தன் கைவரிசையை பிறன் மனைகளில்
காட்டி விலை மதிப்புள்ள பொருட்களை
கவர்ந்து செல்பவன் கள்ளன்..
தன் கைவரிசையை விலை மதிப்புள்ள
பொருட்களில் காட்டி பிறர் மனம்
கவர்ந்து செல்பவன் கொல்லன்!
எட்டி நின்று விட்டால்
எட்டி விட கூடியவை கூட
எட்டாது போய் விட கூடும்!
தான் தேடிய பொருள்
தன் கண்ணெதிரே
இருந்த போதும்
கண்டெடுக்க தெரியாமல்
கண்ணு மண்ணு தெரியாது
தேடி அலைந்து திரிவர்
தன் துணைவி அதை
கையிலெடுத்து
கொடுக்கும் வரை…..
தன் இத்தகைய குண நலன்
தெரிந்து தான் கணவன்
உஷாராக தன் மனைவியை
என் கண்ணே என்று
அவ்வப்பொழுது விளிக்கின்றனரோ!
நான் சொல்வதற்கு எல்லாம்
என் கணவர் அதை ஆமோதிக்கும்
விதமாய் பலமாய் தலை ஆட்டுவார்…
பெருமை பட்டுக்க வேண்டியது தான
என்று நீங்கள் சொல்வது காதில் விழுகிறது
இருந்தும் பொரும தான் தோணுது
பின்னே நான் ஒரு விஷயத்தை ஆரம்பித்து
சொல்லி முடிப்பதற்குள்ளாகவே அவசர அவசரமாய்
தலையை ஆட்டிவிட்டு தன் வேலையில்
மூழ்கி விட்டால் பொருமாமல் என்ன செய்வது!
நமக்காக யாரு எவரு எவை
காத்து கிடக்குதோ இல்லையோ
நாமே நம் கையால் ஆரம்பித்து
விட்டு பாதியிலே விட்டு சென்ற
வேலைகள் அத்தனையும் நம்
வருகைக்காக நிச்சயமாக வழி
மேல் விழி வைத்து காத்து கிடக்கும் !
6:18 முப இல் ஒக்ரோபர் 14, 2014
—–
தன் கைவரிசையை பிறன் மனைகளில்
காட்டி விலை மதிப்புள்ள பொருட்களை
கவர்ந்து செல்பவன் கள்ளன்..
தன் கைவரிசையை விலை மதிப்புள்ள
பொருட்களில் காட்டி பிறர் மனம்
கவர்ந்து செல்பவன் கொல்லன்!
—
கொன்னுட்டீங்க போங்க!
4:06 முப இல் ஒக்ரோபர் 15, 2014
நன்றி நன்றி பாண்டியன் சார் 🙂 உங்கள் பின்னூட்டம் எனக்கு ஊக்கம் அளிக்கிறது 🙂
8:58 முப இல் ஒக்ரோபர் 14, 2014
ஆழ்ந்த கருத்துக்கள் அருமையான கவிதை பாராட்டுக்கள்
4:05 முப இல் ஒக்ரோபர் 15, 2014
உங்கள் வருகைக்கும் கருத்துரைக்கும் மிக்க நன்றி விஜிகுமாரி மேடம் 🙂
5:41 முப இல் ஒக்ரோபர் 15, 2014
எட்டி நின்று விட்டால் எட்டி விடக்கூடியவை கூட எட்டாது போய்விடும். ஸரியாகச் சொன்னாய். எல்லாமே இப்டிதான். அன்புடன்
4:15 முப இல் ஒக்ரோபர் 17, 2014
உங்கள் அன்புக்கும் உங்கள் வருகைக்கும் உங்கள் கருத்துரைக்கும் மிக்க நன்றி காமாட்சி அம்மா 🙂
5:01 பிப இல் ஒக்ரோபர் 18, 2014
கள்வன், கொல்லன் ஒப்பீடு அசத்தல்.கணவன் மனைவியை கண்ணே என்று ஏன் அழைக்கிறார் என்று புரியவைத்து விட்டீர்கள்.
உங்களைப் போல் காதிலேயே வாங்காமல் நான் சொல்வதை எல்லாம் சரி என்று சொல்பவரைப் பற்றி நானும் பொருமுவது உண்டு. அது எங்கும் நடப்பது என்பது திருப்தியளிக்கிறது. நம் வேலைகள் நமக்காக வழி மேல் விழி வைத்துக் காத்துக் கிடப்பது நல்ல சிந்தனை.
10:21 முப இல் ஒக்ரோபர் 21, 2014
உங்கள் வருகைக்கும் கருத்துரைக்கும் மிக்க நன்றி ராஜி மேடம்!
2:43 பிப இல் மார்ச் 14, 2015
ஹிஹி தலைய ஆட்டுறது நல்லா இருக்கு, அப்பாவும் அம்மா எதாவது சொன்னா, சரி சரி எண்டு சொல்லிட்டு போயிருவாரு, அவ்வளவு பயம் ஹிஹி