எப்படி பேக்கில் குறிப்பிடப்பட்ட தேதி முடிந்தவுடன் அதனுள் இருக்கும் பொருட்கள் காலாவதி ஆகி விடுகின்றதோ அது போல் 2005 வருடத்துக்கு முன்னே அச்சடிக்கப்பட்ட ரூபாய் நோட்டுக்கள் மார்ச் 31 தேதிக்கு பிறகு செல்லாது மேலும் வருடமே அச்சடிக்கப்படாத ரூபாய் நோட்டுக்களும் சேர்ந்தே காலாவதியாகின்றன…. விரைந்து காலி செய்து விடுவது நலம்!
அணிலின் முதுகில் இராமர் இட்ட மூன்று கோடுகள் போல இந்த பூச்சியின் முதுகில் ராணி காமிக்ஸ் மாயாவி முத்திரை பதித்திருப்பாரோ டவுட்…
கணவனை கண் கண்ட தெய்வமாய் மதிக்கும் எந்த ஒரு மனைவியின் கணவரே.. நீங்கள் உங்களை அலாதீனாக நினைத்து கொண்டாலும் தவறில்லை.. உங்கள் மனைவியை ஜாஸ்மின் ஆக கூட நினைக்க வேண்டும் என்ற அவசியம் எதுவும் இல்லை… ஆனால் விளக்கில் அடைபட்டு கூப்பிட்ட குரலுக்கு ஓடி வரும் பூதமாய் உங்கள் மனைவியை நடத்தாமல் இருக்கலாமே!!
இருட்டில் நம் கண்ணுக்கு புலப்படும் பொருட்கள் நம் அப்போதைய மனநிலையையும் நம் கற்பனை திறனையும் பிரதிபலிப்பவை!
இதுக்கு ஒரு சாக்கு பை வாங்குவது எவ்வளவோ தேவலை.. Lotte Choco Pie!
‘ஒளிந்திருந்து இரு விழிகள் அவளை நோட்டமிட்டன’
என்ற வரிகள் நாம் படிக்கும் போது
கொடுக்கும் சுவாரசியத்தை விட
நாம் படிக்கும் புத்தகத்தை எப்படியாவது
எட்டி பார்த்து ஓசியில் படித்த விட துடிக்கும்
பக்கத்து இருக்கைகாரரின் அலையும் விழிகள்
மிக சுவாரசியமானவை!!
ஹலோ.. விஷ்ணு லேதா?
லேது.. மஹாலக்ஷ்மி உந்தி..
But இதி வைகுண்டம் லேது..
??
Wrong Number!
தவறு தம் பக்கம் என்று
முழுமையாய் அறிந்த
பின்னரும் கூட பிறரை
முந்தி குரலை உயர்த்தி
தப்பித்து கொள்ளும்
தந்திரம் மானிடர்களுக்கு
மட்டுமே உரித்தானது!
பொய் என்று தெரிந்தும்
நம்மை நாமே தெரிந்தே
ஏமாற்றி கொண்டு நன்மை
அடையும் ஒரு விஷயம்
கடிகாரத்தை 15 நிமிடம்
வேகமாக ஓட வைப்பது!
வர மிளகாயை வெறுமனே
வாணலியில் வறட்டும் போது
வரட்டு இருமல் வரவில்லை
என்றால் தான் ஆச்சரியம்!!
நிரம்பி வழியும் என்
கிட்சன் சிங்க் கை பார்க்கும்
பொழுதெல்லாம் ஒரு ஐயம்
தவறாது வந்து போகும்
.
.
.
.
நான் நாலு பேருக்கு
சமையல் செய்கிறேனா
இல்லை நாற்பது பேருக்கா!!
அரைஆண்டு தேர்வை
வெற்றிகரமாக முடித்து
விட்டு 99.75 விழுக்காடு
மதிப்பெண்கள் பெற்றிருப்பதை
ஆசையோடு பகிர்ந்து கொண்ட
என் பையனை உச்சி முகர்ந்து
பாராட்டி விட்டு கேட்டேன்..
