எண்ணங்கள் பலவிதம்

என் எண்ணங்களின் நீருற்று


10 பின்னூட்டங்கள்

சில எண்ணங்கள் -45

அப்பா : என்னடா.. பக்கத்து வீட்டில ஒரே ஆட்டம்,பாட்டம் ,

கொண்டாட்டம்னு ஒரே குதுகூலமா இருக்கு.. எதுவும் விசேஷமா??

பசங்க : ஆமா விஷேசம் தான்ப்பா… அவுங்க அப்பா ஊருக்கு போயிருக்காங்களாம்…

அப்பா : !!!!!

download

 

 

தெளிந்த பின்னே
மட்டுமே தெரியும்
இது நாள் வரை அடி
மனதில் எத்தனை
கசடுகள் என்று!!

matter-sedimentation

 

ஒரு திசை காட்டும் கருவி
ஒரு பூத கண்ணாடி
ஒரு கையடக்கமான
தீவட்டி வெளிச்சம்
மகனே…. நீ பள்ளிக்கு வரலாறு
படிக்க செல்கிறாயா இல்லை
வரலாறு படைக்கவா??
MagneticPencilbox

 

images

 

நிலை தட்டுமேயானால் தலை
குனிந்து செல்வது உத்தமம்….
நிலை தட்டு தடுமாறினால்
தலை குனிவு நிச்சயம்..

download (1)

 

இன்றாவது தன் மனதில்
உள்ளதை வாடிக் கிடக்கும்
பூமியிடம் கொட்டி விட
தீர்மானித்து மோடம் போட்டு
காத்து கிடக்குது வானம்!!

images (1)

 

 

பயிரிட்ட பின்னே
விதை விதையாக
முழித்து கொண்டு
நில்லாமல் விளைந்து
நிற்பதே தானியத்தின் சிறப்பு….
அஃதே வயிறிடுவதற்கு முன்பும்!

 

images (2)

நம்ம கிட்ட இருக்கிற
சிம்கார்ட கொண்டு போய்
ஏர்டெல்காரன் கிட்ட குடுத்தா
அதை வெட்டி மைக்ரோ சிம்கார்டா
ஆக்கி தருவானா அம்மா??
ஏலேய்.. அது என்ன ஆடா!
இல்லை.. சிம்கார்டா!!

airtel sim

 

இன்று அதிகாலை
நீ இருண்டு இறுக்கம்
கொண்டு என் மனதை
வானில் பறக்க விட்டு கண்கள்
பணிக்க செய்தது அத்தனையும்
நடிப்பா??????????
வருவது போல் வந்து பின்
வராது சென்ற மழை

images (3)

 

வீர தீரமாய் சுழன்றடிக்கும் சார காற்றே
உன்னுள் ஈரம் இல்லாதவரை உள்ளம் மயங்காது
உடல் சோர்ந்த மயக்கம் மட்டுமே சாத்தியம்!

1317239764_374060252671_35721797671_3848601_1699688_n

 

வெடிச் சிரிப்புடன் கைகளை
டாட்டா காட்டியவாரே வெளியே
ஓடும் குட்டி பையனை பிடிக்க பின்னங்கால்
பிடறியில் அவன் பின்னே ஓடுவாள்..
சற்று முன்னே அவன் சேட்டை
தாங்காமல் தர தரவென இழுத்து
வீட்டின் வெளியே விரட்டிய தாய்..

can-stock-photo_csp9703834

 

ஒருவரை நம்பி கை கொடுப்பதை விட
நம்பிக்கை அளிப்பது சாலச் சிறந்தது!!

charitable-giving

 

கவனிக்க மறந்து விடும் நேரங்களில் தனக்கு
தானே தூசியால் அரிதாரம் பூசி நம் கவனத்தை
கவர்ந்து விடுகிறது நம் வீட்டு சாமான்கள்!!

images (4)

 

அடுத்தவர் பொருளை
ரசித்து நோக்குவது சலனம்
உரிமம் கொள்ள நினைப்பது சபலம்..

images (5)

 

 


