களுக் என்று ஆரம்பத்தில் சிரித்தவரை
பார்த்து விவரம் ஏதும் அறியாமலேயே
குபுக் என்று வாய் விட்டு சிரிப்பவர்களுக்கே
நறுக் என்று உச்சந்தலையில் கொட்டப்படும்
கொசு வலை மட்டும்
இல்லையென்றால்
பசு வாலை ஆட்டிய
கதை தான் இரவினிலே!
தும்மல் வந்த பிற்பாடு
தூசி தட்ட நினைப்பது..
துன்பம் வந்த பின்னே
துலாபாரம் கொடுக்க
நினைத்தாற் போல்..
மனதுக்கு பிடிக்காதவற்றை
கண்டு கொண்டு பின் கண்டபடி
விமர்சிப்பதை விட கண்டும்
காணாமல் இருக்க பழகி கொண்டால்
யாருக்கும் எந்த கண்டமும் இல்லை!
இதி மஞ்சா?? என்று ஒரு
பீர்க்கங்காயின் தரத்தை
பற்றி என்னிடம் ஒருவர்
தெலுங்கில் வினவ நானும்
எனது பாணியில் பதில் அளித்தேன்
.
.
.
.
பிச்சா தெரியும்
பிஞ்சா என்று!
யப்பா…
ஒரு quarter தான் பா இருக்கு
ஒரு half கூட இல்ல
நாலு full சாயுங் காலத்துக்குள்
கொண்டு வந்து என் வீடு சேர்த்தா
உனக்கு புண்ணியமாக போகும்…
இது குடிகாரியின் புலம்பல் அல்ல
மினரல் வாட்டர் கேன்காரனிடம்
ஒரு குடித்தனக்காரியின் புலம்பல்!
நியாபகம் வந்த நொடியே
அக்காரியத்தை செய்ய
சோம்பல் பட்டு நாளை
நாளை என்று தள்ளி
போடும் மனது நம்பகமற்றது!
ஒரு ஊருல ஒரு ராஜா இருந்தானாம்… அவர் ஏழு கடல் தாண்டி ஏழு மலை தாண்டி ஒரு எலுமிச்சம்பழம் கொண்டு வந்தாராம்…. ரெண்டு வரி கதை சொல்வதற்குள்ளேயே பையன் அலுத்து கொண்டான்.. பக்கத்து பெட்டி கடை பாட்டி கிட்ட கேட்டாலே குடுத்திருக்கும்.. போங்கடா நான் கதையே சொல்லல!!
ஒன்ன ரெண்டாக்கி ரெண்ட நாலாக்கி நால எட்டாக்கி ஒவ்வொன்றுக்கும் இடையே கால் ஸ்பூன் சீனி போட்டு தண்ணி ஊற்றி….. ஐய்யையோ சத்தியமா ரெசிபி எல்லாம் இல்லை ஒரே வாயில போட்டு மாத்திரையை விழுங்க சொன்னா கேக்க மாட்டிகிரான் என் பையன்!
குக்கரின் சூடு பொறுப்பாள் எண்ணெயில் பொரிந்து கைகளில் வெடித்து சிதறும் கடுகின் சூடை பொருட்படுத்த கூட மாட்டாள் எதிர்பாராமல் கைகளில் கொட்டி விடும் வெந்நீரை பூ வென்று ஊதி வலி மறந்து போவாள் மனம் பொறுக்க மாட்டாமல் அலறுவாள் ‘அம்மா’ தன் குழந்தையின் மேனி சுடும் போது மட்டும்!!
போன வாரம், ஞாயிற்று கிழமை, இரவு SetMax சேனலில், Murder 3 ஹிந்தி படம் காண்பித்து கொண்டிருந்தார்கள்.. அது ஒரு த்ரில்லர் படம், நான் பார்க்க அமர்ந்த சமயம், பாதி படம் முடிந்து விட்டிருந்தது, தலையும் புரியவில்லை, வாலும் புரியவில்லை, இருந்தும் படம் பரபரப்பாக இருந்தது, அடுத்து என்ன நடக்கும் என்ற ஆவல் இருந்தது! நேரம் ஆகி விட்ட படியால், டீவீயை அணைக்க வேண்டிய கட்டாயம், இல்லையேல் அடுத்த நாள் காலை எந்திரிக்க முடியாது. அரை மனதோடு படுக்க சென்றேன்…. அடுத்து என்ன ஆயிற்று, என்ன ஆயிற்று என்ற புலம்பலோடு தூங்கி போனேன்!!
