கதவிடுக்கில் நடந்த
கசமுசாவில் இப்போ
ஆறு மாசம்….
.
.
.
.
.
போல் காட்சியளிக்கிறது
நைந்து வீங்கி போன
என் நடு விரல்!!
ஏண்ணா!
என் கரியமிலத்தை வாங்கரேள்..
இப்படி தான் மரம் தன் உசுரை வாங்கும் கணவரிடம் பொறுமை இழந்து கேட்குமோ??
மருதாணியை காலில்
இடுவதை விட
மறந்து ஆணியை
கால் அடியில் இடும்
பொழுது நொடியில்
சிவக்கும் கால்கள்!
சாய்ந்து சாய்ந்து நான்
சாயுங்கால சூரியனை
ரசிக்க முனையும்
ஒவ்வொரு முறையும்
என் சாயலை ஒத்த
சாயா பின் தோன்றி
என்னை முறைப்பாள்!!
ஹெலெனின் ஒரு ஓர பார்வைக்கே
தன் நிலை மறந்து
உடல் சிலிர்த்து மயங்கி
பின் அவளை காண
கிடைக்காது அழுது
இரவெல்லாம் புலம்பி
காலையில் விடிய மறுத்து
முகம் கறுத்து
சலனம் சிறிதுமின்றி
பார்வை நிலைகுத்தி
ஏனோ தானோ என்று
விடிந்திருக்கிறது குண்டூர்!!
இரவிலே ஏற்பட்ட திடீர் பவர்கட்டால்
இருட்டிய சமையலறை உண்டாக்கிய
திகிலில் பகீரென்ற மனது சற்றே
நிதானித்து தன் நிலைக்கு வருவதற்குள்
அடுப்பிலே வெந்து கொண்டிருந்த
திருப்பி போட மறந்த தோசை
கல் எது தோசை எது என்று பிரிக்க
முடியாத வண்ணம் இருட்டிவிட்டிருந்தது!!
ஒரு வாரம் பத்து நாளைக்குள்ள
எந்த க்ரீமும் உபயோகிக்காமலேயே
சிகப்பழகை பெற வேண்டுமா??
.
.
.
.
.
அடுத்த ஜென்மத்தில் மிளகாயாய் பிறக்க
இறைவனிடத்தில் இடைவிடாது
பிராத்தனை செய்யுங்கள்!!
9:51 முப இல் நவம்பர் 23, 2013
வணக்கம்
சகோதரி
மருதாணியை காலில்
இடுவதை விட
மறந்து ஆணியை
கால் அடியில் இடும்
பொழுது நொடியில்
சிவக்கும் கால்கள்!…
என்ன வரிகள் உவமித்த உவமை மிக அழகு… வாழ்த்துக்கள்
-நன்றி-
-அன்புடன்-
-ரூபன்-
10:52 முப இல் நவம்பர் 23, 2013
உங்கள் மனமார்ந்த பாராட்டுக்கு என் பணிவான நன்றிகள் சகோதரா 🙂
2:18 பிப இல் நவம்பர் 26, 2013
கவிதை அருமையிலும் அருமை
4:28 முப இல் நவம்பர் 27, 2013
என் கவிதையை ரசித்து பாராட்டியமைக்கு மிக்க நன்றி சார் 🙂
1:48 பிப இல் திசெம்பர் 16, 2013
🙂
4:13 பிப இல் நவம்பர் 27, 2013
சிறந்த பதிவு தொடருங்கள்
4:27 முப இல் நவம்பர் 29, 2013
தொடர்ந்து வருகை தந்து எனக்கு உற்சாகம் கொடுப்பதற்க்கு என்னுடைய மனமார்ந்த நன்றிகள் சார் 🙂
7:38 பிப இல் நவம்பர் 27, 2013
‘முதலாவது சரியான சிரிப்பு. அடுத்தது…இது
”’…மருதாணியை காலில்
இடுவதை விட
மறந்து ஆணியை
கால் அடியில் இடும்
பொழுது நொடியில்
சிவக்கும் கால்கள்!…””
Eniya vaalththu….
Vetha.Elanagthilakam.
4:25 முப இல் நவம்பர் 29, 2013
மிக்க நன்றி சகோதரி! நீங்கள் இதை படித்து சிரித்து மகிழ்ந்தீர்கள் என்பதை விட பெரிய இன்பம் எனக்கு வேறு ஏது 🙂
9:49 முப இல் நவம்பர் 28, 2013
அருமை – கசமுசாவும், மருதானியும்…
4:23 முப இல் நவம்பர் 29, 2013
உங்கள் வருகைக்கும் உங்கள் இனிய கருத்துக்கும் எனது மனமார்ந்த நன்றிகள் 🙂
10:39 முப இல் திசெம்பர் 9, 2013
“..கதவிடுக்கில் நடந்த
கசமுசாவில் இப்போ
ஆறு மாசம்……” அருமை
4:39 முப இல் திசெம்பர் 10, 2013
வாங்க சார்!
என் நடுவிரல் நசுங்கிய வலி தெரியாமல் இருக்க எனக்கு நானே எழுதி எடுத்து கொண்ட வலி நிவாரணி 😀 வருகைக்கும் கருத்துக்கும் நன்றி சார்!
2:48 பிப இல் மார்ச் 14, 2015
எப்படி அக்கா இப்படியெல்லாம்??? ஏன் இப்ப இப்படியெல்லாம் போஸ்ட் போடுறீங்க இல்ல?? why why and why???