‘அப்போ உன் நண்பன் பார்தூ எவ்வளவு?’
நொள்ள புத்தி அம்மா
வீட்டுக்கு வருகை தந்த
விருந்தினர் 10 நாள் தங்கி
விட்டு கிளம்பி சென்று விட்டதை
மனது தெளிவாக அறிந்தாலும்
இரண்டொரு நாட்களுக்கு
நம் கைகளுக்கு தெரிவதில்லை
உலை கொதிக்கும் போது
மிகையாகவே அரிசியை களைந்து
போட்டு விடுகின்றது!!
தர்மசங்கடமான சூழ்நிலைகளில் ஒன்று
கடைகுட்டி பையனோடு தெருவில்
நடந்து செல்லும் போது யாரேனும் ஒருவர்
சகட்டு மேனிக்கு ஹச் ஹச்.. என்று
தும்மி விட்டால் திருப்பி அதை அப்படியே
இமிடேட் செய்யும் என் பையனை முறைத்து
பார்த்து கண்டிப்பதை விட்டு விட்டு
நானும் களுக் என்று ஆரம்பித்து
கெக்கே பிக்கே என்று சிரித்துவிடும் போது!!
நம் வாழ்க்கையோ வாழைக்காயோ
யாரொருவர் வாயிலும்
பச்சையாய் விழாதவரையில் நலம்..
விழுந்து விட்டால் நீங்காத கறை
ஏற்பட்டு விடுவது நிச்சயம்!!
எல்லோரும் ஒன்று கூடி குழையட்டும்
அன்பு நெய்யாய் உருகி ஓடட்டும்
உள்ளத்தில் மகிழ்ச்சி வெல்லமாய் கல்கண்டாய் இனிக்கட்டும்
முந்திரி திராட்சையாய் குதூகூலம் நிறையட்டும்
அழகாய் பொங்கட்டும் தங்கள் வீட்டு பொங்கல்
ஆலமரத்தடி இல்ல தான்
தோளில் வெள்ளை துண்டு போடல தான்
வாயில் வெத்தலையை குதப்பி குதப்பி
புளிச் புளிச் என்று துப்பலை தான்
ஆனாலும் என் பசங்க வீட்டில் இருக்கும்
விடுமுறை தினங்களில் காலை எழுந்ததில் இருந்து
இரவு கண் அயரும் வரை 1008 பஞ்சாயத்து
செய்து தீர்ப்பு சொல்லிட்டு தானுங்க இருக்கேன்!!
டேய் ரிமோட் எங்கடா வச்சு தொலைச்ச..
ஒரு கால் பண்ணி பாருமா..
???
ஒரு ஆறு ஏழு மணி நேரம்
தூங்கி எழுவதற்குள் திரும்பவும்
புறப்பட்ட இடத்திலேயே வந்து
நிற்பது போல் ஒரு பிரமை..
வீட்டு வேலைகள்!!
நாக்கில தேன் தடவி
பேசறதெல்லாம் பெரிய
விஷயமே இல்ல..
அந்த தேன் ஆனது
எறும்பு கூட விரும்பாத
கலப்படம் சிறிதும் இல்லாத
உண்மையானதாய் இருப்பது
தான் மிக பெரியதொரு விஷயம்!
கிளி பொம்மை விற்பவனிடம்
பேரம் பேசி வாங்குவதற்கு
முன் ‘சொத்தை’ எதுவும் இல்லையே
என்று கேட்டறிந்து தன் ஐயம்
முழுதும் தீர்ந்த பின்னரே
அதை வாங்கி தன் கூடையில்
போட்டு கொண்டாள் காய்கறிகாரி!!