சிறு வயதில் இருந்தே, ஒரு பழக்கம், எந்த கதை புத்தகத்தை எடுத்தாலும், கதை முடிவு தெரியாமல் எந்திரித்ததில்லை.. அது இன்னிக்கு வரைக்கும் அந்த ஆர்வம் குறையவே இல்லை… அதே ஆர்வத்தோடு, அடுத்த நாள் காலை, என் வீட்டு வேலைகளை முடித்து விட்டு, இணையத்தில் Murder3 படத்துக்கான விமர்சன பக்கங்களை தேடி, தேடி படித்தேன், அப்போ தான் தெரிந்தது, இந்த படத்தை, ‘La Cara Oculta(The Hidden Face’ என்ற Spanish படத்தின் கதையை தான் ஹிந்தியில் எடுத்திருக்கிரார்கள் என்று.. டூப்ளிகேட்டை விட ஒரிஜினல் இன்னும் நல்லா இருக்கும் இல்ல, இணையத்தில் ஒரு வழியாய் தேடி பிடித்து பார்த்து விட்டேன்….
படத்தின் ஹீரோ Adrian, அவனை தான் முதல் காட்சியில் அறிமுக படுத்துகிரார் இயக்குனர்.. அவன் ஒரு புகழ் பெற்ற இசை கலைஞன்.. அவன் தன் உயிர் காதலி அவனுக்காக விட்டு சென்ற ஒளி படத்தை எடுத்து பார்த்து, மனது வெறுத்து போய் அழுது கொண்டிருந்தான்.. அந்த ஒளி படத்தில், அவனுடைய காதலி Belen, தன்னால் இனி ஒரு நிமிடம் கூட அவனுடன் சேர்ந்து இருக்க முடியாது எனவும், தன்னை தேடி வர வேண்டாம் எனவும், இந்த முடிவு தான், இருவருக்கும் நல்லது என்று மிகுந்த மன வருத்தத்துடன் கூறி கொண்டிருந்தாள்.. அழுது முடித்த கையோடு, தன்னை போலவே அழுது கொண்டிருந்த மழையில், தன் காரை எடுத்து கொண்டு, தன் மனதை அமைதி படுத்த Bar க்கு சென்றான்.. மனது வெறுத்த நிலையில், அந்த Barரில் வேலை செய்யும், Fabiana அவனுடைய மன காயத்துக்கு மருந்தாகிறாள்..
மெல்ல அவன் மனதுக்குள் நுழைந்த Fabiana, அவன் வீட்டுக்குள் காலடி எடுத்து வைக்கிறாள். பெலென் விட்டு, விட்டு சென்றதை, கொஞ்சம் கொஞ்சமாக மறக்க ஆரம்பித்தான் Andrean.. அவர்கள் தங்கி இருந்த வீடு, Columbiaவில் Bogota என்ற மாநகரத்தில், ஊருக்கு வெளியே ஒரு ஒதுக்கு புறமான இடத்தில் அமைந்திருந்தது! சற்றே பெரிய, அழகான, அமானுஷ்யமான வீடு அது.. அந்த வீட்டில், வீட்டு உரிமையாளருக்கு சொந்தமான நாய் ஒன்றும் இருந்தது. அதன் பெயர் Hans.
Fabiana , தனியாக இருக்கும் போது சிறிது பயமாகவே இருக்கிரது.. நிறைய விஷயங்கள் வித்யாசமாக அவள் கண்ணில் படுகிரது.. முக்கியமாக, அவள் குளியலறையில் இருக்கும் போது, தண்ணீர் தேங்கி இருக்கும் வாஷ் பேசினில், அலைகளை கவனிக்கிராள்..வாஷ் பேசின் குழாய் வழியாக, சன்னமாக ஒரு ஒலியை உணர்கிராள். அவ்வப்பொழுது, லோக்கல் போலீஸ், காணாமல் போன Belen பற்றி , விசாரித்து செல்கிரார்கள். அதில் ஒரு போலீஸ், Fabiana உயிருக்கு உயிராக காதலிப்பவன்! அவனுக்கு, Fabiana, Adrianனுடன் வந்து இருப்பதில் சிறிது வருத்தம் தான். நேரம் கிடைக்கும் போதெல்லாம் அவளை எச்சரிக்கை செய்கிரான்.. Fabiana, புது பணக்கார காதலன் கிடைத்த மோகத்தில் எதையும், சட்டை செய்ய மறுக்கிறாள்.. Fabiana வுக்கு, அந்த வீட்டில், அடுதடுத்து ஆச்சரியங்கள், காத்து கொண்டிருந்தன.. ஒரு செய்னில், கோர்த்து வைக்க பட்டிருந்த சாவியை, தற்செயலாக கண்டெடுக்கிறாள்.. ஒன்றும் புறியாமல் அதை எடுத்து மாலை போல அணிந்து கொள்கிராள்.
