எண்ணங்கள் பலவிதம்

என் எண்ணங்களின் நீருற்று


16 பின்னூட்டங்கள்

சில எண்ணங்கள் -36

நம் வாழ்க்கையோ வாழைக்காயோ
யாரொருவர் வாயிலும்
பச்சையாய் விழாதவரையில் நலம்..
விழுந்து விட்டால் நீங்காத கறை
ஏற்பட்டு விடுவது நிச்சயம்!!

images (5)
எல்லோரும் ஒன்று கூடி குழையட்டும்
அன்பு நெய்யாய் உருகி ஓடட்டும்
உள்ளத்தில் மகிழ்ச்சி வெல்லமாய் கல்கண்டாய் இனிக்கட்டும்
முந்திரி திராட்சையாய் குதூகூலம் நிறையட்டும்
அழகாய் பொங்கட்டும் தங்கள் வீட்டு பொங்கல்

1010404_586413751451538_49336745_n

ஆலமரத்தடி இல்ல தான்
தோளில் வெள்ளை துண்டு போடல தான்
வாயில் வெத்தலையை குதப்பி குதப்பி
புளிச் புளிச் என்று துப்பலை தான்
ஆனாலும் என் பசங்க வீட்டில் இருக்கும்
விடுமுறை தினங்களில் காலை எழுந்ததில் இருந்து
இரவு கண் அயரும் வரை 1008 பஞ்சாயத்து
செய்து தீர்ப்பு சொல்லிட்டு தானுங்க இருக்கேன்!!

579087_350795664981287_1356424568_n

டேய் டேய்..
ப்ளீஸ் சொல்லுடா..
இன்னிக்கு குறுமா எப்படி இருக்கு..
கொஞ்சம் வித்தியாசமாக செய்தேன்..

.
.
ஓ! இது குறுமாவா அம்மா!

images (6)
டேய் ரிமோட் எங்கடா வச்சு தொலைச்ச..
ஒரு கால் பண்ணி பாருமா..
???

download (3)

ஒரு ஆறு ஏழு மணி நேரம்
தூங்கி எழுவதற்குள் திரும்பவும்
புறப்பட்ட இடத்திலேயே வந்து
நிற்பது போல் ஒரு பிரமை..
வீட்டு வேலைகள்!!

download (4)

நாக்கில தேன் தடவி
பேசறதெல்லாம் பெரிய
விஷயமே இல்ல..
அந்த தேன் ஆனது
எறும்பு கூட விரும்பாத
கலப்படம் சிறிதும் இல்லாத
உண்மையானதாய் இருப்பது
தான் மிக பெரியதொரு விஷயம்!

images (7)
கிளி பொம்மை விற்பவனிடம்
பேரம் பேசி வாங்குவதற்கு
முன் ‘சொத்தை’ எதுவும் இல்லையே
என்று கேட்டறிந்து தன் ஐயம்
முழுதும் தீர்ந்த பின்னரே
அதை வாங்கி தன் கூடையில்
போட்டு கொண்டாள் காய்கறிகாரி!!

1386609320_575671610_1-Pictures-of--Talking-Parrot-Musical-Toy-Talk-Back-Parrot-Fun

பசி தாங்க மாட்டாமல்
வீல் என்று அலறிய
குழந்தையை கண்டு
மனம் பொறுக்கமாட்டாமல்
அப்பொழுது தான் வடித்த
சோற்றை ஒரு கரண்டி
எடுத்து பருப்பும் நெய்யும்
விட்டு பிசைய முற்படும்
போது சூடு தாங்கமாட்டாமல்
ஆ வென்று அலறிய அம்மாவை
பார்த்து அழுகை நிறுத்தி
விட்டு புரியாமல் வேடிக்கை
பார்த்தது குழந்தை!!

images (8)


4 பின்னூட்டங்கள்

சில எண்ணங்கள் -4

படம்

டீ.ஏ மதுரம் காலத்தில் இருந்தே
பெண்கள் காணும் ரகசிய கனவுகளில் ஒன்று
.
.
.
.
.
.
.
.
.
.
.
.
‘ஒரு பட்டனை தட்டி விட்டா
ரெண்டு தட்டுல இட்லியும் சாம்பாரும்
பட்டுனு வந்திடனும்’

படம்

தெலுங்கானாவை
29வது மாநிலமாய்
அறிவித்தாலும் அறிவித்தார்கள்
இரண்டாவது நாளாகியும்
வன்முறைகள் தலை விரித்து 
ஆடுகின்றன வீட்டினுள்
பசங்களுக்கு பள்ளி விடுமுறை!!

