மின் தடையால்
மிக்ஸி ஓடவில்லை
கிரைண்டர் ஓடவில்லை
ப்ரிஜ் ஓடவில்லை
வாசிங் மிஷின் ஓடவில்லை
மோட்டர் ஓடவில்லை
டீவீ ஓடவில்லை
ஆக மொத்தம் எனக்கு
கையும் ஓடவில்லை
காலும் ஓடவில்லை!
என்னது பூரிக்கு தொட்டுக்க கிழங்கா??
என்ன கொடுமை அம்மா இது!
.
.
.
.
புரட்டாசியில் புறப்படும்
புதல்வனின் புலம்பல்கள்!!
ஒரு ஊருல ஒரு ராஜா
இருந்தானாம்…
அவர் ஏழு கடல் தாண்டி
ஏழு மலை தாண்டி ஒரு
எலுமிச்சம்பழம் கொண்டு
வந்தாராம்….
ரெண்டு வரி கதை
சொல்வதற்குள்ளேயே
பையன் அலுத்து கொண்டான்..
பக்கத்து பெட்டி கடை பாட்டி
கிட்ட கேட்டாலே குடுத்திருக்கும்..
போங்கடா நான் கதையே சொல்லல!!
ஒன்ன ரெண்டாக்கி
ரெண்ட நாலாக்கி
நால எட்டாக்கி
ஒவ்வொன்றுக்கும்
இடையே கால் ஸ்பூன்
சீனி போட்டு தண்ணி
ஊற்றி…..
ஐய்யையோ சத்தியமா
ரெசிபி எல்லாம் இல்லை
ஒரே வாயில போட்டு
மாத்திரையை விழுங்க
சொன்னா கேக்க
மாட்டிகிரான் என் பையன்!
குக்கரின் சூடு பொறுப்பாள்
எண்ணெயில் பொரிந்து கைகளில்
வெடித்து சிதறும் கடுகின்
சூடை பொருட்படுத்த கூட மாட்டாள்
எதிர்பாராமல் கைகளில் கொட்டி
விடும் வெந்நீரை பூ வென்று ஊதி
வலி மறந்து போவாள்
மனம் பொறுக்க மாட்டாமல்
அலறுவாள் ‘அம்மா’ தன் குழந்தையின்
மேனி சுடும் போது மட்டும்!!