ஒரு நாள், படுக்கையறையில் உள்ள புத்தக அலமாரி, சிதறி கிடக்கிறது, Fabiana குளியலறையில்,கண்ணாடி முன் நின்று, யாரிடமோ பேசும் சத்தம் கேட்டு, அட்ரியன் ஆச்சரியத்தோடு, உள்ளே நுழைகிறான்.. அவனை கண்டவுடன், பேச்சை மாற்றுகிராள் Fabiana. அவனுடைய, முன்னால் காதலியான, Belen பற்றி, ஏதாவது, தகவல் தெரிந்ததா, என்று அக்கறையோடு விசாரிக்கிராள்! உடனே குறுக்கிட்டு பேசிய Adrian, Belen என்பவள், என்னை வேண்டாம் என்று சொல்லி விட்டு, வேறு ஒரு ஆடவனை தேடி சென்று விட்டாள், அவளை பற்றி எதுவும் பேசாதே என்று அவள் வாயை அடைத்து, அவளை அணைத்து கொள்கிரான்.. Adrianனை அணைத்தபடி, படுக்கையறையில் உள்ள முகம் பார்க்கும் கண்ணாடியை முறைத்து பார்க்கிராள் Fabiana!! அந்த கண்ணாடியின் உள்ளே, ஒரு பயங்கரமான, அதிர்ச்சியான, கோபத்தொட கத்தி கொண்டிருக்கும் Belen உடைய முகத்தை, முதன் முறையாக காட்டுகிரார் இயக்குனர்!!!
புயல் கரையை கடப்பதால், மீனவர்கள் யாரும் கடலுக்கு செல்ல வேண்டாம் என்று வானிலை ஆய்வகம் அவ்வப்பொழுது எச்சரிக்கை விடுவதுண்டு!
இப்படி முன்னெச்சரிக்கை கொடுப்பதால், ஏராளமான மீனவர்களுடைய உயிர் காப்பற்றப்படுகிறது!
அதே போல் நம்முடைய வாழ்க்கைப்பாதையில் நடை பெற போகும் துரதிருஷ்டமான சம்பவங்கள் பற்றி ஒருவருக்கு முன்னெச்சரிக்கை கிடைத்தால் எப்படி இருக்கும்…….
இது தான் ‘FINAL DESTINATION’ ஆங்கில படத்தின் ஒரு வரி கதை!!
சிறு வயதில் இருந்தே, திரில்லர் படங்களின் மீது ஒரு ஆர்வம் உண்டு, இப்படி ஒரு படம் எப்பொழுது வந்தது என்று இப்படத்தை பார்க்கும் வரை சத்தியமாக தெரியாது! அன்று ஒரு நாள் ஏதேச்சையாக இப்படத்தை சில நிமிடங்கள் பார்க்க நேர்ந்தது!
படத்தின் ஹீரோ, தன் அலுவலக பேருந்தில் பயணம் செய்கிறான், அப்பேருந்து, போக்குவரத்து நெரிசல் காரணமாக, நட்ட நடு பாலத்தில் நின்று விடுகிறது!
நல்ல உயரமான, பழமையான பாலம் அது! பாலத்தின் ஒரு ஒரமாக, அதை செப்பனிடும் பணி வேறு நடை பெறுகிரது! இதை பேருந்தின் ஜன்னல் வழியாக கவனித்து கொண்டிருந்த நம் ஹீரோவுக்கு ஒரு PREMONITION, அதாவது ஒரு முன்னெச்சரிக்கை ஒரு கனவு போல ஒரு நொடியில் அவன் கண் முன்னே வந்து செல்கிறது!
