அதை பார்த்த முதல் நொடி
கண்களுக்கு நம்ப முடியாத
ஆச்சரியம் கலந்த இன்பம்..
ஒரு ஐந்து நிமிடம் கழிந்த
பின்னே அதை பார்க்கும் பொழுது
பேரதிர்ச்சி கலந்த துன்பம்..
சொல்லாமல் நின்று போய்
விட்ட சுவர் கடிகாரம்!!
எங்கள் பக்கத்து தெருவில்
நடந்த சண்டையை எட்டி
நின்று வேடிக்கை பார்க்கவோ
அவர்கள் எதற்காக சண்டை
இடுகிறார்கள் என்பதை அறியவோ
என்ன பேசி கொள்கிறார்கள் என்பதை
காதை தீட்டி கவனிக்கவோ எனக்கு
துளியும் விருப்பம் இல்லை..
அவ்வளவு நல்லவளா நீ… என்றால்
கண்டிப்பாக இல்லை தான் பின்னே
அவர்கள் தெலுங்கிலே அல்லவா
சண்டை இட்டு கொள்கிறார்கள்!!
ஒரு பெண் தன்னை தயார்
செய்து வெளியே கிளம்ப
எடுத்து கொள்ளும் நேரம்
அவள் வீட்டில் எத்தனை
முகம் பார்க்கும் கண்ணாடிகள்
இருக்கிறது என்பதை பொறுத்தது!!
நடுநிசியில் திடுக்கிட்டு விழித்தேன்
பசியில் வீறிட்ட பக்கத்து வீட்டு
குழந்தையின் அழுகுரல் கேட்டு…..
தாய்மை!!
கண்ட கனவு நிஜமாகும் போது
நான் காண்பது என்ன கனவா.. என்று
வியப்படைந்து சொல்லுவர் சிலர்..
நிஜமாகவே நடந்தாற் போல்
இருந்தது என்று வந்த கனவை
ஆச்சரியமுடன் விவரிப்பர் சிலர்..
இவ்விருவருக்கும் இடையே தோன்றும்
ஒரே ஒரு ஒற்றுமை இருவருமே
நிஜமாகவே கனவு கண்டிருக்கிறார்கள்!!