எண்ணங்கள் பலவிதம்

என் எண்ணங்களின் நீருற்று


2 பின்னூட்டங்கள்

சில எண்ணங்கள் -21

ஒரு மதியம் ஏதேச்சையாக
ஸ்டார் மூவீஸ் சேனலை மாற்றினால்
The Twilight Saga-Breaking Dawn: Part 1
மூவீயில் நாயகி பெல்லா
கருவுற்று இரண்டு வாரங்களே
ஆன நிலையில் அசுரத்தனமாய்
வளர்ச்சி அடைந்த தன் வயிற்றை
அதிர்ச்சியுடன் நோக்குவதை கிலியுடன்
நோக்கிய எனக்கும் என் வயிற்றினுள்
ஏதோ ஒன்று அசுரத்தனமாய் வளர்ந்து
கொண்டிருந்த உணர்வு…
ஆம் ஆங்காரமாய் வளர்ந்திருந்த பசி
‘It’s Time to Lunch’என்று உணர்த்தியது!!

படம்

யாரொருவர் காலங்கார்த்தாலயே
வீடு சுத்தம் பண்றேன் பேர்வழி என்று
அழுக்கு போச்சா கறை போச்சா
என்று பார்த்து பார்த்து தரையை
पोछा செய்கிரார்களோ அவர்களே
மோடி ஊர்காரைங்க!

படம்

எந்த வெயிலில் இப்படி காய்ந்து
மெலனின் ஒரேடியாக கூடி போய்
கன்னங் கரேலென்று வருகிரதோ..
என் பையனுடன் நிதம் ஸ்கூல்
போய் வரும் பளிச்
வெள்ளை நிறத்து அழிப்பான்!!

படம்

நீயா வேகமா சாப்பிட்டு விடு
இல்லாட்டி நான் சாப்பிட்டு விடுவேன்
என்று ஒயாமல் மிரட்டும்
முரட்டு மீசை மாமா
.
.
.
AIRTEL!

படம்

சர்ரென்று வழுக்கி கொண்டு
வளைந்து நெளிந்து வந்து எங்கே
நம்மை பொட்டுனு போட்டு தள்ளிடுமோ
என்று நினைக்க வைப்பது
பாம்புகள் மட்டும் அல்ல
.
.
.
குண்டூர் ,ஆட்டோக்களும் தான்!!

படம்


3 பின்னூட்டங்கள்

சில எண்ணங்கள் -18

அழுத்தமாய் இதழ்களை பதித்தும் 
பாவம் இவரால் இப்பொழுதெல்லாம்
இம்ப்ரஸ் செய்யவே முடிவதில்லை
.
.
.
.
இன்னிகோ நாளைக்கோ
என்று நாட்களை எண்ணி
கொண்டிருக்கும் 
Liquid Shoe Polish!!

படம்

இருக்கலாம்..
முன் ஜென்மத்து பந்தமாய்
என் தர்ம பத்தினியாய்
பின்னே எவ்வளவு தான்
கண்டும் காணாமலும்
கேட்டும் கேட்காமலும்
பார்த்தும் பார்க்காமலும்
இருந்தாலும் சற்றும் 
சளைக்காமல் சல சலவென
சொன்னதையே திருப்பி
திருப்பி சொல்லுவதும்
நிமிஷத்துக்கு ஒரு முறை
குறுஞ்செய்திகளை அனுப்பியும்
உயிரை எடுப்பதேனோ
.
.
.
விட்டு தொடரும் பந்தம்
Airtel!!

படம்

அது ஒரு நடு நிசி நேரம்
சோவென்று கொட்டியது மழை
இரவை பகலாக்க முயன்று 
தோற்ற மின்னல்கள்
இருட்டிலே துலாவிய கைகள்
பட்டு உயிர் பெற்ற மின்விளக்கின்
வெளிச்சத்தில் முகம் அலம்ப 
நினைத்து முடியாமல் பச்சை
பொத்தானை அவசரமாக
அமுத்த அய்யோ………….
என்று அலறியது உள்ளம்
டேங்கில் தண்ணீர் 
‘காலி’யானது மட்டுமல்லாமல்
மோட்டரும் அநியாயமாய் தன்
உயிரை விட்டிருந்தது!!

படம்

 

துவையல் செய்வதற்காக
கொத்தமல்லி கரிவேப்பிலை புதினா
சம அளவு எடுத்து சுத்தம் செய்து
வாணலியில் நல்லெண்ணையை காய வைத்து
உளுந்தம் பருப்பு ஒரு கையளவு எடுத்து
போட்டு அது பொன்னிறமானவுடன்
காரத்திற்கேற்ப ஐந்து ஆறு பச்சை மிளகாய்
கிள்ளி போட்டு பத்து பல் பூண்டு உரித்து போட்டு
எலுமிச்சை அளவு புளியும் போட்டு
வதக்கி பின் கொத்தமல்லி கரிவேப்பிலை புதினாவை
அதில் போட்டு வதக்கும் போது எழும்
சுகந்தமான வாசனையின் சுகமான இம்சையில்
அருவியாய் ஜொள் அல்ல வியர்வை ஊற்றெடுக்க
அடுப்படி ஜன்னல் வழியாய் எனக்காகவே
புறப்பட்டு வந்து என் முகத்தை ஸ்பரிசித்து விட்டு
செல்லும் தென்றல் காற்று தான் நிஜமாகவே கவிதை!!

படம்