எண்ணங்கள் பலவிதம்

என் எண்ணங்களின் நீருற்று

சில எண்ணங்கள் -33

8 பின்னூட்டங்கள்

வஞ்ச புகழ்ச்சி யாவரும் அறிவர்..
வஞ்ச அக்கறை யாரும் அறிந்ததுண்டோ?
அதிகாலை நேரம் துகில் கலைய மறுத்த
பையனை அரும்பாடுபட்டு எழுப்பி
பின் ஒருவாறு குளியலறை அனுப்பி
அவன் குளித்து முடியும் வரை பொறுத்திருந்து
பின் அவனுடைய ஈரத் தலையை துடைத்து
விடுகிரேன் என்ற பெயரில் தலையை 
துண்டால் நற நற.. வென துடைத்து
அவன் மூளைக்கு செல்லும் ரத்த 
ஓட்டத்தை அதிகரித்து புத்துணர்ச்சி
அளித்ததோடு மட்டுமல்லாமல் என்னுள்ளே
பொருமி கொண்டிருக்கும் கோபமும்
கத்தி தீர்க்காமல் சாந்தமாய் வெளியேறவும்
வழி வகுக்கிறது!!

Image

கணவர் செய்யும்
மன்னிக்கவே முடியாத
குற்றங்களில் ஒன்று..
.
.
.
சீப்பா கிடைத்தது
என்ற ஒரே ஒரு 
காரணத்துக்காக
2 கிலோ மூன்று கிலோ
ஏதேனும் ஒரு காய்கறியை
தன் சிறிய குடும்பத்துக்காக
வாங்கி வந்து குவிப்பது!!

Image

காதல் பொங்கி வழிந்தது!!
.
.
.
.
.
குழம்பு கூட்டு பொரியல்
பக்காவா ரெடி பண்ணிட்டு
சோறு பொங்க நான் மறந்து
விட்ட போதிலும் ஆங்கார
பசியிலும் பத்து நிமிடம்
கோபம் பொங்காமல் பொறுமை
காத்த அன்பு கணவர் மேல் 
மேல் இருந்து படிக்கவும்..

Image

 

நல்ல உச்சி வெயிலில்
கதவை திறந்து பார்த்து
விட்டு யாரு இங்க வெட்டியா
லைட்ட போட்டு வெச்சிருக்கா
என்று அவசர அவசரமா
ப்ரிஜ் உள்ளே அதை அணைப்பதற்க்கு
ஸ்விட்சை தேடுனீங்க என்றால்
பெருமை பட்டு கொள்ளுங்கள்
நீங்க தான் உண்மையான
மின் சிக்கனவாதி!!

Image

8 thoughts on “சில எண்ணங்கள் -33

  1. ரசிக்கிறது புரிகிறது…

    வாழ்த்துக்கள்….

  2. வணக்கம்
    சகோதரி

    தங்களின் எண்ணம் போல எழுதிய எண்ணங்களும் சிறப்பு..வாழ்த்துக்கள்

    -நன்றி-
    -அன்புடன்-
    -ரூபன்-

  3. கணவர் மேல் பொங்கி வழியும் உங்கள் காதல் புரிகிறது. பையன் தலையை துடிப்பதன் ரகசியமும் புரிந்தது.மின் சிக்கனத்திற்கும் வழி காட்டியிருக்கிறீர்கள்.
    அருமையான எண்ணங்கள் மகா.

  4. சிறந்த கருத்துப் பகிர்வு

மறுமொழியொன்றை இடுங்கள்

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  மாற்று )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  மாற்று )

Connecting to %s