அந்த பாலம் உடைய போவதாகவும், அதில் அவனுடன் பயணம் செய்தவர்கள், அனைவரும் மிக குரூரமாக மரணத்தை எதிர் கொள்வது போலவும் வந்தது அந்த PREMONITION!!
ஹீரோவும் உடனே எல்லோரையும் எச்சரிக்கை செய்கிரான்! அவன் வார்த்தைகளை நம்பியோர் பேருந்தை விட்டு இறங்கி, பாலத்தை கடந்து உயிர் தப்பி விடுகின்றனர்! அவனுடைய வார்த்தையை நம்பாதவர்கள் தத்தம் சாவை எதிர் கொள்கின்றனர்!!
தப்பித்த எல்லோரும் ஹீரோவை பாராட்டிவிட்டு செல்கின்றனர்! இதோடு படம் முடிந்து விட்டதா என்ன, அது தான் இல்லை, இப்போதான் படமே ஆரம்பிக்கின்றது!!
விபத்தில் தப்பித்தவர்கள், ஒருவர் பின் ஒருவராய், ஒரு ‘CHAIN OF DEATH’ போல, ஏதாவது ஒரு விபத்தில் சிக்கி தங்கள் உயிரை இழக்கின்றனர்! பாலம் உடைந்த விபத்தில், சாவில் இருந்து தப்பித்தவர்கள், உண்மையாக பாக்கியசாலிகள் இல்லை, அவர்களுக்காக சாவு சிகப்பு கம்பளம் விரித்து, காத்து கொண்டிருக்கிறது என்பதை தாமதமாக தான் புரிந்து கொள்கின்றனர்!
ஒரே ஒரு option தான் அவர்களுக்கு, ஒன்று அந்த CHAIN OF DEATH ஐ break up செய்ய வேண்டும், இல்லை தனக்கு வரவிருக்கும் சாவை, வேறு யார் மீதாவது திருப்பி விட வேண்டும்!
அந்த பாலம் உடைந்த அப்பவே, இவர்கள் எல்லாம் தங்கள் உயிரை விட்டிருக்கலாம் என்று ஒரு உணர்வு எனக்கு தோணாமல் இல்லை! அவ்வளவு கொடுமையான சாவு அவர்கள் எல்லோருக்கும்! நான் தொலைகாட்சியில் இப்படத்தை, முதல் 15 நிமிடங்கள் தான் பார்த்தேன், பிறகு ஆர்வ கோளாறில், அப்படத்தை internet இல் download செய்து பார்த்தேன்!
நான் செய்த பெரிய தவறு அது தான்! யாரவது எனக்கு ஒரு முன்னெச்சரிக்கை கொடுத்து இருந்திருக்கலாம்! இந்த படம் 5 பாகங்களாய் வெளி வந்திருக்கிறது ! ஐந்துமே BOX OFFICE HIT!
ஒவ்வொரு பாகங்களிலும், படத்தின் ஆரம்பத்தில் ஹீரோவுக்கு ஒரு PREMONITION வருகிறது, அந்த நொடியில், ஹீரோவை சுற்றி இருக்கும் அனைவரும் காப்பாற்ற பட்டு, பிறகு எப்படி எப்படி எல்லாமோ, ஒருவர் மாற்றி ஒருவராய் தங்கள் உயிரை கொடுமையாக விடுகின்றனர் என்பதே இப்படத்தின் கதை! கடைசியாய் நம்ம ஹீரோவும் உயிரை விட, படம் முடிவடைந்து நன்றி, வணக்கம் போடுகின்றனர்!!!
நான் இவை ஐந்தில், ஒரு பாகத்தை, சில மணி நேரம், பார்ப்பதற்குள்ளாகவே, எனக்கு போதும் போதும் என்று ஆகி விட்டது! எங்க படம் பார்க்கும், நம்மையும் போட்டு தள்ளீருவாங்களோனு ஒரு பயமே வந்திருச்சு!!
இந்த மாதிரி படங்கள் எப்படி தான் சக்கை போடு போட்டதோ, ஆறாவது பாகம் எடுப்பதற்கு பேச்சுவார்த்தை நடை பெற்று கொண்டிருக்கிரதாம், ஹ்ம்ம் கலிகாலமப்பா……