3 பின்னூட்டங்கள்

ஓட்டை வடை

vadai

நடுவில் ஓட்டையோடு சுட்டு எடுக்கும் உளுந்த வடையை, என் பசங்க ஓட்டை வடைனுதான் குறிப்பிடுவாங்க! எல்லா விஷேச தினங்களிலும், இந்த வடையை சுடாமல் இருக்க மாட்டார்கள், நம் தமிழக மக்கள்! நானும், நன்கு பக்குவம் பார்த்து ஆட்டி, ஒவ்வொரு விஷேச தினத்திலும், சிறிது கூட எண்ணை குடிக்காத வண்ணம், சுட்டு எடுத்து விடுவேன், ஆனால் ஒரே ஒரு குறையோடு! ஆமாங்க எனக்கு வடையின் நடுவில் ஓட்டையே விழாது!
யாரெல்லாம் ஒட்டையோடு, இந்த வடையை சுடுகிரார்களோ, அவர்கள் எல்லாருமே எனக்கு சமையலில் பெரிய ஆட்கள்தான்! எத்தனையோ பேரு எனக்கு வடையில் ஓட்டை போட கற்றுகுடுக்க முயன்று தோற்று போயிருக்கிரார்கள்! எத்தனை பேர் எவ்வளவு அழகாக, சடக் சடக் என்று ஒரு விரலை வைத்தே, மாவினுள் ஒட்டை போட்டு வடையை சுட்டு எடுக்கிரார்கள்! செமையான விரல் வித்தை காரர்கள்!
என்னுடைய வடை போண்டா விலும் சேராமல், பஜ்ஜியிலும் சேராமல், ஒரு மாதிரியாகதான் இருக்கும்! சுவையில், ஓட்டை வடையை போலவே இருந்தாலும், ஓட்டை இல்லாத காரணத்தினால், என்னுடைய பசங்க இரண்டு பேரும், வடையை நிராகரித்து விடுவார்கள்! என் கணவர் ஒருவர்தான் எனக்காக அந்த ஓட்டை இல்லா வடையை சாப்பிட்டு காலி செய்வார்! அவரும் எத்தனையோ முறை, ஒட்டை போட்டு சுடு என்று சொல்லி சொல்லி அலுத்து போய், இவளுக்கு சுட்டாலும், வடையில் ஓட்டை போட வராது என்று மனதை மாற்றி கொண்டு விட்டார்! ஏதோ இதாவது கிடைக்குதே என்று நினைப்பார் போல!
இந்த வடையை முதன்முதலில் கண்டு பிடித்தவர், நூறு முறைகளிள் வடையின் நடுவில் ஓட்டை போடுவது எப்படி என்று ஒரு சிறு குறிப்பு புத்தகம் ஒன்றையும் எழுதி இருக்கலாம்! என்னை மாதிரி விரல் வித்தை தெரியாதவர்களுக்கு உபயோகமாக இருந்திருக்கும்! நிஜமாகவே பெரிய சூத்திரம்தான் இந்த வடையை ஓட்டையோடு சுட்டு எடுப்பது!
ஆதி காலத்தில் இருந்தே எனக்கும் இந்த வடைக்கும், ஆகவே ஆகாது! எப்பொழுது எல்லாம் என் அம்மா இந்த வடையை சுடுவதற்க்காக தேங்காய் எண்ணையை காய வைக்கிரார்களோ, அந்த நேரம் எல்லாம், நான் தலை தெறிக்க வீட்டை விட்டு வெளியில் ஓடி விடுவேன்! அந்த வடை சுட்ட வாசனை, வீட்டை காலி செய்யும் வரை, மறந்து போய் கூட வீட்டினுள் வந்து விட மாட்டேன்! அந்த நேரங்களில் நான் என் அம்மாவிடம் சொல்வதுண்டு,’நான் வரும் காலத்தில் இந்த வடைகளை சுடவே மட்டேன்’என்று! அம்மா சொல்லுவாங்க, ‘பார்க்கலாம் பார்க்கலாம், உனக்கு கல்யாணம் ஆகி, ஒரு பெண் குழந்தை பிறந்து, அது வளர்ந்து, உன் வீட்டுக்கு மருமகன் வரும் பொழுது, நீ இந்த வடையை சுட்டுதானே ஆக வேண்டும்’ ,என்று! நான் இந்த ஓட்டை உளுந்தவடை தேர்வில் தேறவே மாட்டேன் என்று நினைத்து தான் கடவுள் எனக்கு இரண்டு பசங்களை குடுத்து இருக்கிரார் போல!! என்னைக்காவது ஒரு நாள் ஒட்டை உளுந்த வடையை சுட்டு விட மாட்டேனா என்ன, நம்பிக்கை தான் வாழ்க்கை!