படம்

துகிலுரித்த 
சில நிமிடங்களிலேயே
கொதிக்கும் குழம்பிலேயோ
வதங்கும் கூட்டிலேயோ
விழுந்து தன் இன்னுயிரை
மாய்த்து கொள்கிறது
மானமுள்ள வெங்காயம்!!

படம்

கண் முன்னே இருந்த போதிலும்..
என் வண்டி சாவி பாத்தியா
என் சாக்ஸ் எங்க
போன் புக் எங்க.. என்று
காலையிலேயே பரபரக்கும் கணவருக்கும்,
என் ஐ.டீ கார்ட் எங்க
என் பெல்ட் எங்க
என் பென்சில் எங்க..என்று
ஆட்டோ வரும் வரை அலறும் பையனுக்கும்
நான் சொல்ல நினைத்ததெல்லம்
ஒன்றே ஒன்று தான்
நான் ஒன்றும் Search Engine இல்ல!!


2 பின்னூட்டங்கள்

நான் பிறந்த அழகிய கிராமம்

village

நான் பிறந்த ஊர், சிறுமலை அடிவாரத்தில் அமைய பெற்ற அழகிய ஒரு கிராமம்! ஊரின் பெயர் சாணார்பட்டி! திண்டுக்கலுக்கும், நத்தத்துக்கும் இடை யே அமையப்பெற்ற ஒரு ஊர்! எனது பள்ளி விடுமுறைகளை இந்த கிராமத்தில் தான் மிகுந்த மகிழ்ச்சியோடு களித்திருக்கிறேன்! ஓரு மாரியம்மன் கோவில், ஒரு மசூதி, ஒரு தேவாலயம், ஒரு தபால் நிலையம், ஒரு வங்கி, ஒரு காவல் நிலையம், ஒரு ஹோட்டல், மூன்று பல சரக்கு கடைகள், ஒரு காய்கறி கடை, சில மட்டன் கடைகள், ஒரு சலூன்,ஒரு சைக்கிள் கடை, ஒரு கம்பௌண்டர்(டாக்டர் எல்லாம் கிடையாது), ஒரு ஆரம்ப பள்ளி கூடம், சில வீடுகள், தோட்டம், துரவு, இவைதான் சாணார்பட்டி! எல்லா மதத்தினரும் ஒற்றுமையாக இருக்கும் ஊர்!
எனது தாத்தா இந்த ஊரில் ஒரு பலசரக்கு கடை வைத்திருந்தார்! ஊர் மக்கள் அனைவரும் அதை மிகுந்த பிரியத்தோடு அண்ணாச்சி கடை என்றே அழைப்பார்கள்! எனது அம்மாவுடன் கூட பிறந்தவர்கள் நான்கு பேர்! அதனால் எப்பொழுதுமே, கொண்டாட்டத்திற்கு குறைச்சல் இருந்தது இல்லை! அண்ணா, அக்கா, தம்பி, தங்கை, மாமா பசங்க என்று பெரிய பட்டாளமே இருக்கும்! சாப்பாடு நேரம் தவிர, மற்ற நேரம் ஊர் சுற்றுவதிலேயே காலம் ஒடிவிடும்! எங்கள் தாத்தாவுக்கு சொந்தமாக ஒரு பெரிய தோட்டம் இருந்தது! அதில், ஒரு பெரிய கிணறு, நிறைய தென்னை மரங்கள் , ஒரு பெரிய பலா மரம், ஒரு அரை நெல்லிக்காய் மரம், ஒரு பிள்ளையார் கோவில், ஒரு முருகன் கோவில், ஒரு செம்பருத்தி பூ செடி, ஒரு செவ்வரளி மரம்! இந்த தோட்டத்தை கவனித்து கொள்ள மாணிக்கம் என்பவரை எங்கள் தாத்தா நியமித்து இருந்தார்கள்!