பசி தாங்க மாட்டாமல்
வீல் என்று அலறிய
குழந்தையை கண்டு
மனம் பொறுக்கமாட்டாமல்
அப்பொழுது தான் வடித்த
சோற்றை ஒரு கரண்டி
எடுத்து பருப்பும் நெய்யும்
விட்டு பிசைய முற்படும்
போது சூடு தாங்கமாட்டாமல்
ஆ வென்று அலறிய அம்மாவை
பார்த்து அழுகை நிறுத்தி
விட்டு புரியாமல் வேடிக்கை
பார்த்தது குழந்தை!!
ஒரே சத்தம் உள்ள இரு வார்த்தைகள் ஆனால் அர்த்தமும் எழுத்துக்களும் வெவ்வேறு என்றால் அது ஹோமோபோனு.. வாங்க நினைக்கும் பழைய வீடு பற்றி இருவர் இரு விதமாக பேசினால் சத்தம் போடாம வாங்கி போட்டு ஒரு ஹோமம் பண்ணு…
இன்று ஜுஸ்ட் மிஸ்ஸு இல்லையேல் முன் நடந்து சென்ற திருவாளர் வாயில் இருந்து சுழன்று வந்த எச்சில் என் மீது பட்டு நான் மூடு அவுட் ஆகி இருக்ககூடும்!!
ஒரு வாய் சப்பாத்திய எவ்வளவு நேரம் வாயிலேயே வெச்சிட்டு இருப்ப அது என்ன பபிள்கம்மா.. முழுங்குடா.. கரெக்டா சொன்னீங்கம்மா பபிள்கம் மாதிரி தான் இருக்கு தூ..நு துப்பிடட்டா.. ??
பளீர் என்று அடித்த அடியில் நேற்று தலையெல்லாம் ஒரே பெயின் இன்று தொண்டையெல்லம் ஒரே பெயின் சரியா தான்யா வெச்சிருக்காங்க பெயர் ‘பெய்ன்’ட் என்று!!
இன்று என் வீட்டுக்கு வரும் எந்த ஒரு போன் காலை நான் எடுத்து பேசும் போது கண்டிப்பாக போன் செய்தவர் கேட்பார் ‘ தம்பி அம்மா வீட்டில் இருந்தால் கொஞ்சம் குடுப்பா..’ தொண்டை கரகரப்பு!!
முக்கியமான ஒன்று தொலைந்து போனது என்பதே பெரும் வேதனை.. அதிலும் வாழ்வின் ஆதாரமாகிய ஆதார் கார்ட் தொலைந்து போய் விட்டது என்பதை அறியும் நொடி எவ்வளவு கொடுமையாக இருக்கும். அன்று இரவு எல்லாம் நல்லா தான் போச்சு. குழந்தைகள் இரவு சாப்பிட்டு விட்டு உறங்க சென்றனர். அதன் பின்னர் தான் கணவர் அலுவல் முடிந்து வீடு திரும்பினார். அதிசயமாய் ஒரு பெர்க்கு(Perk) சாக்லேட்டை நீட்டினார், யாரோ குடுத்தார்களாம்.. அது எனக்கு தெரியாதா மனதினுள் சொல்லி கொண்டேன். அந்த நொடி சத்தியமாய் நினைக்கவில்லை ஒரு பெர்க்கு குடுத்து என்னை கிறுக்கு ஆக்க போகிறார் என்று!
கணவர் இரவு சாப்பிட்டு முடித்த பின்னர் , இன்று காலை கேஸ் புக் செய்ய சொன்னேனே முடிந்ததா? என்று வினவினேன். அங்கே தான் ஆரம்பித்தது சனி! நம்ம ஆதார் கார்டும் கேஸும் இன்னும் லிங்க் செய்ய படாமல் இருகின்றதாம். நாளை காலை எடுத்து குடு என்று சொல்லி விட்டு அவர் வேலையில் மூழ்கினார். என்னவோ அந்த நொடியில் ஒரு திடீர் எண்ணம், ஆதார் கார்ட் உள்ளே இருக்குதா? சந்தேகத்தை நிவர்த்தி செய்ய உடனே எடுத்து பார்த்தேன். நான் பயந்த மாதிரியே எங்கள் நால்வரின் கார்டும் இருந்த சுவடே தெரியவில்லை. பெருமாளே! இது என்ன சோதனை என்று மூளையை கசக்கி பார்த்து யோசித்ததில் ஒன்று தெளிவாயிற்று, போன மாதம் லேமினேட் செய்து வருகிறேன் என்று கணவர் கேட்டு வாங்கி சென்றது நியாபகத்தில் வந்தது.
