எண்ணங்கள் பலவிதம்

என் எண்ணங்களின் நீருற்று


16 பின்னூட்டங்கள்

சில எண்ணங்கள் -36

நம் வாழ்க்கையோ வாழைக்காயோ
யாரொருவர் வாயிலும்
பச்சையாய் விழாதவரையில் நலம்..
விழுந்து விட்டால் நீங்காத கறை
ஏற்பட்டு விடுவது நிச்சயம்!!

images (5)
எல்லோரும் ஒன்று கூடி குழையட்டும்
அன்பு நெய்யாய் உருகி ஓடட்டும்
உள்ளத்தில் மகிழ்ச்சி வெல்லமாய் கல்கண்டாய் இனிக்கட்டும்
முந்திரி திராட்சையாய் குதூகூலம் நிறையட்டும்
அழகாய் பொங்கட்டும் தங்கள் வீட்டு பொங்கல்

1010404_586413751451538_49336745_n

ஆலமரத்தடி இல்ல தான்
தோளில் வெள்ளை துண்டு போடல தான்
வாயில் வெத்தலையை குதப்பி குதப்பி
புளிச் புளிச் என்று துப்பலை தான்
ஆனாலும் என் பசங்க வீட்டில் இருக்கும்
விடுமுறை தினங்களில் காலை எழுந்ததில் இருந்து
இரவு கண் அயரும் வரை 1008 பஞ்சாயத்து
செய்து தீர்ப்பு சொல்லிட்டு தானுங்க இருக்கேன்!!

579087_350795664981287_1356424568_n

டேய் டேய்..
ப்ளீஸ் சொல்லுடா..
இன்னிக்கு குறுமா எப்படி இருக்கு..
கொஞ்சம் வித்தியாசமாக செய்தேன்..

.
.
ஓ! இது குறுமாவா அம்மா!

images (6)
டேய் ரிமோட் எங்கடா வச்சு தொலைச்ச..
ஒரு கால் பண்ணி பாருமா..
???

download (3)

ஒரு ஆறு ஏழு மணி நேரம்
தூங்கி எழுவதற்குள் திரும்பவும்
புறப்பட்ட இடத்திலேயே வந்து
நிற்பது போல் ஒரு பிரமை..
வீட்டு வேலைகள்!!

download (4)

நாக்கில தேன் தடவி
பேசறதெல்லாம் பெரிய
விஷயமே இல்ல..
அந்த தேன் ஆனது
எறும்பு கூட விரும்பாத
கலப்படம் சிறிதும் இல்லாத
உண்மையானதாய் இருப்பது
தான் மிக பெரியதொரு விஷயம்!

images (7)
கிளி பொம்மை விற்பவனிடம்
பேரம் பேசி வாங்குவதற்கு
முன் ‘சொத்தை’ எதுவும் இல்லையே
என்று கேட்டறிந்து தன் ஐயம்
முழுதும் தீர்ந்த பின்னரே
அதை வாங்கி தன் கூடையில்
போட்டு கொண்டாள் காய்கறிகாரி!!

1386609320_575671610_1-Pictures-of--Talking-Parrot-Musical-Toy-Talk-Back-Parrot-Fun

பசி தாங்க மாட்டாமல்
வீல் என்று அலறிய
குழந்தையை கண்டு
மனம் பொறுக்கமாட்டாமல்
அப்பொழுது தான் வடித்த
சோற்றை ஒரு கரண்டி
எடுத்து பருப்பும் நெய்யும்
விட்டு பிசைய முற்படும்
போது சூடு தாங்கமாட்டாமல்
ஆ வென்று அலறிய அம்மாவை
பார்த்து அழுகை நிறுத்தி
விட்டு புரியாமல் வேடிக்கை
பார்த்தது குழந்தை!!

images (8)