தோட்டத்தின் நடுவே அமையப்பெற்ற பெரிய கிணற்றில், ஊர் மக்கள் அனைவரும் தண்ணீர் எடுத்து கொள்ள அனுமதி கொடுத்து இருந்தார்கள்! நீரை இரைக்க ஒரு பம்ப் செட்டும், கிணற்றை ஒட்டினால் போல், ஒரு பெரிய தொட்டியும் இருக்கும்! எனக்கு அந்த கிணற்றை எட்டி பார்த்தாலே, தலை கிறுகிறுத்துவிடும்! நான் ஒரு பத்து அடி தள்ளி நின்றே எல்லாவற்றையும் கவனிப்பேன்! தண்ணீர் பாய்ச்சும் நேரம், ஓடம் போல இருக்கும் தென்னை மட்டையை, ஒவ்வொருத்தரும் ஒவ்வொன்றை ஏந்தி கொண்டு, தண்ணீர் பாய்ந்து ஓடும் வரப்புக்குள் நாங்களும் பாய்ந்து ஓடுவோம்! யாருடய ஓடம், கடைசி வரை சிக்காமல் ஓடுகிறது என்று பந்தயம் வைப்போம்! சில நேரம் மகிழ்ச்சியாகவும், சில சமயம் சண்டையிலும் முடியும்! இருந்தாலும் அடுத்த நாளும், அதே பந்தயம் நடக்காமல் இருந்ததில்லை!
தோட்டத்தின் உள்ளே, ஒரு கூரை வேயப்பட்ட ஒரு வீடு இருக்கும்! அதனுள்ளே சில சமயம், பட்டு பூச்சிகள் வளர்ப்பார்கள்! ஒன்றின் மேல் ஒன்று நெளிந்து கொண்டு பார்க்கவே ரம்மியமாக இருக்கும்! எனது உள்ளங் கையில் சிறிது நேரம் வைத்திருந்து விட்டு, இறக்கி விடுவேன்!
தோட்டத்தில் இருந்து வீட்டுக்கு செல்லும் வழியில் காவல் நிலையம் மிக பிரம்மாண்டமாக, ஊரின் நடுவில் அமைந்திருக்கும்! அதை கடந்து செல்லும் போது நெஞ்சம் திக் திக் என்று அடித்து கொள்ளும்! அதற்கு பக்கத்தில் ஒரு மிக பெரிய புளிய மரம் இருக்கும்! காலையில் அந்த வழியாக சென்றால் பயம் இல்லாமல் புளி பறித்து உண்போம்! காயாக இருக்கும் புளி மிக சுவையாக இருக்கும்! உச்சி வெயில் பொழுதில் அந்த வழியாக வந்தால், மரத்தை நிமிர்ந்து கூட பார்க்காமல் ஒடியே வந்து விடுவேன்! காரணம் புளிய மரத்தில் அந்த நெரங்களில் பேய் அமர்ந்திருக்கும் என்று என் தோழி ரூபா கூறுவாள்! அந்த ஊரில் என் ஒரே பெண் தோழி அவள்தான்! அவளை போல் பொறுமைசாலியை நான் பார்த்ததே இல்லை!
மதியம் அவ்வளவாக வெளியே செல்வதில்லை, வீட்டின் பின்னே இருக்கும் சூடு போட்டான் காயை பறித்து, அதை கட்டாந்தரையில் போட்டு நற நற வென்று தேய்த்து, யார் அகப்படுகிரார்களோ அவர்களுக்கு சூடு வைப்போம்! அந்த விளையாட்டு போரடித்தவுடன், மாடிக்கு சென்று விடுவோம்! மொட்டை மாடியில் கூரை வேய்ந்த்திருப்பார்கள்! நல்ல குளு குளுவென்று இருக்கும்! அதில் ஒரு குதிரையை, அதாங்க, உயரத்தில் ஏறுவதற்கு