புயல் கரையை கடப்பதால், மீனவர்கள் யாரும் கடலுக்கு செல்ல வேண்டாம் என்று வானிலை ஆய்வகம் அவ்வப்பொழுது எச்சரிக்கை விடுவதுண்டு!
இப்படி முன்னெச்சரிக்கை கொடுப்பதால், ஏராளமான மீனவர்களுடைய உயிர் காப்பற்றப்படுகிறது!
அதே போல் நம்முடைய வாழ்க்கைப்பாதையில் நடை பெற போகும் துரதிருஷ்டமான சம்பவங்கள் பற்றி ஒருவருக்கு முன்னெச்சரிக்கை கிடைத்தால் எப்படி இருக்கும்…….
இது தான் ‘FINAL DESTINATION’ ஆங்கில படத்தின் ஒரு வரி கதை!!
சிறு வயதில் இருந்தே, திரில்லர் படங்களின் மீது ஒரு ஆர்வம் உண்டு, இப்படி ஒரு படம் எப்பொழுது வந்தது என்று இப்படத்தை பார்க்கும் வரை சத்தியமாக தெரியாது! அன்று ஒரு நாள் ஏதேச்சையாக இப்படத்தை சில நிமிடங்கள் பார்க்க நேர்ந்தது!
படத்தின் ஹீரோ, தன் அலுவலக பேருந்தில் பயணம் செய்கிறான், அப்பேருந்து, போக்குவரத்து நெரிசல் காரணமாக, நட்ட நடு பாலத்தில் நின்று விடுகிறது!
நல்ல உயரமான, பழமையான பாலம் அது! பாலத்தின் ஒரு ஒரமாக, அதை செப்பனிடும் பணி வேறு நடை பெறுகிரது! இதை பேருந்தின் ஜன்னல் வழியாக கவனித்து கொண்டிருந்த நம் ஹீரோவுக்கு ஒரு PREMONITION, அதாவது ஒரு முன்னெச்சரிக்கை ஒரு கனவு போல ஒரு நொடியில் அவன் கண் முன்னே வந்து செல்கிறது!
அந்த பாலம் உடைய போவதாகவும், அதில் அவனுடன் பயணம் செய்தவர்கள், அனைவரும் மிக குரூரமாக மரணத்தை எதிர் கொள்வது போலவும் வந்தது அந்த PREMONITION!!
ஹீரோவும் உடனே எல்லோரையும் எச்சரிக்கை செய்கிரான்! அவன் வார்த்தைகளை நம்பியோர் பேருந்தை விட்டு இறங்கி, பாலத்தை கடந்து உயிர் தப்பி விடுகின்றனர்! அவனுடைய வார்த்தையை நம்பாதவர்கள் தத்தம் சாவை எதிர் கொள்கின்றனர்!!
தப்பித்த எல்லோரும் ஹீரோவை பாராட்டிவிட்டு செல்கின்றனர்! இதோடு படம் முடிந்து விட்டதா என்ன, அது தான் இல்லை, இப்போதான் படமே ஆரம்பிக்கின்றது!!
விபத்தில் தப்பித்தவர்கள், ஒருவர் பின் ஒருவராய், ஒரு ‘CHAIN OF DEATH’ போல, ஏதாவது ஒரு விபத்தில் சிக்கி தங்கள் உயிரை இழக்கின்றனர்! பாலம் உடைந்த விபத்தில், சாவில் இருந்து தப்பித்தவர்கள், உண்மையாக பாக்கியசாலிகள் இல்லை, அவர்களுக்காக சாவு சிகப்பு கம்பளம் விரித்து, காத்து கொண்டிருக்கிறது என்பதை தாமதமாக தான் புரிந்து கொள்கின்றனர்!
ஒரே ஒரு option தான் அவர்களுக்கு, ஒன்று அந்த CHAIN OF DEATH ஐ break up செய்ய வேண்டும், இல்லை தனக்கு வரவிருக்கும் சாவை, வேறு யார் மீதாவது திருப்பி விட வேண்டும்!
அந்த பாலம் உடைந்த அப்பவே, இவர்கள் எல்லாம் தங்கள் உயிரை விட்டிருக்கலாம் என்று ஒரு உணர்வு எனக்கு தோணாமல் இல்லை! அவ்வளவு கொடுமையான சாவு அவர்கள் எல்லோருக்கும்! நான் தொலைகாட்சியில் இப்படத்தை, முதல் 15 நிமிடங்கள் தான் பார்த்தேன், பிறகு ஆர்வ கோளாறில், அப்படத்தை internet இல் download செய்து பார்த்தேன்!
நான் செய்த பெரிய தவறு அது தான்! யாரவது எனக்கு ஒரு முன்னெச்சரிக்கை கொடுத்து இருந்திருக்கலாம்! இந்த படம் 5 பாகங்களாய் வெளி வந்திருக்கிறது ! ஐந்துமே BOX OFFICE HIT!
ஒவ்வொரு பாகங்களிலும், படத்தின் ஆரம்பத்தில் ஹீரோவுக்கு ஒரு PREMONITION வருகிறது, அந்த நொடியில், ஹீரோவை சுற்றி இருக்கும் அனைவரும் காப்பாற்ற பட்டு, பிறகு எப்படி எப்படி எல்லாமோ, ஒருவர் மாற்றி ஒருவராய் தங்கள் உயிரை கொடுமையாக விடுகின்றனர் என்பதே இப்படத்தின் கதை! கடைசியாய் நம்ம ஹீரோவும் உயிரை விட, படம் முடிவடைந்து நன்றி, வணக்கம் போடுகின்றனர்!!!
நான் இவை ஐந்தில், ஒரு பாகத்தை, சில மணி நேரம், பார்ப்பதற்குள்ளாகவே, எனக்கு போதும் போதும் என்று ஆகி விட்டது! எங்க படம் பார்க்கும், நம்மையும் போட்டு தள்ளீருவாங்களோனு ஒரு பயமே வந்திருச்சு!!
இந்த மாதிரி படங்கள் எப்படி தான் சக்கை போடு போட்டதோ, ஆறாவது பாகம் எடுப்பதற்கு பேச்சுவார்த்தை நடை பெற்று கொண்டிருக்கிரதாம், ஹ்ம்ம் கலிகாலமப்பா……