இந்த தடவை எந்த ஒரு தவறும்
நிகழ்ந்து விட கூடாது என்ற
சூதானத்தோடு வீட்டை பூட்டி
விட்டு மார்கெட் செல்லும் முன் ஒரு
முறை எல்லாவற்றையும் சரி பார்த்து
கொண்டேன்..
கைபையினுள் செல்போன் இருந்தது
பர்ஸ் இருந்தது அதில்
முக்கியமாக பணமும் இருந்தது
பூமி தாய்க்கு உதவி செய்யவில்லை
என்றாலும் உபத்திரவம் செய்ய கூடாது
என்ற நோக்கில் எடுத்து வைக்கபட்ட
துணி பைகள் கூட பத்திரமாய்..
சீப்பு எதுவும் பின்னந்தலையில் சொருகி
இல்லை என்பதை கூட மறக்காமல்
சரி பார்த்து கொண்டேன்..
மூன்று நான்கு தடவை வாசற்கதவை
பூட்டி திறக்கும் வேலை இல்லை என்ற
மன நிம்மதியோடு வீட்டை பூட்டி விட்டு
சாவியை பத்திரமாய் கைபையினுள்
போட்டு வைத்தேன்…
மாடி படிகளில் சிட்டாய் பறந்த நான்
யாரும் பார்த்து விடுவதற்குள்
ஓடிய வேகத்திலேயே திரும்பவும்
வந்து எப்போதும் போல்
வீட்டை மறுபடியும் திறந்தேன்
ஜோடி மாற்றி போட்டு விட்ட
காலணிகளை கழற்றி மாற்றுவதற்காக!
குடும்பத்துகே தலைவியா
இருந்து என்ன ப்ரயோஜனம்
காலை நேரங்களில் சூடா
ஒரு கப் தேனீர் குடிப்பதற்குள்
ஒன்று ஆறி போய்விடுகிறது
இல்லை அவசரத்தில் நாக்கு பொத்து
போய் விடுகிறது!!!
இப்போதெல்லாம் காலை
நேரங்களில் எனக்கு ப்ரஷர்
செமையா எகிறிடுது
.
.
.
.
.
.
.
குக்கரில் ஒழுங்காக ப்ரஷர்
ஏறாத ஒரே காரணத்தினால்!!
இதயத்துக்கு நல்லது என்று
யாரு சொன்னாங்க…
பேக்கின் மீது அச்சடிக்கபட்ட
விலையை ஒரே ஒரு தடவை
கண் கொட்டி பார்த்தாலே நமது
இதயம் டமார் என்று வெடித்து
விடும் போலயே…
அரை லிட்டர் பேக்கின் விலையே
153 ரூபாயாம்!!!
10:12 பிப இல் ஓகஸ்ட் 23, 2013
எல்லாவற்றையும் சரிபார்த்த நீங்க கடைசியில ‘கடை லிஸ்ட்’டை மறந்திட்டீங்களோன்னு நெனச்சிட்டேன். உங்களுக்கு சாவியாவது உதவுச்சே. இங்கெல்லாம் நாம் பூட்டாமலே கதவு பூட்டிக் கொள்ளும். சாவி கையில் இல்லை என்றால் அவ்வளவுதான்.
அட, ஆமாம்! என எண்ணத் தோன்றியது தேநீர் பிரச்சினை.
நானெல்லாம் கொஞ்சம் உஷாராக்கும்.எனக்கு பிரஷர் எகிறக் கூடாதுன்னுதான் குக்கரையேத் தூக்கிப் போட்டுட்டேன்.
4:34 முப இல் ஓகஸ்ட் 26, 2013
வாருங்கள் சித்ரா மேடம்!
இந்த பதிவை படித்து ரசித்தமைக்கு என்னுடைய நன்றிகள்!!
6:01 பிப இல் மே 19, 2014
அருமை! 🙂
4:24 முப இல் ஜூன் 21, 2014
நன்றி தியானா! ரொம்ப நாளைக்கப்புரம் இன்று தான் வொர்ட்பிரஸினுள் நுழைந்திருக்கிறேன் 😀