பயன் படுத்துவார்களே, அதுவே தான்! அதை பஸ் ஆக பாவித்து விளையாடுவோம்! அதில் எதாவது ஒரு மூலையில் தேனி கூடு கட்டி இருக்கும்! ஒரு நாளைக்கு ஒன்று,இரண்டு பேராவது அதனிடம் கடி வாங்காமல் இருந்ததில்லை! கடி வாங்கியவர் அழுது கொண்டே, வீட்டினுல் சென்று அதற்காகவே ஸ்பெசலாக வாங்கி வைக்கப்பட்டிருக்கும் சுண்ணாம்பை எடுத்து போட்டு விட்டு திரும்பவும் விளையாட வந்து விடுவார்கள்!
மாடி விளையாட்டும் போரடித்தால் இருக்கவே இருக்கிறது, தாத்தாவின் கடை, உள்ளே சென்று விட்டால் அது தனி உலகம்! சிறிய ஏணி ஒன்று மேலே அழைத்து செல்லும், நிறைய கதை புத்தகங்கள் நிறைந்து இருக்கும்! அவற்றின் ஒவ்வொரு பக்கங்களும் பொட்டலம் போடுவதற்காக காத்து கொண்டிருக்கும்! பசித்தால் தின்பதற்கு ஒரு டின் நிறைய வறுத்த கடலை பருப்பு ரெடியாக இருக்கும்! ஒரு சின்ன இடைவெளி வழியாக வெளிச்சமும், சிறிது காற்றும் வரும், முடிந்த வரை அங்கே நேரத்தை ஓட்டி விட்டு, சாயுங்காலமாய் வீடு வந்து சேர்வோம்!
அதன் பின்பும் எங்கள் கூத்து அடங்கிவிடாது, அடுத்து இரவு சிற்றுண்டியை முடித்து விட்டு, எங்கள் மாமாவின் திரை அரங்குக்கு கிளம்பி விடுவோம்! இது எங்கள் ஊருக்கு அடுத்த ஊரான கொசவபட்டியில் அமைந்திருந்தது! என்ன படம் ஓடினாலும் எங்கள் மாமாவுடன் கிளம்பி விடுவோம்! போனவுடன் அங்கே உள்ள கடையில், கிடைக்கும் அத்தனையையும் ருசி பார்த்து விட்டு, படம் பார்க்க ஆரம்பிக்கும் போது 7 மணி ஆகிவிடும்! படம் ஆரம்பித்த அரை மணி நேரத்துக்குள் எங்களுடன் வந்த பாதி பேர் படுத்து உறங்கி விடுவர்! பின்பு படம் முடிந்தவுடன், எல்லாரையும் எழுப்பி விட்டு, வீட்டுக்கு நடக்க ஆரம்பிப்போம்! ஊராரோடு சேர்ந்து நடந்தால் தான் உண்டு, இல்லையேல் சிறிது பயமாகதான் இருக்கும் அவ்வழி! மின்னல் வேறு அப்ப அப்ப வெட்டி சிறிது வெளிச்சத்தை காட்டும்! இடை இடையே பூச்சிகளின் சத்தம் வேறு! எப்படியாவது தட்டு தடுமாறி வீடு வந்து சேர்ந்து விடுவோம்!
ஓவ்வொரு நாளும் இதே கதைதான்! ஊருக்கு திரும்பும் நாளில் அழாமல் கிளம்பியதே இல்லை! இப்பொழுது அங்கே செல்லும் பொழுது, எனது கண்கள் எனது பழைய ஊரை தேடி தேடி ஏமாறுகிறது! நான் ரசித்த இடங்கள் அத்தனையும் மாறி போய் இருக்கிறது! மாறாமல் இருப்பது என் மனதினுள் பதிந்த என் நியாபகங்கள் மட்டுமே!


