களுக் என்று ஆரம்பத்தில் சிரித்தவரை
பார்த்து விவரம் ஏதும் அறியாமலேயே
குபுக் என்று வாய் விட்டு சிரிப்பவர்களுக்கே
நறுக் என்று உச்சந்தலையில் கொட்டப்படும்
கொசு வலை மட்டும்
இல்லையென்றால்
பசு வாலை ஆட்டிய
கதை தான் இரவினிலே!
தும்மல் வந்த பிற்பாடு
தூசி தட்ட நினைப்பது..
துன்பம் வந்த பின்னே
துலாபாரம் கொடுக்க
நினைத்தாற் போல்..
மனதுக்கு பிடிக்காதவற்றை
கண்டு கொண்டு பின் கண்டபடி
விமர்சிப்பதை விட கண்டும்
காணாமல் இருக்க பழகி கொண்டால்
யாருக்கும் எந்த கண்டமும் இல்லை!
இதி மஞ்சா?? என்று ஒரு
பீர்க்கங்காயின் தரத்தை
பற்றி என்னிடம் ஒருவர்
தெலுங்கில் வினவ நானும்
எனது பாணியில் பதில் அளித்தேன்
.
.
.
.
பிச்சா தெரியும்
பிஞ்சா என்று!
யப்பா…
ஒரு quarter தான் பா இருக்கு
ஒரு half கூட இல்ல
நாலு full சாயுங் காலத்துக்குள்
கொண்டு வந்து என் வீடு சேர்த்தா
உனக்கு புண்ணியமாக போகும்…
இது குடிகாரியின் புலம்பல் அல்ல
மினரல் வாட்டர் கேன்காரனிடம்
ஒரு குடித்தனக்காரியின் புலம்பல்!
நியாபகம் வந்த நொடியே
அக்காரியத்தை செய்ய
சோம்பல் பட்டு நாளை
நாளை என்று தள்ளி
போடும் மனது நம்பகமற்றது!