ஏற்கனவே இன்று அலுவலகத்தில் ஏதோ பிரச்சனை போல யாரிடமோ போனில் உரக்க கத்தி கொண்டிருந்தார். கார்ட் தொலைந்ததை பற்றி சொல்லவா வேண்டாமா.. ஏற்கனவே எரியும் கொள்ளியில் எண்ணெய் ஊற்றினால் போல், தொலைஞ்சேன்.. பயத்தில் என்னென்னவோ செய்தது.. அவர் திட்டுவார் என்ற பயமெல்லாம் இல்லை, அவருடைய டென்ஷனை கூட கொஞ்சம் ஏத்தி விடவா இல்லை காலையில் சொல்லலாமா என்று ஒரு குழப்பம். ஆன முழு பூசணிக்காயை எவ்வ்ளவு நேரம் சோற்றில் மறைத்து வைக்க முடியும்? ஆனது ஆகட்டும் இன்றே சொல்லி விடுவது என்று தீர்மானித்து சொல்லியும் விட்டேன்.
நீ எங்கேயாவது வைத்து தொலைச்சுடீயா எரிச்சலுடன் சொல்லி விட்டு பின் யோசித்து விட்டு சொன்னார், லேமினேசன் செய்ய எடுத்து போய் விட்டு திரும்ப வந்து குடுக்கவில்லையோ? அப்பாடி நல்ல வேளை இதாவது நியாபகம் வந்ததே என் மனது பெரு மூச்சு விட்டது. யாருக்கெல்லாமோ போன் அடித்து தெலுங்கில் வினவினார். ஒன்றும் பிரயோஜனபடவில்லை! போனை வைத்து விட்டு சொன்னார், ‘நீ கொஞ்சம் ஃபாலோ அப் செய்திருக்கனும்’. என் கணவர் எப்பொழுதுமே எதையும் மறந்ததிலை. அவர் Mr.Perfect இது நாள் வரை இந்த மாதிரி ஒரு பிரச்சனையை எதிர் கொண்டதே இல்லை. எப்பவும் வாங்கி கொண்டு போய் விட்டு பத்திரமாய் திருப்பி கொண்டு வந்து குடுப்பார். நேரம் இப்படி விழி பிதுங்க வைக்கிறது.
எனக்காவது சிறிது நியாபக மறதி உண்டு. என் போனில் மட்டும் ஒரு 1008 ரிமைண்டர் போட்டு வைப்பதுண்டு. ஏதோ இந்த முறை தவறி விட்டது. இருந்தாலும் இது என் தனிப்பட்ட தவறு இல்லை.. முழுதாய் அவருடைய தவறும் இல்லை.. எங்கேயோ ஏதோ ஒரு தவறு நிகழ்ந்திருக்கிறது. அதை ஏங்கே போய் கண்டு பிடிப்பது. கணவருக்கு இருப்பு கொள்ளவில்லை வீட்டில் இருந்த அத்தனை ஷெல்ஃபையும் நோண்டி கொண்டிருந்தார். இரவு 11 மணி எனக்கு தூக்கம் கண்ணை சுழற்றி கொண்டு வந்தது. ஆதார் கார்டாவது ஒரு மண்ணாவது போனால் போகட்டும் என் போட்டோ அதில் நல்லாவே இல்லை என்று போய் படுத்தது தான் தெரியும், அசந்து தூங்கி போனேன். அதிகாலை 4:15 மணிக்கு எல்லாம் முழிப்பு தட்டி விட்டது. இங்கேயும் அங்கேயும் ஆதார் கார்ட் பறந்து செல்வது போல் ஒரு பிரமை. என்னதான் இரவு படுத்தவுடன் தூங்கி விட்டாலும் உள்மனதில் கார்ட் தொலைந்து போன துக்கம் நம் நிம்மதியை குலைத்து கொண்டே தான் இருக்கும் போல!
