
நாம் அறிந்து கொள்ளும் ரகசியம்
அங்கே கொள்ளையடிக்கப்படுவதில்லை!!

படம்

 

பெயர் என்னது??
ப்ளேசரா இல்லை..
பைஜாமாவா இல்லை..
குர்தாவா இல்லை..
ஐய்யோ என்ன பெயர்..
என்ன பெயர்..
ஆங்.. நியாபகம் வந்தது
ஷெர்வானி
ஒவ்வொரு தடவை கூப்பிட
நினைக்கும் போதும் மறந்து
தொலைக்கும் பக்கத்து வீட்டு
பெண்ணின் பெயர்!!

படம்

பார்த்த பின்னே ஏற்படும் 
பரவசத்தை விட பார்ப்பதற்கு 
முன்னே ஏற்படும் எதிர்பார்ப்புடன்
கூடிய பரவசமே கூடுதல் மகிழ்ச்சியை தருவது..

படம்

 

கொட்டுகிற அருவியில்
காட்டாற்று வெள்ளத்தை
கோர்த்து விட்டாற் போல்
கோடை காலத்து கடும்
வெயிலில் மின் தடையும்
கை கோர்த்து கொள்ள
ஊத்தி தள்ளுகிறது வியர்வை!!

படம்

 


3 பின்னூட்டங்கள்

சில எண்ணங்கள் -18

அழுத்தமாய் இதழ்களை பதித்தும் 
பாவம் இவரால் இப்பொழுதெல்லாம்
இம்ப்ரஸ் செய்யவே முடிவதில்லை
.
.
.
.
இன்னிகோ நாளைக்கோ
என்று நாட்களை எண்ணி
கொண்டிருக்கும் 
Liquid Shoe Polish!!

படம்

இருக்கலாம்..
முன் ஜென்மத்து பந்தமாய்
என் தர்ம பத்தினியாய்
பின்னே எவ்வளவு தான்
கண்டும் காணாமலும்
கேட்டும் கேட்காமலும்
பார்த்தும் பார்க்காமலும்
இருந்தாலும் சற்றும் 
சளைக்காமல் சல சலவென
சொன்னதையே திருப்பி
திருப்பி சொல்லுவதும்
நிமிஷத்துக்கு ஒரு முறை
குறுஞ்செய்திகளை அனுப்பியும்
உயிரை எடுப்பதேனோ
.
.
.
விட்டு தொடரும் பந்தம்
Airtel!!

படம்

அது ஒரு நடு நிசி நேரம்
சோவென்று கொட்டியது மழை
இரவை பகலாக்க முயன்று 
தோற்ற மின்னல்கள்
இருட்டிலே துலாவிய கைகள்
பட்டு உயிர் பெற்ற மின்விளக்கின்
வெளிச்சத்தில் முகம் அலம்ப 
நினைத்து முடியாமல் பச்சை
பொத்தானை அவசரமாக
அமுத்த அய்யோ………….
என்று அலறியது உள்ளம்
டேங்கில் தண்ணீர் 
‘காலி’யானது மட்டுமல்லாமல்
மோட்டரும் அநியாயமாய் தன்
உயிரை விட்டிருந்தது!!

படம்

 

துவையல் செய்வதற்காக
கொத்தமல்லி கரிவேப்பிலை புதினா
சம அளவு எடுத்து சுத்தம் செய்து
வாணலியில் நல்லெண்ணையை காய வைத்து
உளுந்தம் பருப்பு ஒரு கையளவு எடுத்து
போட்டு அது பொன்னிறமானவுடன்
காரத்திற்கேற்ப ஐந்து ஆறு பச்சை மிளகாய்
கிள்ளி போட்டு பத்து பல் பூண்டு உரித்து போட்டு
எலுமிச்சை அளவு புளியும் போட்டு
வதக்கி பின் கொத்தமல்லி கரிவேப்பிலை புதினாவை
அதில் போட்டு வதக்கும் போது எழும்
சுகந்தமான வாசனையின் சுகமான இம்சையில்
அருவியாய் ஜொள் அல்ல வியர்வை ஊற்றெடுக்க
அடுப்படி ஜன்னல் வழியாய் எனக்காகவே
புறப்பட்டு வந்து என் முகத்தை ஸ்பரிசித்து விட்டு
செல்லும் தென்றல் காற்று தான் நிஜமாகவே கவிதை!!

படம்