5 பின்னூட்டங்கள்

இனிப்பு மீன் குழம்பு

     தலைப்பை பார்த்து பயந்துவிட வேண்டாம், இது ஒன்றும் இந்த குழம்பை எப்படி வைப்பது என்று விளக்கும் உரை அல்ல! மீன் குழம்பு வைப்பது என்ன சீம வித்தையா, என் கடை குட்டி பையனை சமாளிப்பது  தான் எனக்கு சீம வித்தை!  அதுவும் விடுமுறை நாட்களில் கேட்கவே வேண்டாம், என்னை ஒரு வழி பண்ணிடுவான்! எந்த வேலை வீட்டில் நடந்தாலும், நடக்காவிட்டாலும், சமையலை முடித்துதானே ஆக வேண்டும்! அவனை சமாளிபதட்காகவே சமயலறையில் சிலவற்றை  வைத்திருப்பதுண்டு!  அவற்றில் முதன்மையானது அல்பன்லீபே லாலிபாப்! அதை கையில் கொடுத்தால் ஒரு அரைமணி நேரம் சில வேலைகளை முடித்து விடலாம்! சில நேரங்களில், அந்த லாலிபாப் அவன் கைகளை விட்டு நழுவி கீழே விழுந்து உடைந்து இரண்டாக பிளந்து விடும்! வீல் என்ற சப்தத்துடன் பைய்யன் ஓடி வருவான், ‘அம்மா இதை ஒட்டி தாருங்கள்’!!!  ஒருவாறு அவனுடைய அழுகையை நிறுத்தி, அவனை  சமாளிபதட்காகவே வைத்திருக்கும் இரண்டாவது யுத்தியான கல்கண்டை தருவேன், அதுவும் ஒரு கிண்ணம் நிறைய! கல்கண்டை பார்த்து மயங்காத பிள்ளைகளும் உண்டா என்ன!  ஒரு ஸ்பூனையும் , இன்னொரு கிண்ணத்தையும் எடுத்து கொண்டு விளையாட ஆரம்பித்து விடுவான்!  நானும் அந்த நேரத்தில் ஒருவாறு மீன் குழம்பை வைத்து முடித்து, சாப்பாடு மேசையில் கொண்டு போய் வைத்தேன்! அவன் கல்கண்டை ஒரு கிண்ணத்தில் இருந்து இன்னொரு கிண்ணத்துக்கு மாற்றி, ஸ்பூனால் கிண்டியும் விளையாடி கொண்டிருந்தான்!  அப்பஅப்ப அம்மா அம்மா என்று அழைத்து கொண்டே இருப்பான், நானும் ஒவ்வொரு தடவையும் என்னம்மா என்று பதில் கூறினால் தான் திருப்தி அடைவான்! ஒருவாறு வேலையை  கிட்டதட்ட முடித்து விட்டு , சிதறி கிடக்கும் கல்கண்டை அள்ள சென்றேன்! எப்பொழுதும் சிதறிய கல்கண்டுகள் பாதத்தை பதம் பார்க்கும் , ஆனால்  வழக்கத்துக்கு மாறாக ஒன்று இரண்டை தவிர , கல்கண்டுகள் தட்டு படவே இல்லை! பைய்யன் சாப்பிட்டு விட்டான் போல! பிறகு அவனை சாப்பிட வைத்து தூங்கவும் வைத்தேன். வெளியே சென்றிருந்த என் கணவரும், வீடு வந்து சேர்ந்தார்! நான் அவருக்கு  சாப்பாட்டை பரிமாறி விட்டு பக்கத்தில் அமர்ந்தேன்! என்னை ஒரு முறை முறைத்தவாரே சாப்பிட்டு முடித்தார்! எனக்கு ஒரு பழக்கம், எப்போ எதை சமைத்தாலும் , நன்றாக இருக்கிறதா என்று டேஸ்டு பார்க்கவே மாட்டேன், அவ்வளவு நம்பிக்கை , நான் செய்யும் சமையலின் மேல்! இன்னிக்கு என்ன ஆச்சு, என்று நினைத்தவாறே சாப்பிட அமர்ந்தேன், ஒரு வாய் சோற்றை வாயில் வைத்தவுடன் தான் புரிந்தது, பைய்யன் தன் கைவரிசையை காட்டி இருந்தான், மீன் புளிகுழம்பு கல்கண்டு புளிகுழம்பு ஆக மாறி இருந்தது!!!!!!!!!