ஏதோ அலுவலக வேலை காரணமாக காலை வெகு சீக்கிரமே கிளம்பி விட்டார் கணவர். சிறிது ஆறுதலாக இருந்தது எனக்கு, இல்லையேல் போகும் போதும் வரும் போதும் என்னை முறைத்து கொண்டே இருப்பார். வழக்கம் போலவே காலையில் என் வேலைகளை செய்ய ஆரம்பித்தேன். ஒரு 10 மணிக்கு போன் செய்தார் கணவர். லேமினஷன் செய்பவரிடம் பேசினேன், அப்படி யாரும் குடுக்கவே இல்லை என்று சொல்கிறார் என்று என் மனதில் கவலை விதைகளை தூவினார். என்னை இன்னொரு முறை எல்லா இடமும் செக் செய்து விட்டு போன் பண்ண சொன்னர். ஒரு பத்து நிமிஷம் நிம்மதியாக இருக்க விட மாட்டரே என்று பிதற்றி கொண்டே இல்லாத ஒன்றை தேட ஆரம்பித்தேன். கார்ட் தொலைந்து போன புண்ணியத்தில் வீட்டின் சகல ஷெல்ஃபும் பளிச் என்று ஆனது.
இப்போ என்ன செய்வது ஒன்றும் புரியவில்லை, நேரே போய் கூகிள் சாமியாரின் காலில் போய் விழுந்தேன்! சாமி என்னை காப்பாற்றுங்கள்.. What to do when Aadhaar card gets lost? என்று வினவினேன். நாலைந்து வழிகளை காட்டினார். அதன் வழியே போனதும் நாங்கள் ஆதார் கார்ட் ரெஜிஸ்டர் பண்ணிய நாள், நேரம், Acknowledgement copy நம்பர் போன்ற விவரங்களை கேட்டனர். நல்ல வேளை அவை எல்லாமே பத்திரமாய் என்னிடம் இருந்தன. இவை மட்டுமா 7 வருடம் முந்திய பேப்பர் பில், இந்த பில் அந்த பில், அது இது என்று பெரிய குப்பையே வைத்திருக்கிறேன். எல்லாம் என் கணவரின் குணம் அறிந்து தான்! ஒரு வழியாய் கேட்ட விவரங்களை குடுத்தவுடம் நம் மொபைல் நம்பரை கேட்கின்றனர். பின்னர் நம் மொபைலுக்கு ஒரு one time passwordஅனுப்புகிண்றனர். அந்த பாஸ்வோர்டை குடுத்தவுடன் நமக்கு நம் தொலைந்து போன ஆதார் கார்ட் லட்டு மாதிரி டௌன்லோட் ஆகி விடுகின்றது.
http://aadharcarduid.com/aadhaar-card-lost
இந்த லிங்க் கை சொடுக்கியவுடன் வரும் பக்கத்தில்
Download duplicate AADHAAR card copy online என்பதை சொடுக்கவும்
சொடுக்கியவுடன் கீழே குடுக்கப்பட்ட லிங்க் பக்கம் திறக்கும் http://aadharcarduid.com/download-duplicate-copy-online அதிலே
e-AADHAAR Portal என்பதை சொடுக்கவும்
சொடுக்கியவுடன் கீழே குடுக்கப்பட்ட லிங்க் பக்கம் திறக்கும் https://eaadhaar.uidai.gov.in/
அதிலே நீங்கள் கேட்கப்படும் கேள்விகளுக்கு பதில் அளித்தவுடன் உங்கள் ஆதார் கார்டை பதிவிறக்கம் செய்து கொள்ளலாம்
மனது சிறிது லேசானது. தெளிந்த மனத்துடன் பெர்க்கை ஒரு கடி கடித்தேன்!
