மின் தடையால்
மிக்ஸி ஓடவில்லை
கிரைண்டர் ஓடவில்லை
ப்ரிஜ் ஓடவில்லை
வாசிங் மிஷின் ஓடவில்லை
மோட்டர் ஓடவில்லை
டீவீ ஓடவில்லை
ஆக மொத்தம் எனக்கு
கையும் ஓடவில்லை
காலும் ஓடவில்லை!
என்னது பூரிக்கு தொட்டுக்க கிழங்கா??
என்ன கொடுமை அம்மா இது!
.
.
.
.
புரட்டாசியில் புறப்படும்
புதல்வனின் புலம்பல்கள்!!
ஒரு ஊருல ஒரு ராஜா
இருந்தானாம்…
அவர் ஏழு கடல் தாண்டி
ஏழு மலை தாண்டி ஒரு
எலுமிச்சம்பழம் கொண்டு
வந்தாராம்….
ரெண்டு வரி கதை
சொல்வதற்குள்ளேயே
பையன் அலுத்து கொண்டான்..
பக்கத்து பெட்டி கடை பாட்டி
கிட்ட கேட்டாலே குடுத்திருக்கும்..
போங்கடா நான் கதையே சொல்லல!!
ஒன்ன ரெண்டாக்கி
ரெண்ட நாலாக்கி
நால எட்டாக்கி
ஒவ்வொன்றுக்கும்
இடையே கால் ஸ்பூன்
சீனி போட்டு தண்ணி
ஊற்றி…..
ஐய்யையோ சத்தியமா
ரெசிபி எல்லாம் இல்லை
ஒரே வாயில போட்டு
மாத்திரையை விழுங்க
சொன்னா கேக்க
மாட்டிகிரான் என் பையன்!
குக்கரின் சூடு பொறுப்பாள்
எண்ணெயில் பொரிந்து கைகளில்
வெடித்து சிதறும் கடுகின்
சூடை பொருட்படுத்த கூட மாட்டாள்
எதிர்பாராமல் கைகளில் கொட்டி
விடும் வெந்நீரை பூ வென்று ஊதி
வலி மறந்து போவாள்
மனம் பொறுக்க மாட்டாமல்
அலறுவாள் ‘அம்மா’ தன் குழந்தையின்
மேனி சுடும் போது மட்டும்!!
2:45 பிப இல் ஒக்ரோபர் 19, 2013
“மின் தடையால்…
………………………………
ஆக மொத்தம் எனக்கு
கையும் ஓடவில்லை
காலும் ஓடவில்லை!” என்பதில்
எத்தனை எத்தனை
உண்மை இருக்கு!
6:02 முப இல் ஒக்ரோபர் 21, 2013
உங்கள் வருகைக்கும் கருத்துக்கும் மிக்க நன்றி சார் 🙂
4:39 முப இல் ஒக்ரோபர் 25, 2013
சிரிக்கவும் சிந்திக்கவும் வைத்தீர்கள்
4:42 முப இல் ஒக்ரோபர் 25, 2013
மிக்க நன்றி சார்!
6:56 பிப இல் ஒக்ரோபர் 28, 2013
”..மனம் பொறுக்க மாட்டாமல்
அலறுவாள் ‘அம்மா’ தன் குழந்தையின்
மேனி சுடும் போது மட்டும்!!..
Supper!…..
Vetha.Elangathilakam.
4:13 முப இல் ஒக்ரோபர் 29, 2013
கோவை கவி சகோதரி சூப்பர் என்று கமென்ட் குடுக்க நான் கொடுத்து வைத்திருக்க வேண்டும்! வருகைக்கு நன்றி!
1:15 முப இல் திசெம்பர் 10, 2013
வணக்கம்
சகோதரி
இன்று தங்களின் தளம் வலைச்சரத்தில் அறிமுகமானதிற்கு வாழ்த்துக்கள் சென்று பார்வையிட இதோ.முகவரி
http://blogintamil.blogspot.com/2013/12/blog-post_10.html?showComment=1386637420483#c1146577820726854657
தைப்பொங்கலை முன்னிட்டு மா பெரும் கட்டுரைப்போட்டி மேலும் தகவல் .இங்கே-http://2008rupan.wordpress.com
-நன்றி-
-அன்புடன்-
-ரூபன்-
4:36 முப இல் திசெம்பர் 10, 2013
வாருங்கள் சகோதரா!
என்னை வந்து வாழ்த்தியமைக்கு நன்றி! வலைசரத்திற்கு சென்று கண்டு களித்தேன்! உங்களுக்கு என்னுடைய மனமார்ந்த நன்றிகள் 😀