ஆட்டோவில் தனித்து பயணம் செய்யும் போது கூட வராத பயம்.. ஆட்டோவின் சீட் தனித்து பிய்த்து கொண்டு முன்னே வரும் போது முந்தி அடித்து கொண்டு வந்து விடுகிறது!!
சன் லைட் பட்டவுடன் ஆக்டிவேட் கூட ஆக வேண்டாம் ஒரு லைட் எரிய கூடாதா பேனா மேல ஒரு க்ரிஸ்டல் வெச்சுட்டு விலை 80 ரூபாயாம் இந்த அநியாயத்தை தட்டி கேக்க யாருமே இல்லையா க்ரிஷ் பேனா!!
மனம் நொந்து நூடுல்ஸ் ஆகும் தருணம்.. மிக சுவாரசியமாக எதேனும் புக் படித்து கொண்டே ஸ்னேக்ஸ் உள்ளே தள்ளும் போது திடீரென்று கைகள் தடவி பார்த்து உணர்த்தும் தட்டு காலி என்பதை!!
ப்பா.. என்னா மூளை என்னா தைரியம் என்னா தன்னம்பிக்கை எவ்வளவு துன்புறுத்தினாலும் இந்த கருமாந்திரம் புடிச்ச சரவணபவன் டீயை குடித்து முடிக்கும் வரை இவள் கவனம் சிதறாது என்று மணிகட்டை குறி பார்த்து ஸ்ட் ராங்கா ஒரு கப் இரத்தம் குடிக்கும் சென்னை சென்ட் ரல் ஸ்டேஷன் கொசு!!
வடகம் மீது திடீர் ஆசை வந்த பையனுக்காக எண்ணெய்யை அடுப்பில் வைத்து விட்டு காத்து நின்ற போது இன்னுமா பொறிக்கவில்லை என்று பொறுமை சிறிதும் இன்றி வடகத்தை எண்ணெயில் கவிழ்க்க வந்தவனை கண்டு ஆக்கப் பொறுத்தவருக்கு இப்படி ஒரு மைந்தனா என்று மனம் நொந்தவாறே அவனை தடுத்து நிறுத்தி விட்டு சொன்னேன் பொறு இன்னும் காயவில்லை… என்னம்மா சொல்றீங்க வடகத்தை தொட்டு பாருங்க இதுக்கு மேலாகவா காய வேண்டியிருக்குது… என் அறிவு கொழுந்தே என் அவசர குடுக்கையே நான் சொல்ல வந்தது இன்னும் எண்ணெய் காயவில்லை என்று!!
அம்மா சீக்கிரம் வாங்க பாருங்க புதுசா ஒரு பென் இதுல கேமரா இருக்கு வீடியோ ரெகார்ட் பண்ணலாம் 16ஜீபீ Extendable Memory எழுத வேற செய்யுமாம் உண்மையான விலை ரூ.8000 ஆனா இங்க ஆர்டர் செஞ்சா வெறும் ரூ.1990 மட்டும்தானாம் சூப்பரா இருக்குல்ல ப்ளீஸ் வாங்கி தர்றீங்களா.. டேய் இதெல்லாம் சுத்த வேஸ்ட் போங்கமா நீங்க தான் சுத்த வேஸ்ட் ஓஹோ.. அப்போ நான் அந்த பென்னை ஆர்டர் பண்ணி வாங்கி தருகிறேன் ஆனா ஒரு கண்டிஷன் இனி இந்த பெண் உனக்கு எந்த விதத்திலும் உதவாது சம்மதமா???